|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, September 09, 2006

திருவோடுத் திருடர்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

திருவோடுத் திருடர்கள் என்றால் என்ன ?







திருவோட்டைத் திருடுபவர்கள் அல்ல ! மாறாக அவனுடைய திருவோட்டில் போடப்பட்டப் பிச்சைக் காசுகளைத் திருடுபவர்களையே திருவோட்டுத் திருடர்கள் என்று கூறப்படுகிறது .

அது எவ்வாறு சாத்தியமாகும் ?

திருட்டுக்களிலேயே சிரமமில்லாமல், அச்சுறுத்தல் இல்லாமல், எளிதில் அகப்பட முடியாமல் மிக சுலபமாக திருடுவதே திருவோட்டில் திருடுவதாகும், மற்ற இடங்களில் திருடுவதற்கு அதி தீவரமாக சிந்திக்க வேண்டும் இல்லையேல் திருடச்சென்ற இடத்தில் முதுகுக்கு டின்னும், காலுக்குக் காப்பும் அணிவித்து விடுவார்கள்.

திருவோட்டை தூக்கிக்கொண்டு திரியும் பிச்சைக்காரர்களில் அநேகர் கண் தெரியாதவர்களாக, கால் நடக்க முடியாதவர்களாக, வாய் பேச முடியதாவர்களான ஊணமுற்றோராய் இருப்பர்.மனிதாபிகானம் அறவே அற்றுப்போன பாவிகள் தான் ஈவிறக்கமில்லாமல் அவ்வாறான ஊணமுற்றோரிடம் மிக சுலபமாக திருடுவார்கள்,

எவ்வளவு தான் ஊனமுற்றோராக இருந்தாலும் அவர்களுக்கும் உணர்வு ஒன்று இருக்குமல்லவா ?

உடலில் ஒரு புலன் செயலிழந்திருந்தால், மற்றொரு புலன் சிறப்பாக செயல்படும் என்பது இயல்பு தன்னுடைய மற்றொரு புலனின் உதவியுடன் தனது திருவோட்டிலிருந்து திருடப்படுவதை உணர்ந்து கொண்டு கூக்குரலிட்டால் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பிடித்து நையப்புடைத்து விடுவார்கள் என்பதால் உனக்கு 10 பைசாப் போட வேண்டும் என்னிடத்தில் சில்லரை இல்லை அதனால் ஒரு ரூபாய் துட்டைப் போட்டு விட்டு மீதி 90 பைசாவை எடுத்துக் கொள்கிறேன் என அவனிடம் கூறிவிட்டு, 10 பைசா துட்டை போட்டு விட்டு 90 பைசாவை லட்டு மாதிரி தூக்கிவிடுவான் இதைத்தான் திருவோட்டுத் திருட்டு என்பதாகும்.

சமுதாயப் போராளிகள் எனும் வேஷம் தரித்த வேடதாரிகள்.

ஏழைகளுக்கு விநியோகிப்போம் என்று கூறி ஃபித்ராவை வசூல் செய்து சிறிய தொகையை அவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய தொகையை லபக்கென ஒரே மூச்சில் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டார்கள், இவர்களுடைய இந்த ஈனச்செயலுக்கும், திருnவுhடுத் திருடனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஃபித்ரா என்ற தர்மம் ஒரு படி அரிசியை பெற்றுக்கொள்ள முடியாத பரம தரித்திரருக்கு மார்க்கம் கடமையாக்கப் பட்டதாகும். சுனாமி பாதிப்புக்குள்ளானோரின் நிலமை ஃபித்ராவை பெறுபவர்களைவிட துயரமானதாகும். வீடுவாசல்களை இழந்து உற்றார் உறவினர்களை இழந்து தங்களுடைய உடல், உறுப்புகளை இழந்து தவிக்கும் திக்கற்றோராவார்கள் அப்படிப்பட்டரவநளச் சேரவேண்டிதை அமுக்கிக் கொண்டார்களே, இவர்களை நம்பி இவர்களுக்குப்பின்னால் அணிவகுக்க காத்திருப்போரே சிந்திந்துக் கொள்ளுங்கள். அதனால் தான் அண்ணன் பகிரங்க அழைப்புக்கு அவர்களை அழைக்;கிறார். த.த.ஜ காரர்கள் சுனாமி வசூலை விநியோகித்துக் கொண்டிருக்கும் வேளையில் உணர்வுக்கு ஒரு வாசகர் தமுமுக காரர்கள் சுனாமி வசூலை முறையாக விநியோகம் செய்யாமல் உள்ளனர் என்று கேள்வி அனுப்பி இருந்தார் அதற்கு அவர்கள் முறையாக விநியோகம் செய்யவில்லையெனில் அவர்களை செய்யவைப்போம் , அவர்களுடைய ஊடகத்தில் வெளியிட வைப்போம் என்று டிதிலளித்திருந்தார் பார்க்க உணர்வு இதழ் உரிமை 9, குரல் 38. இது திடீரென்று கிளப்பியப் பிரச்னை அல்ல, மாறாக த.த.ஜ அலுவலகத்திற்கும், உணர்வு இதழுக்கும் மக்களிடமிருந்து தொடர்ந்து டார்ச்சர் வந்து கொண்டிருந்ததால் அண்ணன் அவர்களே இப்பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு நேராக களம் இறங்குகிறார் .

திருவோட்டுத் திருடர்கள் தெருவோரங்களின் பிச்சைக்காரர்களிடம் திருடுவார்கள், இவர்கள் பிச்சைக்காரர்கள் பேரில் அமைப்பு ரீதியாக வசூல் செய்து திருடிக் கொண்டார்கள்.

நாம் அவர்களின் கள்ளவெப்சைட்டில் வெளியான கப்ஸாக்களுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் தீவிரமாக நம்மை இணைத்துக் கொண்டு எழுதத் தொடங்கியதிலிருந்து ஃபித்ரா வசூலையும், சுனாமி வசூலையும் தமுமுக காரர்கள் விழுங்கிக் கொண்டதை சுட்டிக்காட்டி வந்தோம்.

நமக்கு தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது இருந்துவந்த சந்தேகம் மூதறிஞர் பிஜே அவர்களுடைய சமீபத்திய பகிரங்கஅழைப்பு நம்மை வியப்பின் விளிம்பிற்கே இட்டுச்சென்றது என்றால் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸூம், தமுமுகவும்.

அவர்களாவது கோயில் பேரை வைத்து மேலைநாடுகளில் மில்லியனர், பில்லியனர்களிடம் வசூலித்து கோடிக்கணக்காக அமுக்கிக் கொண்டார்கள். இவர்கள் அரபு நாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் லேபர்களிடம் ஏழை,பரதேசியுடைய பேரைச்சொல்லி வசூல் செய்து அவர்களுக்கு சேர வேண்டியதை முறையாக சேர்க்காமல் அமுக்கிக் கொண்டார்கள் !

இவர்களை விட அவர்கள் ஒரு படித்தரம் மேலானவர்களா ? அல்லது சமமானவர்களா ?

இல்லை கண்டிப்பாக அவர்களைவிட இவர்கள் கீழானவர்களே ! காரணம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சுனாமி பேரில் வசூல் செய்ததை முறையாக விநியோகித்து விட்டதாக அவாள்களின் ஊடகங்கள் அப்பொழுதே செய்தி வெளியிட்டு விட்டது. இவாள்களின் ஊடகத்தில் தான் இதுவரை பைசா பாக்கி இல்லாத கணக்கை வெளியிட வில்லை,

தர்மத்தைக் கொடுத்தவனும், அதை பெறத் தகுதியுடையவனும் இவர்கள் அமுக்கிக் கொண்டதை அறிந்து அல்லாஹ்விடம் கையேந்தினால் இவர்கள் என்ன நிலைக்கு ஆளாகுவார்கள் ?

கொடுத்த தர்மத்தை திருப்பி எடுத்துக் கொண்டவனை நாய் கக்கியதை நக்குவதைப் போன்றதாகும் என்று நபிகள் நாயகம் உவமை கூறினார்கள்;. ஏழை பரதேசிகளுக்கு சேர வேண்டிதை இவர்கள் அமுக்கிக் கொண்டார்களே இவர்களுக்கு எவ்வாறான உவமை கூறுவது, உவமையைத் தேடினோம் இறுதியில் கிடைத்ததே மேற்கூறிய திருவோட்டுத் திருடர்கள் எனும்; உவமையாகும்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. 9:34

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்).

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை உரத்துக்கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home