|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, August 23, 2006

பொய்யர்களின் புளுகு மூட்டை

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

அல்கோபர் கோமாளியுடைய வலைப் பதிப்பில் பட்டணத்தானுடைய புது புளுகு மூட்டை ஒன்று லோட் பண்ணப் பட்டிருந்தது


அதில் கூறும் இரண்டு விஷயங்களின் சுருக்கம் :

திமுகவின் மீது ததஜ தொடக்கத்தில் கொண்டிருந்த வேகம் சமீபத்தில் தணிந்து விட்டது, என்பதுடன் மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிக்கு சில முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ததஜ சரிக் கட்டி விட்டது போல் புனையப் பட்டிருந்தது


நாம் கேட்கிறோம் ???

ரிஃபாயியை விட்டு தனது பைக்கின் முன் சீட்டை மட்டும் கொளுத்தி விட்டு லுஹா அவர்கள் மீது பொய் புகார் கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு காறி உமிழப்பட்ட கேவலத்தை அடைந்து கொண்டவர்கள் ததஜவால் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மையென்றால் அதை கையும் களவுமாகப் பிடித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பள்ளியை மீட்டி ஜாக்கிடம் ஒப்படைத்து தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டியது தானே ? ஏன் செய்யவில்லை ஆதாரத்தின் அடிப்படையில் தகவல் தருகிறோம் என்றுக் கூறி ஒவ்வொரு தடவையும் அல்கோபர் கோமாளியுடைய வலையில் அண்டப் புளுகை அறங்கேற்றுகின்றனர் என்று பொதுமக்களே தெரிந்து கொள்ளுங்கள்.



திமுகவிலிருந்து கட்டம் கட்டப்படும்; தமுமுக

ஜெயலலிதா அவர்கள் ததஜவுக்கு அமைத்துக் கொடுத்த ஆணையத்தை கடுமையாக எதிர்த்தனர் தமுமுகவினர் என்பது உலகறிந்த விஷயம். திமுகவுக்குள் தமுமுக சிறுபான்மை அமைப்பின் கட்சியாக அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் விரும்பாத அவர்கள் எதிர்த்த சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ஆணையத்தை அவர்களுடைய ஆலோசனை பெறாமல் அவர்களுக்கே தெரியாமல் திமுக நிறைவேற்றியிருக்கிறதென்றால் ? என்ன அர்த்தம் தமுமுகவே திமுகவை விட்டு வெளியே போ என்று சமிக்ஞையின் மூலம் சொல்லப்படுகிறது என்று அர்த்தம்.


அத்துடன் ஏற்கனவே அதிமுக அமைத்துக் கொடுத்த ஆணையமும், இப்பொழுது திமுக அமைத்துக் கொடுத்த ஆணையமும், குடந்தை பேரணியின் தாக்கமேயாகும் என்றும் கூறிக்கொள்கிறோம் குடந்தை பேரணியை வெற்றி பெறச்செய்த வல்ல அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்.


மேலும் தமுமுக ஜாக்குக்காக பழைய செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கடையநல்லூர், மற்றும் மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிகளை தனது அரசியல் செல்வாக்கை? பயன்படுத்தி ததஜவிடமிருந்து பிடுங்கி கொடுப்பதற்காக பீட்டர் அல்போன்ஸ், முதற்கொண்டு மைதீன்கான் வரை கெஞ்சிக் கூத்தாடவே இவர்களது முறையற்ற கோரிக்கையைப் புறக்கனித்து வெளியில் தள்ளி கதவைத் தாழிட்டு விட்டனர் .


இவ்வாறு பலமுறை திமுகாவால் மூக்குடைபட்டவர்கள் தங்களுடைய வளைகுடா வசூல் வீரர்களுக்கு தங்களது கைக்கூலி எழுத்தர்களைக் கொண்டு மூக்குடைபட்டது உண்மை தான் ஆனால் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை எனும் தொணியில் எழுதப் பணித்தனர். அதன் வெளிப்பாடே ததஜ லஞ்சம் கொடுத்து பள்ளியை மீட்டுக் கொண்;டனர் என்கிற பட்டணத்தானுடைய புருடாவாகும். திமுக தன்னை புறந்தள்ளுவதற்கு ததஜவுடைய கையிருக்குமோ என்று கற்பனையாக கணித்தவர்கள் அண்ணன் அவர்களுடைய பழைய ஆடியோ கிளிப்பை போட்டு விட்டுள்ளார்கள்.


அண்ணன் அவர்கள் அப்பொழுது அவ்வாறு பேசியதற்கு முக்கியக் காரணம் பிஜே வுக்கு காப்பு ஜெவுக்கு ஆப்பு என்று வெற்றிக்களிப்பின் மமதையில் கூத்தாடிய தமுமுக கள்ளவெப்சைட் கைக்கூலி எழுத்தருக்காக பேசியதாகும் என்பதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் கோமாளியுடன் கூட்டு வைத்து;ளளவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.


தமுமுக பிளவு பட்டதால் ஜாக்கிற்கு கொண்டாட்டம்

ஒருங்கிணைந்த தமுமுகவில் உட்பூசல் தொடங்கியதுமே எஸ்.கே தனது கோரப்பார்வையை பிரிவனைவாதிகள் பக்கம் செலுத்தி விட்டார் காயல்பட்டணம், மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிகளை பிரிவினைவாதிகளைக் கொண்டு அபகரித்துக் கொள்வதற்கு உட்பூசல் நடந்து கொண்டிருக்கும் போதே பிரிவினைவாதிகளுடன் ரகசிய பேச்சு வார்த்தைகள் மூலம் பண்டம் மாற்று வியாபாரம் போல் பிரிவினைக்கும் பிரிவினைக்குப் பின்பும் எங்களது பங்களிப்பு உங்களுக்கு இன்ன இன்னவைகளாகும், பிரிவினைக்குப் பின் உங்களது பங்களிப்பு எங்களுக்கு இன்ன இன்னவைகளாகும் அதில் முக்கியமாக கடையநல்லூர், மேலப்பாளையம் பள்ளிகளை உங்களது அரசியல் செல்வாக்கு மூலம் பிடுங்கி தந்து விடவேண்டும், அவைகளை மீட்டப்பின் ஆர்.எஸ்.எஸ் போன்று இன்னும் எங்களிடம் தவ்ஹீத் பள்ளிகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது அதைப்பிறகு சொல்வோம் அதையும் பிடுங்கித தரவேண்டும் என்றுப் பேசி முடித்துக் கொண்டார்.


அதன் முதல் கட்டமாக இலாஹிக்கு சீட் தர மறுத்த காதர்மொய்தீன் சாஹிபையும் திமுகவையும் ஜாக்கின் மாவட்ட நிர்வாகியாகிய வட்டிமூஸா தலைமையில் மேலப்பாளைய வீதிகளில் கொடிப்பிடித்து ஆர்ப்பரித்து தனது பிரதிவுபகாரத்தை தமுமுகவிடம் சமர்ப்பித்தது ஜாக் .


ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்றப் பெயருடன் இன்றுவரை இயங்குபவர்கள் தமுமுகவினரின் அடியாட்களை அனுப்பி கடையநல்லூர் பள்ளியில் தொழுகையாளிகளுடைய மண்டைகளைப் பிளந்து தள்ளினவர்கள் அசல் பேட்டைரவுடிகள் போன்று ரவுடியிஷம் செய்த ஜாக்கினர் இன்றுவரை ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.


மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளியின் மேலாளருக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுத்தோம் எனும் வடிகட்டியப் பொய்யை அல்லாஹ்வின் மீது பயமில்லாமல் அரங்கேற்றியவர்கள் இன்றுவரை ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.


தனது மாவட்ட நிர்வாகி ஒருவர் எழுத்துப் பூர்வமாக வட்டிக்கு கொடுத்து வாங்குவது தெரிந்தும் இதுவரை அவரை நீக்காதுதுடன் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ள வில்லை.


கொள்கையில்லாத இவர்களுக்கு கொள்கையின் அடிப்படையில் செயல்படும் தவ்ஹ்Pத் பள்ளியின் மீது பேராசை கொள்வது ஏன் ?


இத்தனையும் தெளிவாக தெரிந்திருந்தும் உம்மா சொல் தட்டாதவர் தனது வலையில் பொய்யர்களின் புளுகு மூட்டைகளை ஏற்றி விடுவது ஏன் ? என்று புரியவில்லையென்றால் அதையும் நாமே தெளிவு படுத்தி விடுகிறோம். உம்மாவுக்கு மூதறிஞர் பிஜே அவர்களைப் பிடிக்காது அதனால் யாருக்கெல்லாம் அவரைப் பிடிக்காதோ அவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதில் செல்லப்பிள்ளை தீவிரமாக களமிறங்கியுள்ளார்.


உதாரணமாக தமுமுக காரர் ஒருவருக்கு காலில் முள் தைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம் அவர் பிஜே . . . பிஜே என்று கத்தினால் போதும் அதைக் கேட்ட மாத்திரத்தில் உம்மாவின் செல்ல மகனுடைய கண்ணில் இரத்தம் சொட்டத் தொடங்கிவிடும் தனது வலையில் ஊரைக் கூட்டத் தொடங்கி விடுவார் ததஜ அலுவலுக முற்றுகைப் போராட்டம் என்று அலறத் தொடங்கிவிடுவார் காலில் முள் தைத்தால் எதுக்கு நீ பிஜே ... பிஜே என்றுக் கத்துகிறாய் என்றுக் கேட்க மாட்டார் அப்படியே காலை வைக்கத் தெரியாமல் முள் மீது வைத்து விட்டால் நீ உம்மா . . . உம்மா என்றல்லவா அழ வேண்டும் என்றும் கேட்க மாட்டார். ( இது உதாரணத்திற்கு )


அந்தளவுக்கு பிஜே எதிர்ப்பு மோகம் வெறியாக மாறி யார் யாரோ செய்த குற்றத்தையெல்லாம் பிஜே தலைமேல் தூக்கிப்போட்டு தனது எதிர்ப்பைக் காட்டினர் அதன் தெளிவான வெளிப்பாடே அனைத்து அமைப்புகளின் ததஜ அலுவலக முற்றுகைப் போராட்டம் எனும் கரடியை கையில் பிடித்துக் கொண்டு அமைப்பு அமைப்பாக ஏறி இறங்கினர் .

நடுநிலையாளர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள் எங்களை எந்த இயக்கத்தோடும் தொடர்பு படுத்தாதீர்கள் என்றும் அவ்வப்பொழுது கூறிக் கொள்வார்கள் இவ்வாறு கூறுவதிலிருந்தே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அவர்கள் கூறுவதும் அவர்களுடைய பிஜே எதிர்ப்பு ஆக்கங்களும் கபாட்டிக் கொடுத்து விடும் இவர்கள் யார் ? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று .


இவர்கள் நடுநிலையாளர்கள் என்றால் மூதறிஞர் பிஜே அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை போட்டவர்கள் ஜெயலலிதாவின் ஆணையத்ததை ஆரம்பத்தில் எதிர்த்த தமுமுகவினரின் மேல்படி ஆஐணயம் விஷயமாக எதிர்த்து கள்ளவெப்சைட்டிலும், நலர்ல வெப்சைட்டிலும் எழுதிய ஆக்கங்களையும் பதிந்து அவர்களுக்கும் டோஷ் கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறெனில் பட்டணத்தான் முதல் இதில் பதியும் அனைவர்களையும் நடுநிலையாளர்கள் எனலாம்.


எங்களை எந்த அமைப்புடனும் முடிச்சுப் போட வேண்டாம் என்றால்

தமுமுகவுக்கும், ததஜவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையை எடுத்தெழுத இவர்கள் யார் ?


எவர் குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகவும், ததஜவுக்கு எதிராகவும் எழுதுகிறாரோ அவர் எங்கள் பார்வையில் அவர் ஆதரவாக எழுதும் அமைப்பையேச் சார்ந்தவராகும். உதாரணத்திற்கு ஒருவர் பி.ஜே.பிக்கு ஆதரவாக ததஜவுக்கு எதிராக எழுதுகிறார் என்றால் எங்கள் பார்வைலயில் அவர் பி.ஜே.பி காரரேயாகும் உண்மையில் அவர் உம்மாவின் மகனாக இருக்கலாம், அல்லது விடியலைத்தேடி கும்மிருட்டில் சிக்கி சீரழிபவராக இருக்கலாம் அதுபற்றி ஆராயவேண்டிய அவசியம் எஙகளுக்கு தேவை கிடையாது.


அதனால் எங்களை எந்த அமைப்புடனும் முடிச்சுப் போட வேண்டாம் என்று அசைவம் பேசும் காட்டெருதாக நடிக்க வேண்டாம் என்று கூறிக்கொள்வதுடன் நீங்கள் உஙடகளைச் சார்ந்த எத்தனை அமைப்பை எங்களுக்கெதிராக திரட்டினாலும் எங்களுக்கு அதுபற்றி அறவே கவலை கிடையாது காரணம் எங்களுடைய பணி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதாகும் அதனால் எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்

மக்களில் சிலர் (அவர்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. ''அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்'' என்று அவர்கள் கூறினார்கள். 3:173.

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُواْ لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُواْ حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ {173

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். 3:174.

فَانقَلَبُواْ بِنِعْمَةٍ مِّنَ اللّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ عَظِيمٍ {174} وَاتَّبَعُواْ رِضْوَانَ اللّهِ وَاللّهُ ذُو فَضْلٍ


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக்கூறும் உமர

0 Comments:

Post a Comment

<< Home