|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு ஆணையமும் தமுமுகவின் பலமுகமும்.

ஏகனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சுனாமி திருட்டு பணத்தில் வெளிவரும் தமுமுகவின் வார ஏட்டில் ஆணையம் சம்மந்தமாக சில முன்னுக்கு பின் முராணான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். அவர்கள் முஸ்லிம் டிரஸ்டுக்கு சொந்தமான உணர்வை தமுமுகவுக்கு சொந்தம் என்றும் அதை ததஜ அபகரித்துவிட்டது என்று எழுதி வருகிறார்கள். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் எழுதினால் உண்மையாகிவிடாது. உண்மையிலேயே அது தமுமுகவுக்கு சொந்தம் என்றால் அது கிடைக்க கூடிய சட்டப்பூர்வமாக வழியை பார்க்காமல் ததஜ மீது களங்கம் சுமத்துவது தவறாகும்.
ஆணையம் அமைக்கபடவில்லை, ஜெயலலிதா நம்மை ஏமாற்றுகிறார்.
இது தமுமுக சென்ற சட்டமன்ற தேர்தலின் போது தமுமுக வாரஇதழில் பல முறை வெளியான செய்தியும், அதன் தலைவர் பல கூட்டங்களில் பேசிய பேச்சும் ஆகும். ஆனால் தற்போது ஆணையம் அமைக்கப்பட்டது உண்மை என்பதை தமுமுக அதிகார பூர்வமாக ஒத்துக் கொண்டுள்ளனர். நன்றாக தெரிந்து கொண்டே பொய்யை அன்று உரைத்ததன் காரணம் என்ன?. இவர்கள் திமுகவிடம் வாங்கிய ரகசிய கூலிக்கு விசுவாசத்தை வேறுவிதத்தில் காட்டி இருக்கலாம்?. இதற்க்கு இடஒதுக்கீடு ஆணையம்தான் கிடைத்தாதா?. பாவம் தமுமுகவின் கண்(இல்லாத)மணிகள் ஆணையம் போலியானது என்று பொய்யை பரப்பி இன்று மாற்றி கூறி மக்கள் மத்தியில் எத்தனை அவமானப்பட்டு நிற்கின்றனர்?.
ததஜவின் வரலாற்று சாதனை
தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆணையத்தில் முதன் முதலாக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலைகளை ஆணையம் ஆய்வு செய்யும் என்ற சரத்து புதிதாக சேர்க்கப்பட்டு வெளியாகியது. இத்தகைய வரலாற்று சாதனையைத்தான் தமுமுக ஆணையமே இல்லை என்றும் சில நேரங்களில் வேஸ்ட் பேப்பர் என்றும் செத்த பாம்பு என்றும் கூறியது. அவர்கள் திமுகவின் அடிமையாக இருப்பதால் அன்று வேஸ்ட் பேப்பராக தெரிந்தது இன்று வேல்யு உள்ள பேப்பராக தெரிகிறது. இப்படி திமுகவிடம் மானம் மரியாதையை இழந்து பொய்யை சொல்லி, ஜால்ரா அடித்து சம்பாதிப்பதை விட வேறு எதாவது செய்து தமுமுக தலைவர்கள் பிழைக்கலாம்.

பொது அறிவு யாருக்கு குறைவு?.
இந்திய பரிவினைக்கு இங்கு உள்ள இந்திய முஸ்லிம்கள்தான் காரணம் என்று கூறிய பேராசிரியருக்கு பொது அறிவு குறைவா? உணர்வு ஆசியருக்கு பொது அறிவு குறைவா?.

அரசாங்க இணையத்தில் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இடம்பெறவில்லை அதனால் ஆணையம் போலியானது, அது அமைக்கப்படாமல் நம்மை ஜெயலலிதா ஏமாற்றுகிறார் என்று சொன்ன பேராசிரியருக்கு பொது அறிவு குறைவா?. இணையத்தில் இல்லை என்றால் ஆணையம் இல்லை என்று சொல்வது தவறு?. தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால்தான் அது இடம்பெறாததற்க்கு காரணம் என்று கூறிய உணர்வு ஆசிரியருக்கு பொது அறிவு குறைவா?.

யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள், என் முன்னால் கேளுங்கள் என்று சவால் விட்டு இலாஹியை நேரிடையாக எதிர்கொள்ள அவர் ஊரிலேயே காத்திருந்த உணர்வு ஆசிரியருக்கு பொது அறிவு குறைவா?. துபையில் இலாஹி போட்ட நோட்டிசுக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த நோட்டிஸை மலத்தில் துடைத்து போடுங்கள் என்று சொன்ன பேராசியருக்கு பொது அறிவு குறைவா?.

மூன்றாவது படித்து மார்க்கத்திலும், உலக விசயத்திலும் மாமேதையாக திகழும் உணர்வு ஆசிரியருக்கு எந்த அளவுக்கு பொது அறிவு உள்ளது என்றும், பட்டங்கள் பல பெற்றும் தவ்ஹித்வாதிகளை வெளியேற்றினால் தமுமுக வளரந்து விடும் என்று முட்டால்தனமான கணக்கு போட்டு இன்று வெம்பி தவிக்கிற அது சம்மந்தமான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணருகிற பேராசியர எந்த அளவுக்கு பொது அறிவு உள்ளது என்பதும் பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும்.

தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்டதல்ல அது புதுப்பிக்கப்பட்ட ஆணையமே என்று ததஜ அன்றே அறிவித்திருந்த நிலையில் ஏதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி தமுமுக பிதற்றுவதை பாரக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது.

அடுத்து ஜெயலலிதா அமைத்த ஆணையத்தில் இருந்த அத்தனை பேரும் தானாக வெளியேறிவிட்டார்களாம்?. அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?. ஒருவர் அல்லது இருவர் வெளியேறினால் அது தற்செயலானது எனலாம் ஆனால் அனைவரும் கூண்டோடு வெளியேறும் பொழுது அது தனாக நடந்தது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. ஒரு ஆட்சியல் நியமிக்கப்படுபவர்கள் அடுத்த ஆட்சியல் மாற்றுவது என்பது அரசியலில் உள்ளதுதான். திமுகவின் நெருக்குதலின் காரணமாகத்தான் அத்தனை பேரும் வெளியாகினார்கள் என்பதை நன்றாக தமுமுக தெரிந்து கொண்டே தொடர்ந்து பொய்யை எழுதுவது ஏன்?.


தமுமுக பதில் சொல்லுமா?.
ஜெயலலிதா அமைத்த ஆணையத்தில் ஒரு முஸ்லிம் இடம் பெற்று இருந்தார் ஆனால் திமுகவின் ஆணையத்தில் அதுவும் இல்லாமல் நமக்கு பட்டைநாமம் போடப்பட்டுள்ளது. இது குறித்து தமுமுக என்ன சொல்ல போகிறது?

ஆணையமே தேவையில்லை நாங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டதிருத்தம் செய்ய சொல்லி இடஒதுக்கீடு பெற்று தருNவுhம் என்று சூளுரைத்த தமுமுக இன்று திமுக அமைத்த ஆணையத்தை ஏற்றது ஏன்?.

ஆணையத்திற்கான கால அளவாக 1 வருடத்தை ஜெயலலிதா நியமித்ததற்க்கு விண்னுக்கும் மன்னுக்கும் குதித்த தமுமுக இன்று 2 வுருடம் கால அளவை கருணாநிதி நியமித்துள்ளதை பற்றி வாய்திறக்காமல் இருப்பதேன்.

ஏசிஅறை கதாசியருக்கு,
தீன் முஹம்மது என்ற சகோதரர் ஜித்தாவில் தரையில் இருந்த உமரியை மேடையில் இருந்தாக சிறு தவறாக எழுதியதற்காக குறைந்தது ஐந்து, ஆறு கட்டுரையாவது வெளியிட்டு ததஜவினரின் லட்சகம் பாரீர், அவர்கள் பொய்யர்கள்? என்று ஒட்டு மொத்த ததஜவையும் திட்டிதீர்த்த அல்கோபர் ரயிசுதீன் தமுமுக வெளியிட்ட முன்னுக்கு பின் முரணான பிதத்லாட்ட கேள்வி பதிலை அப்படியே எடுத்து தனது இணையத்தில் வாந்தி எடுத்திருப்பது முறையா?. இப்பொழுது எங்கே போனது இவரின் வீரம்?.(சுனாமி, பித்ரா திருட்டு பணம் தமுமுக கையில் இருக்கும் வரை இது போல் எத்தனை ரயிசுதீனையும் தமுமுக விலைக்கு வாங்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.)

திமுகவும், தமுமுகவும்
தமுமுக என்னதான் தனது விசுவாசத்தை திமுகவிடம் காட்டினாலும் இவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் என்பதை திமுக உணர்ந்து இவர்களை ஒரு ? ஒதுக்குவது போல ஒதுக்குகிறது. இதற்க்கு உதாரணமாக பாளையங்கோட்டையில் இலாஹிக்கு சீட்டு கேட்டு அறிவகத்தில் பல நாட்கள் இவர்கள் காத்திருந்தும் திமுக சீட்டு தர மறுத்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது. அடுத்து விழுப்புரம் நகர தமுமுக நிர்வாகிகளின் அராஜகபோக்கால் போலிஸ் அவர்களை ரவுடி லிஸ்டில் சேர்த்தும் தமுமுக தலைமை பல முயற்சிகள் செய்தும் திமுக அரசு அதில் தலையிட மறுத்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது.அடுத்து காஞ்சிபுரத்தில் தமுமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டும் அவர்களை விடுவக்க திமுக மறுத்ததை குறிப்பிடலாம். அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவுக்கு ஆப்பு, பிஜெவுக்கு காப்பு என்று முழங்கி வந்ததும் திமுக ஆட்சிக்கு வந்ததும் சகோ.பிஜெயை உள்ளே தள்ள பல முயற்சிகள் எடுத்தும் திமுக ஆதரமில்லாமல் எதையும் செய்ய முடியாது என்று கூறி தமுமுக தலைவர்கள் முகத்தில் கரியை பூசியது. தவ்ஹித் ஜமாத் பள்ளிகளை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்து மேலப்பாளைய பள்ளியில் கைவைக்க நினைத்து திமுக அரசு ததஜவுக்கு சாதகமாக நடந்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது. இப்படி இத்தனை அவமானத்திற்க்கு பிறகும் தமுமுக திமுகவின் விசுவாசிகளாக இருப்பது வேட்க கேடானது.

ஆனால் ததஜவோ தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்பதில் தெளிவாக உள்ளது. அதனால்தான் ஜெயலலிதா தடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறிய போது அதை கடுமையாக ததஜ விமர்சித்தது. அதே சமயம் திமுகவின் சில நல்ல திட்டங்களை பாரட்டியும் வருகிறது. இப்படி சமுதாய நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு ததஜ செயல்படுவதை போல தமுமுகவும் தனது போக்கை மாற்ற வேண்டும். இல்லை நாங்கள் எங்கள் சுயநலனை மட்டும்தான் பார்ப்போம் என்று தமுமுகவின் தலைவர்கள் நினைத்தால் தற்போது உயிர் போகும் தருவாயில் உள்ள தமுமுக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருந்து துடைத்தெரியபடும் நாள் வெகு விரைவில் வரும் என்று எச்சரிக்கிறோம்.

அஹமத்அலி.

0 Comments:

Post a Comment

<< Home