|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 05, 2006

மீண்டும் சைக்கோ தென்காசி சித்திக்.

ஏகனின் திருப்பெயரால்..

வெளிச்சம் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் சகோ.பிஜெவுக்கு எதிராக தொடர்ந்து பல கற்பனைகளையும், பொய்களையும் வெளியிட்டுவந்த தென்காசி சித்திக் அவர்களை ஆதாரத்துடன் ஒரு சைக்கோ நோயாளி என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்க்கு சில வாசகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது வெளியாகியுள்ள சித்திக்கின் பொய் மெயிலை பார்த்து விட்டு தாங்கள் சரியாகத்தான் அவரை சைக்கோ என்று குறிப்பிட்டுள்ளீர்கள் நாங்கள்தான் தவறாக விளங்கி கொண்டோம் என்று வருத்தம் தெரிவித்தனர்.

இந்த சித்திக்கும், ரயிசுதீனும் தான் சார்ந்த அமைப்பை கூட வெளிக்காட்டி கொள்ளாமல் நடுநிலை வேஷம் போடும் நடிகர்கள் என்பதை அவர்களின் தொடர் பித்னா மெயிலை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தன்னை அடையாளம் காட்டி கொள்ளாத முதுகெலும்பு இல்லாதவர்கள் அடுத்த இயக்கத்தை விமர்சிப்பதுதான் வேதனையானது. இதில் விடியல்காரர்களின் இரட்டை வேடத்தையும், தன் அமைப்பை காக்க அல்லாஹ் மீதே பொய் சத்தியம் கூற துணிந்தவர்கள் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் தமுமுகவினரும் தங்களை அது போல கோழையாக காட்டிகொள்வது கேவலமானது. எங்கே தங்களை இயக்கம் சார்பாக காட்டி கொண்டால் அந்த அமைப்பின் உலக ஊழலை பற்றி ஊர் முழுக்க நாறிவிடும் என்பதால் தங்களை இயக்கம் சாராதவர்கள் போல காட்டி கொள்ளும் இவர்களை சகோதரர்கள் அடையாளம் காணவேண்டும்.

நாம் ஒரு கேள்வியை முன்வைக்கும் பொழுது அதற்க்கு நேரடியாக பதிலலிக்க முடியாத இவர்கள் யார் யாரின் பேரையோ சம்மந்தமில்லாமல் குறிப்பிட்டு நம்மை வம்புக்கு இழுக்கின்றனர். இப்படி எல்லாம் சம்மந்தமில்லாதவர்களை இழுத்தால் நாம் அவதூறுக்கு பதில் அளிப்பதை விட்டுவிடுவோம் என்ற இவர்களின் கற்பனையை நினைத்து பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வருகிறது.

ஏதோ உலக சிபிஐ போல தன்னை நினைத்து கொண்டு தனது மெயிலில் பல லிங்க்களை கொடுத்து இதோ ஆதாரம் என்று கோடிட்டதை பார்த்து நான் பிரம்மித்து விட்டேன். ஏதோ யாருக்கும் இதுவரை கிடைக்காத தகவல்கள் சித்திக்கிடம் உள்ளதோ என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு லிங்க்கை திறந்த பிறகுதான் அது 3 வருடத்திற்க்கு முன்பே கண்ட பழைய குப்பை கதை என்று தெரிந்தது. சித்திக் அவர்கள் பழைய கதைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு கொண்டு தன்னை ஒரு சைக்கோ என்று மீண்டும் நிறுபித்திருக்கிறார்.

சகோ.பிஜெ பல பேரை குண்டு வைக்க தூண்டினார் என்றும் பல பேரை கொலை செய்ய கூறினார் என்று பொய்யை பயமில்லாமல் கூறும் சித்திக் அவர்கள் இதை ஆதாரத்துடன் நிறுபிப்பாரா?. இதுதான் இந்த வருடத்தின் மெகா ஜேக் என்று நினைக்கிறேன். இது போன்ற சித்திக்கின் தொடர் ஆதரமற்ற எழுத்துக்கள்தான் இவர் ஒரு சைக்கோ என்பதற்;கு மீண்டும் ஒரு தெளிவான ஆதரமாகும்.

நாங்கள் எல்லாம் நேற்று வந்தவர்களாம் இவர் 40 வருடமாக பிஜெவுடன் ஒரே தட்டில் உண்டு ஒரே படுக்கையில் படுத்தவராம்?. பிஜெவை பற்றி என்ன தெரியும் இந்த சித்திக்கிற்க்கு?. இவர் பிஜெவுடன் இருந்த சில மணி நேரத்தில் அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டாராம்!. இதை படிக்கும் பொழுதே உங்களுக்கு சிரிப்புவரவில்லையா சகோதரர்களே?

சிறைவாசிகள் சம்மந்தமாக சகோ.பிஜெ கொடுத்த செய்தியை வைத்து கொண்டு இன்று பித்னா செய்யும் தமுமுகவின் அடிமை சித்திக் அவர்கள் அந்த செய்தி கொடுத்த கால கட்டத்தை மறைத்தது ஏன்?. வாக்கு மூலம் கொடுக்கும் பொழுது உடன் இருந்து பிஜெ பேசுவதற்க்கு முக்கிய காரணமான ஜவாஹிருல்லா, ஹைதரின் பேரை மறைத்தது ஏன்?. அன்று பிஜெ கொடுத்த வாக்கமூலம் தவறு என்றால் அன்றே தமுமுகவில் கண்டிக்காதது ஏன்?.

தன் மகளே தவறு செய்தாலும் கையை வெட்டுவேன் என்ற நபி(ஸல்) உம்மத்தில் வந்தவர்கள் நாம் நமது சமுதாயம் பாதிக்கப்படும் அளவுக்கு சில பேர் களத்தில் இறங்கி தவறு செய்தால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர்கள் செய்கின்ற தவறான செயலால் சமுதாயம் முழுவதும் பாதிக்கப்படும் அதனால் உண்மையை மூடி மறைக்க கூடாது.அதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களின் செயலால் தமுமுகவே தடை செய்யப்படும் எனும் நிலையில் நாம் வாய்திறந்தே ஆக வேண்டும் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் அன்று குதித்த ஜவாஹிருல்லா, ஹைதர் போன்றோரும் அவர்களின் இயக்கவெறியர்களும் இன்று தடம்மாறி போனது ஏன்?.

தவறு செய்பவர்கள் நமது சமுதாயத்தவர்களாக இருப்பதால் நாம் அவர்களை ஆதரிக்க கூடாது. உண்மையை மறைத்து பொய்யை கூற கூடாது என்று அடிக்கடி அன்று கூறும் ஜவாஹிருல்லா ரூ கோ இன்று பல்டி அடித்து பிஜெ மீது பித்னா செய்வது ஏன்?

இன்று பிஜெயின் செய்தியை வைத்து பித்னா செய்யும் தமுமுக தலைவர்களும், அதன் அடிவருடிகள் சித்திக், ரயிசுதீன் போன்றோர் அன்று மசுரையா பிடிங்கி கொண்டு இருந்தனர். கண்மூடிதணமாக பிஜெ சொல்வதை நம்பி விட்டோம் என்று கட்டுகதையை வெளியிட்டால் நான் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கிறேன் அதற்க்கு தமுமுக சித்திக் பதில் சொல்லட்டம். அன்று பிஜெ சொன்னதால்தான் கண்முடித்தனமாக அப்படி செய்தோம் என்று கூறினால் பிஜெ மலத்தை கொடுத்து சாப்பிடுங்கள் என்று சொன்னால் அதை செய்திருப்பார்களா?. என்ன சொல்ல வருகிறார்கள் இந்த கதையாசிரியர்கள்?.

இந்திய காவல்துறையையும், உளவுப்பிரிவையும் இவர்கள் தங்களை போல ஏசி அரையில் இருந்து கொண்டு கதைவிடும் கேணைகள் என்று நினைத்து கொண்டுள்ளார்கள். விடியல் சம்மந்தமான காசிமியின் கேள்விக்கு பதில் விடியோவில் அன்று ஜவாஹிருல்லா கொடுத்த பதில் இன்று இவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும் என்பதால் அதை இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு பிரச்சனை சம்மந்தமாக ஒருவரை உளவுத்துறை விசாரிக்கிறது என்றால் அவர்கள் நம்மை விசாரிப்பதற்க்கு முன்பு நம்மை பற்றியும், நமது கடந்த கால செயல்கள் பற்றி அனைத்து தகவல்களையும் திரட்டிய பின்பே நம்மை விசாரிப்பார்கள். அவர்களின் முன் உண்மையை கூறுவது ஒன்றுதான் ஒரே வழி நாம் எதாவது பொய் கூறினால் அதை எளிதாக அவர்கள் அடையாளம் கண்டு விடுவார்கள்.அதன் விளைவு மிக மோசமாக இருக்கும். எனவே கோவை குண்டு வெடிப்பு சம்மந்தமாக எதையும் மறைக்க முடியாது என்று குறிப்பிட்டார் நாமும் அதையே இங்கு தருகிறோம்.
தென்காசி சித்திக், ரயிசுதீன் போன்றோரை அதன் தலைமை அடக்கிவைத்து கொள்ளட்டும். நான் இவர்கள் சம்மந்தப்பட்ட பல விசயத்தை சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு வெளியிடாமல் உள்ளேன். மீண்டும் மீண்டும் சகோ.பிஜெவையே எங்கள் அமைப்பையே சீண்டிக்கொண்டு இருந்தால் வேறு வழி இல்லாமல் அனைத்தையும் வெளியிட்டுவிடுவேன். அதன் பிறகு பாதிப்பு என்னவோ இவர்களுக்குதான் என்பதை இவர்களின் தலைமை கவணத்தில் கொள்ளுமா?.

கோவை சிறைவாசிகள் குற்றவாளிகளா? இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும். இங்கு நான் குறிப்பிட்ட சில செய்திகள் சிறைவாசிகளின் விடுதலையை விரும்பாதவன் என்ற முறையில் வெளியிட்டது இல்லை. அவர்களின் விடுதலையை மனப்பூர்வமாக விரும்புகிறேன். அவர்கள் ஒரு வேளை குற்றவாளியாகவே இருந்தாலும் 8 ஆண்டுகளாக ஜாமின் கூட தரமால் இழுத்தடிப்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே அவர்களின் விடுதலைக்காக அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்.

அன்புடன்
அஹமது அலி.










0 Comments:

Post a Comment

<< Home