|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, August 01, 2006

ஜாக் பொருமை காக்க வேண்டும்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

வெளிச்சம் வாசக சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தியாவில் சுமார் ஆயிரம் பள்ளிவாசல்களை இழுத்து பூட்டி கோயிலாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்பதுதான் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் சமீபத்தில் நமது சமுதாயத்தில் உள்ள தமுமுக, ஜாக் போன்ற இயக்கங்கள் அதே ஆர்.எஸ்.எஸ் நடைமுறையை பின்பற்றி பல பள்ளிவாசல்களை பூட்ட திட்டமிட்டுள்ளது என்னை மிகவும் அதிர்சியடையவைத்தது. நான் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவன் இல்லை என்பதை முதலில் சொல்லி கொள்கிறேன். கடையநல்லூரில் முபாரக் பள்ளியை நிர்வகித்து வந்த உள்ளுர் சகோதரர்களை அடித்து மிரட்டி பல பிரச்சனைகளை உண்டாக்கி பள்ளியை இழுத்து பூட்டி விட்டனர்.

நான் முதலில் இதை சாதாரண உள்ளுர் கடையநல்லூர் பிரச்சனை என்றுதான் நினைத்தேன். ஆனால் கடையநல்லூரை முடித்து கொண்டு அடுத்து மேலப்பாளையத்தில் உள்ள பள்ளியை பூட்ட தமுமுகவும், ஜாக்கும் களம் இறங்கியிருப்பதை பார்க்கும் பொழுது இவர்களின் உண்மை சுயருபத்தை தெரிந்து கொண்டேன். அதற்க்கு அடுத்ததாகவும் சில ஊர்களின் பெயர் கசிகிறது. அந்த பள்ளியை பூட்டவும் ஜாக் தயாராக உள்ளதாக தெரிகிறது. எப்படி ஆர்.எஸ்.எஸ் பாபர் மசூதி கதையை முடித்து விட்டு காசி, மதுர மற்றும் பல பள்ளிவாசல்களின் பெயரை பட்டியலிடுகிறதோ. அதே போல்தான் உள்ளது இந்த ஜாக், தமுமுகவின் செயல். அவர்களுக்கும் இஸ்லாமியர்கள் என்று கூறி கொள்ளும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது எனது நிலையாகும்.

ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரர்களில் ஒருவனின் உழைப்பில் சொத்துக்கள் தங்கள் தந்தையின் பெயரில் வாங்கப்பட்டாலும் அந்த சொத்து பிறிக்கும் பொழுது தனது உழைப்பு இல்லாததால் ஒதுங்கி கொள்ளும் சகோதரர்களை நாம் தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் மேலப்பாளைய பள்ளிக்காக ஒரு துரும்பையும் அசைக்காத ஜாக் தன் பெயரில் இடம் உள்ளது என்பதால் அதை அபகரிக்க நினைப்பது சரியா?.

அன்று தவ்ஹித் சகோதரர்கள் பள்ளிவாசலை வசூல் செய்து கட்டும் பொழுது நிர்வாக வசதிக்காக ஜாக் என்ற பெயரில் இடம் வாங்கினார்கள். அதன் பிறகு ஜாக்கின் பொருளாதாரா மோசடியால் அதிருப்தியடைந்து அதை விட்டு வெளியேறினார்கள் அந்த இடம் ஜாக்கின் பெயரில் உள்ளது என்பதை தவிற அந்த பள்ளிக்காக ஜாக் ஒன்றும் செய்யவில்லை. இன்று தமுமுக என்ற அரசியல் ரவுடிகள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் அந்த பள்ளியை அபகரித்து இழுத்து பூட்ட திட்டமிட்டுள்ளது சரியா?

வருடந்தோறும பல கோடி ரூபாய்; வெளிநாடுகளிலிருந்து வரும்பொழுது அந்த கணக்கு விவரம் கூட தனக்கு தெரியாது தனது மனைவிக்குதான் தெரியும் என்று ஜாக்கின் தலைவர் சொன்னது போல பல மோசடிகளால்தானே தவ்ஹித் ஜமாத்தினர் தனியாக சென்றார்கள் பிறகு ஏன் அவர்களை துரத்தி கொண்டு பொய் வழக்கு போட்டு, ரவுடிகளை வைத்து மிரட்டி கொண்டுள்ளார்களோ தெரியவில்லை.

இந்த ஜாக்கின் சதியில் தமுமுக எந்த அளவுக்கு கிரிமினலாக வேலை செய்கிறது என்று பார்தாலே இவர்கள் எந்த அளவுக்கு கீழ்தரமானவர்கள் என்பது புலனாகும். மேலப்பாளைய நகர ஜாக் நிர்வாகியின் வீட்டிற்க்கு தீ வைப்பு என்று போலிஸில் பொய் புகார் ஆனால் எறிந்ததோ வீட்டு திரை சீலை மட்டும். அதே போல ரிபாய்யின் வீட்டு மோட்டார் பைக் எறிப்பு என்று பொய் புகார். ஆனால் உண்மையில் எறிந்தது மோட்டர் பைக்கின் சீட் கவர் மட்டும் இதை வைத்தே இவை அனைத்தும் பொய் புகார் மற்றும் செட்டப் என்று தெரியவில்லையா?. ஏன் இப்படி அல்லாவின் பயம் இல்லாமல் தமுமுகவும் ஜாக்கும் நடந்து கொள்கிறதோ தெரியவில்லை.


பள்ளி யாருடைய கையில் இருந்தால் என்ன குர்ஆன், ஹதீஸ் படி தொழுகை மற்ற முறைகள் நடக்கிறதா என்பதை மட்டும் பார்க்க ஜாக் ஏன் மறுக்கிறது?. முறைபடி மேலப்பாளைய பள்ளிக்காக கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது ஜாக் நிர்வாகம். அந்த தீர்ப்பு வரும் வரையாவது ஜாக் பொருமை காக்க வேண்டும். தமுமுக என்பவர்கள் முழு அவசிpயல்வாதிகள் இன்று ஏதோ கிடைக்கிறது என்பதற்காக ஜாக்கை ஆதரித்து ரவுடிசம் செய்கிறார்கள். நாளை ஜாக்கை விட அதிகமாக யாராவது கவணித்தால் அவர்கள் பின்னே சென்று ஜாக்கை அழிக்க முற்பாடுவார்கள் என்பதை ஜாக் நிர்வாகிகள் உணரவேண்டும்.

அ.அபுபக்கர்.
சவுதி அரோபியா.












0 Comments:

Post a Comment

<< Home