|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 24, 2006

சகோதரர் முகவை தமிழன் அவர்களுக்கு


அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பு சகோதரர் முகவை தமிழன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..தங்கள் மெயில்களை தொடர்ந்து காண்கிறேன். முதலில் நடுநிலை போல தொடங்கிய தங்களின் அவதூறு பரப்பும் வேலை பிறகு பிஜெ எதிர்ப்பு என்ற ஒரு நோக்கத்தில் மட்டுமே உள்ளது. சில மெயில் விலாசமும், ஒரு இணையமும் கிடைத்து விட்டது என்பதற்காக மனதில் தோன்றிய கற்பனைகளை திரட்டி எறும்பை யானையாக்கி, யானையை எறும்பாக்கி அவதூறை வெளியிட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

தங்களின் மெயிலை பார்க்கும் பொழுது இந்தியாவின் ஐஎஸ்ஐ பூச்சாண்டிதான் ஞாபகம் வருகிறது. இந்தியாவில் மழைபெய்யவில்லை என்றால் ஐஎஸ்ஐதான் காரணம் என்பதும், அதிகமான மழை பெய்தாலும் ஐஎஸ்ஐதான் காரணம் என்பார்கள். அது போல் எந்த செய்தி எப்படியாகிலும் அதில் பிஜெயை வலுக்காட்டாயமாக இறக்கி அவர்தான் அதற்க்கு காரணம் என்று கூறும் உங்களை நினைக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது. நீங்கள் மக்கள் உரிமையை கண்டிப்பீர்களாம். அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாம், அதை நீங்கள் பாராட்டுவீர்களாம். இந்த நாடகத்தை நம்ப நாங்கள் தாயரில்லை. நீங்கள் என்ன நடுநிலை வேசம் போட்டாலும் நீங்கள் விடியல் சிந்தனையில் இருந்து தமுமுகவிற்க்கு விலைபோனவர் என்று தங்கள் மெயில்களை பார்பவர்களுக்கு அப்பட்டமாக தெரியும்.

பிஜெ என்ற தனிமனிதரின் மீது அவதூறு பரப்பாமல் தங்களால் ஒரு வார காலமாவது இணையத்தை நடத்த முடியுமா?. தங்களின் மெயிலை தொடர்ந்து பார்க்கையில் தவறான புரிதல்களால் பிஜெ மீது தங்களுக்கு பயங்கர வெறுப்பு உண்டாகி அது தற்போது மனநோயின் ஆரம்ப கட்டமாக உள்ளது. கண்டிப்பாக மருத்துவரை அனுகி ஆலோசிக்கவும். அது மட்டும் இல்லாமல் தினந்தோறும் தொழுகைக்கு பிறகு அல்லாவிடம் உங்களின் மனநோய் குணமடைய பிராத்திக்கவும்.

சகோதரரே இந்த உலகம் மிகப்பெரியது பிஜெ என்ற ஒரு தனிதனிதருக்குல் அது அடங்கி விடவில்லை. பிஜெ என்பரை விட்டு வெளியே வந்து பாரக்கவும். இஸலாத்திற்க்கு எதிராக எத்தனை வேலை நடக்கின்றது என்பது புரியும். ஒரு பக்கம் கிருஸ்துவத்திற்க்கு நம் மக்களை மாற்ற மூலை சலவை நடக்கின்றது. மறு பக்கம் நமது சகோதர இந்து சகோதரர்களை நமக்கு எதிராக திருப்பும் வேளை நடக்கின்றது. மறுபக்கம் நமது இஸ்லாமியர்களே சமாதிவழிபாடு, மந்திரம், பொழுது போக்கு என்று திசை மாறி கொண்டு இருக்கிறார்கள்;. இவர்களை திருத்த உங்கள் எழுத்தை திருப்புங்கள். வெறும் பிஜெ,பிஜெ என்று 24மணிநேரமும் முழு சிந்தனையும் திருப்பி அவதூறு பரப்பி கொண்டு இருந்தால் கூடியவிரைவில் நீங்கள் சட்டையை கிழித்து கொண்டு நடு தெருவில் பைத்தியமாக திரிவது உறுதி. மற்றும் மறுமையில் ஒரு தனி மனிதன் மீது அவதூறு பரப்பியதற்காக அல்லாஹ்விடம் பெரிய தண்டனையும் கிடைக்கும்.

இதற்கான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சகோ.பிஜெயை திட்டாமல் நேரிடையாக பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களின் மனநோயின் மாற்றத்திற்காக இறைவனிடம் பிராத்திக்கும்.
ஹசன்.




0 Comments:

Post a Comment

<< Home