|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 03, 2006

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஏகனின் திருப்பெயரால்...
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

சகோதரர்கள் உண்மையை உரத்து கூறும் உமர், தீன் முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய மெயில் கண்டேன். தமுமுக என்ற அமைப்பை உருவாக்கிய அமைப்பாளர் சகோ.பிஜெவை நயவஞ்சகதனமாக அவருடன் இருந்த ஜவாஹிருல்லா, ஹைதர் அலி போன்றோர் பதவி, பணத்தாசையால் சதிதிட்டம் போட்டு வெளியேற்றி. அவர் வெளியேறிய மறுநாளே அவரை திட்டுவதற்காகவும் அவர் மீது பொய், அவதூறுகளை பரப்புவதற்காகவும் கள்ள இணையத்தை உலகிலேயே முதல்முறையாக தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான மெயில்களை பரப்பிவரும் தமுமுக பொட்டை நிர்வாகிகளில் ஒருவனான இளையவனை தமுமுகவை சேர்ந்த பெரும்பாலான சகோதரர்களே சைத்தான், பொய்யன் என்று கூறி அவனை மதிக்காமல் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அவனுக்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டு இருக்கிறீர்களோ தெரியவில்லை. அவனது இணையதலத்தை பார்பவர்கள் உலகில் நீங்கலாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இந்த இளையவனும், மேலப்பாளைய சைத்தானும் என்ன பாட்டு பாடினாலும் கேட்பதற்க்கு யாரும் தயாரில்லை. குறிப்பாக தமுமுக சகோதரர்களே தயாரில்லை எனும் பொழுது மற்றவர்களை சொல்ல வேண்டுமா?

சகோதரர்களே உங்களுக்கு எழுத்து திறமை அதிகமாக உள்ளது. அதை சரியானபடி பயன்படுத்துங்கள். எந்த இயக்கத்தையும் ஒரு சார்பாக சாராமல் யார் தவறு செய்தாலும் அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டுங்கள். பெரும்பாலும் தமுமுகவே, ததஜவோ அந்த தலைமையை பற்றி கட்டுரை வெளியிடுங்கள். இளையவன் போன்ற இப்லிஸ்களை புறந்தள்ளுங்கள்.

குறிப்பாக தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்ற ததஜவை இன்று விமர்சிப்பதற்க்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் இன்று அவர்கள் நடுநிலமையோடுதான் எதையும் செய்கிறார்கள். ஆனால் தமுமுக என்ற நடிகர் கூட்டம் திமுகவுக்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்து அந்த தமுமுக தலைவர்கள் செய்கிற கேடுகெட்ட செயல்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுத்து விபச்சாரி சல்மாவை சந்தித்தது, பிரச்சார மேடைகளில் வேட்பாளரை கையை தூக்கி கும்பிட வைத்தது, கூட்டணி மேடையில் இடமில்லாமல் மூலைகளில் தள்ளப்பட்டு அசிங்கப்பட்டது, முதல்வருக்கு வாழ்த்து கூற சென்று புறந்தள்ளப்பட்டது என்று அடுக்கி கொண்டே செல்லலாம். சமுதாயத்திற்க்கு ஏதோ செய்து கிழித்து விடுவோம் என்று கூறிகொள்ளும் இவர்கள் இன்று செய்யும் சமுதாய பணிகள் தெரியுமா?.
1) திரைபடங்களை தலைமை தாங்கி வெளியிடுவது. அதிலும் ராம் திரைப்பட முஸ்லிம் விரோத இயக்குனர் அமீருடன் கூடி கூத்தடித்தது.
2) கவிதை புத்தக வெளியீடு என்ற வெட்டி வேளைக்கு தொடர்ந்து தலைமை தாங்குவது, அது குறித்து வாய்கிழிய உரையாற்றுவது.
3) வேறு எந்த வேளையும் இல்லை என்றால் எதாவது ஆPஇ ஆடுயு க்களை தங்கள் தலைமைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்து அதை உலக மாகா சாதனை போல இணையத்தளம், பத்திரக்கை என்று வெளியிட்டு பெருமைபடுவது.
4) அந்த வேளையும் இல்லை என்றால் திமுக இதழான முரசொலியை மிஞ்சும்வகையில் திமுகவை கண்முடி ஆதரித்து, ஜால்ரா அடித்து பத்திரிக்கை வெளியிடுவது.
5) அதுவும் இல்லை என்றால் திமுக டிவியில் தலை காட்டுவது. அதை பெரிய வீர சாதனை போல விளம்பர படுத்துவது.

இது போன்ற தொடர் செயல்களைத்தான் தமுமுக தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் கண்ணியத்தின் காப்பகமாக இருந்ததை இன்று களியாக்கி விட்டார்கள். அன்று செய்த பல சமுதாய பணிகள் இவர்களிடம் இருந்து இன்று வெளியேறி வெளியே சென்றது ஏன்?. ததஜ எதை செய்தாலும் போட்டிக்கு செய்யும் இவர்கள் தற்போது ததஜ தலைமை பல நூறு மாணவர்களை வைத்து கோடைகால பயற்சி முகமை மிகப்பெரிய அளவில் நடத்தும் பொழுது தமுமுக ஏன் அது போல பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. வருமானம் வரக்கூடிய பித்ரா, ஜக்காத், பத்திரிக்கை கட்டுரை போன்றவற்றில்தான் இவர்கள் போட்டி போடுவார்களோ?. செலவு செய்யக்கூடிய சமுதாய பணிகளை செய்யாமல் இருப்பது ஏன்?.

அதுமட்டும் இல்லாமல் ஜெயலலிதா அமைத்த இடஒதுக்கீடு ஆணையத்தை வேஸ்ட் பேப்பர், போலி ஆணையம் என்றது ஆனால் இன்று அது சரியான ஆணையம்தான் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதே போல மதமாற்ற தடை சட்டத்தை ஜெயலலிதா வாபஸ் வாங்க வில்லை என்று தமுமுக பிரச்சாரம் செய்தது ஆனால் அது வாபஸ் வாங்கப்பட்டது உண்மை என்பதை திமுக அரசு ஒத்துக் கொண்டது. மற்றும் தமுமுகவின் 2004 ஃபித்ரா திருட்டு, 2005 ஆண்டு ஃபித்ரா திருட்டு, சுனாமி திருட்டு பல உண்மைகள் மக்களுக்கு செல்ல வேண்டியுள்ளன. எனவே இதை மக்களுக்கு கொண்டு செல்ல முழு முயற்சி கொள்ளுங்கள்.

எனவே சகோதரர் தீன் முஹம்மது, உமர் அவர்களே இது போன்ற தீய தலைவர்களை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பெரும்பாலான சகோதரர்கள் இது போன்ற தலைவர்களின் உண்மை சுயருபத்தை தெரிந்திருந்தாலும் சில சகோதரர்கள் இவர்கள் இன்னும் இந்த சமுதாயத்திற்க்கு பெரிதாக எதையோ செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பதை அடையாளம் காட்டி விழிப்படைய செய்யுங்கள். மேலும் எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்புங்கள்.
நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் நடத்துவானாக.

வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.

1 Comments:

At 7:30 PM, Anonymous Anonymous said...

சகோதரரின் ஆக்கத்தில் சமுதாயத்தை பற்றிய உள்ளக்குமுரல் அப்படியே வெறியாகியுள்ளது. வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< Home