|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 31, 2006

விளக்கங்கள் தேவை...

பிஸ்மில்லா...

சவுதியின் மத்திய தமுமுக கிளையின் பொருப்பாளர் இளையவன்-ராவுத்தர்-இப்னு பாத்திமா-வேங்கை-அபாபில் என்கிற புனைபெயருடன் மெயில்களை வெளியிடுகிற ஹீசைன் கனி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் மெயிலை கண்டேன். அதில் உள்ள பல செய்திகள் நம்பும்படியாக இல்லை எனNவு எனக்கு சில விளக்கங்கள் தேவை. எனவே எனது கேள்விக்கு விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

1) தவ்ஹிதுதான் தமுமுகவின் வளர்சிக்கு முட்டுக்கட்டை என்று மவுலவி.பிஜெ பொய் சொன்னதாக எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் பேரா.ஜவாஹிருல்லா தன் கையெழுத்து போட்டு தவ்ஹித் பிரச்சாரம்தான் தமுமுகவின் வளர்சிக்கு தடை என்று ஒத்து கொண்டாரே அதை பற்றி உங்கள் விளக்கம் என்ன? அப்பொழுது அவர் மனநிலை சரியில்லாமல் பைத்தியமாக இருந்தார் பிஜெ ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டார் என்று நீங்கள் சொன்னால்; சொல்வதை நம்பலாம் ஆனால் தெளிவாக இருந்தார் என்றால் அவ்வாறு கையெழுத்து போட்டு கொடுத்தன் காரணம் என்ன விளக்கவும்?.

2) தான் வெளியேற்றப்பட்டதற்க்கு தமுமுக தலைவர்களின் சதிதான் காரணம் என்று மவுலவி.பிஜெ பொய் சொல்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படி என்றால் மவுலவி.பிஜெ தமுமுக தலைமையை கைப்பற்ற போகிறார் என்று தமுமுக தலைவருக்கு நெருக்கமானவர்களால் அவதூறு பரப்பபட்டதே இதை சதியின் ஒரு கட்டம்தானே இதை நீங்கள் மறைக்க முடியமா?, பேராசிரியரின் ஜெனிவா பயணத்தை தொடர்ந்து சவுதிக்கு வருகைதந்து ஜித்தாவில் ஒரு ரகசிய கூட்டம் நடத்தப்பட்டு அங்கு பிஜெவை வெளியேற்ற சதித்திட்டம் வரையருக்கபட்டதே இதை உங்களால் மறுக்க முடியுமா?

3) மார்க்க பிரச்சாரத்திற்க்கு பிஜெ பணம் வாங்குவதாக ஆதரமற்ற ஒரு அவதூரை வெளியிட்டு இருக்கிறீர்கள். அப்படி எதாவது ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். அதை விட்டு பித்னா செய்யாதீர்கள். உண்மையிலேயே பிஜெ பணம் வாங்குவதாகஇருந்தால் தற்போது அவர் தமிழக கோடிஸ்வரர்களில்; ஒருவராக இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு தெரிந்து அவர் சுமார் ஆயிரக்கணக்கான கூட்டத்திலாவது பேசி இருப்பார். ஓரு கூட்டத்திற்க்கு சிலஆயிரம் என்று வைத்தாலும் அவர் கோடிஸ்வரராக இருந்திருப்பார். சகோ.பிஜெ தமுமுகவில் இருந்த காலத்திலாவது எந்த ஊரிலாவது பேசுவதற்காக பணம் வாங்கினார் என்று சொல்ல முடியுமா?. மார்க்க கூட்டத்தை பயன்படுத்தி நபி மருத்துவம் என்று ஜீரக எண்ணையை விற்று கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சகோ.பிஜெ எந்த பணமும் எந்த வகையிலும் பெற மாட்டார் என்பது உலகறிந்த விசயம். உண்மையை சொன்னால் அதுதான் அவருடைய பிளஸ் பாயின்டும். எனவே அவதூறு பரப்புவதற்க்கு முன் யோசித்து எதையம் பரப்புங்கள்.

4) கலைஞரை சந்திக்க மவுலவி பிஜெ சென்ற போது அவரை கையெடுத்து கும்பிட்டார் என்று ஆதாரமற்ற பொய்யை சொல்லி அதானால் அவர் தவ்ஹிதுக்கு எதிரானவர் என்கிற நீங்கள் சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஹைதர் பாய் அவர்கள் மண்ணடியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டாரே அவரை தவ்ஹிதுக்கு எதிரானவர் என்று அறிவிக்க தயாரா?. மற்றும் நடந்த தமிழக தேர்தலில் ஒவ்வொரு தமுமுக மேடையிலும் வேட்பாளர்களை கையெடுத்து கும்பிட வைத்து ஓட்டு கேட்டார்களே அதையும் எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பு செய்தார்களே அந்த உங்கள் தமுமுகவை தவ்ஹிதுக்கு எதிரான அமைப்பு என்று அறிவிக்க நீங்கள் தயாரா?

5) லப்பைகுடிகாடில் சமாதி வழிபாடு கூடும், மவுலுது ஓதலாம், பாத்திஹா ஓதலாம், மத்ஹபை பின்பற்றலாம் என்ற கலப்பு தலைப்பில் சுன்னத் ஜமாத் அறிஞரும் தவ்ஹிதை தமிழகத்தில் கடுமையாக எதிர்க்க கூடியவரும் ஷேக் அப்துல் ஜமாலி அவர்கள் பேசினார்கள். அவருடைய நிகழ்சிக்கு தமுமுகவினர் தங்கள் சீறுடையில் அந்த நிகழ்சியை சிறப்பாக நடத்தி கொடுத்தனர். இது பரவலாக அனைவருக்கும் தெரிந்த செய்தியாகையால். வேறு வழியில்லாமல் இதை நீங்கள் ஒத்து கொண்டிர்கள். ஆனால் தமுமுக உடையை கேசுவலாக அணிந்திருக்கலாம் என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள். தமுமுக உடை என்ன பைத்தியக்கார ஆஸ்பத்திரியல் போடும் பச்சை உடையா? எப்பொழுதும் அணிந்து கொண்டு இருக்க?. எதாவது நிகழ்சி என்றால்தான் தமுமுக உடையை அதன் தொண்டர்கள் அணிவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கேசுவலாக அணிந்தார்கள் என்பது வெட்டிவாதமாகும். அந்த தவ்ஹித் எதிர்ப்பு நிகழ்சியை பற்றி சப்பை கட்டு கட்டும் நீங்கள் கடையநல்லூரில் தொழுகையில் விரலசைப்பது, தொப்பி போட்டு தொழுவது குழப்ப செயல் என்று பகிரங்கமாக தமுமுக கிளையின் பெயரை போட்டு நோட்டிஸ் அடித்து வெளியிட்டார்களே அதை பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்?.அப்படி பட்ட தமுமுகவை தவ்ஹிதுக்கு எதிரான அமைப்பு என்று அறிவிக்க தயாரா?. அதை விட்டு வெளியேர தயாரா?

6) தர்கா வழிபாடு, சந்தன கூடு, கந்தூரி ஆகியவை கூடாது என்று குர்;ஆன் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து முத்துப்பேட்டையில் ததஜ வெளியிட்டதற்க்கு அந்த ஊரை சேர்ந்த பாக்கர் அலி லெப்பை என்பவர் போலிஸில் பொய்புகார் கொடுத்து ததஜவினர் கைது செய்து ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்க நினைத்தார். அந்த அலி லெப்பையை தமுமுகவின் ஆம்புலன்ஸ் விழாவில் முன்னிலை படுத்தி கௌரவப்படுத்தப்பட்டாரே அப்படிபட்ட தமுமுகவினர்தான் தவ்ஹித் வாதிகளா? அல்லது தவ்ஹிதுக்கு ஆதரவாலர்களா?. இதற்க்கு பதில் சொல்லுங்கள் சகோதரரே?.

7) பொட்டல்புதூர் என்ற ஊரிலே வரதட்சனைக்கு எதிராக போர்டு வைத்த தவ்ஹித்வாதி அப்துல்காதர் என்பவரை சுன்னத் ஜமாத்துடன் சேர்ந்து கொண்டு ஊரை விட்டு தள்ளிவைத்தும் தமுமுகவை விட்டும் அவரை ஹைதர் பாய் வெளியேற்றினாரே அப்படிபட்ட தமுமுகவை தவ்ஹித் இயக்கம் என்று சொல்ல உங்களுக்கு எப்படிதான் மணம் வருகிறதோ தெரியவில்லை?

8) சவுதியிலும் மற்ற வளைகுடா நாடுகளிலும் வசூலுக்காகவும், தவ்ஹிதின் பெயரை சொல்லாமல் இயக்கம் நடத்த முடியாது என்பதால் தவ்ஹித், தவ்ஹித் என்று குரல் கொடுப்பதும் ஆனால் தமிழகத்தில் தவ்ஹிதுக்கு எதிராக எல்லா வகையிலும் காய்நகர்த்துவதும் தமுமுகவின் வழக்கமான செயல்?. இயக்கவெறி என்ற போதையிலிருந்து வெளியே வந்து பாருங்கள் உண்மை புரியும்?

உங்கள் கூற்றுபடி உண்மையிலேயே தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்றால் அதன் பெயரை போட்டு தவ்ஹித் பிரச்சாரத்திற்க்கு கடுமையான எதிர்பு உள்ள லால்பேட்டை, வேலூர், சுல்தான் பேட்டை, பொட்டல்புதூர், சிதம்பரம் போன்ற ஊர்களில் ஒரே ஒரு தவ்ஹித் கூட்டம் போட தயாரா?. அப்படி ஒரே ஒரு கூட்டத்தை போடட்டும் பிறகு தமுமுகவை ஒரு பேருக்காவது தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்று சொல்லலாம். அதுவரையாவது தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவான இயக்கம் என்று காமெடி செய்யாமல் இருங்கள்.

தமுமுக கலிமா சொன்ன முஸ்லிம்களுக்காக பாடுபடுவதாக கூறி கொள்கிறது, ஆனால் தவ்ஹித் சகோதரர்களுக்கு எதிராக களத்தில் உள்ளது அப்படி என்றால் தவ்ஹித் சகோதரர்கள் கலிமா சொல்ல வில்லையா?. தமுமுக தவ்ஹிதுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை தயவு செய்து தமுமுக தவ்ஹிதை எதிர்காமலும், ஆதரிக்காமலும் இருந்தாலே போதும்.

அன்புடன்..
ஹசன்.

0 Comments:

Post a Comment

<< Home