|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, August 02, 2006

விடியல் கும்பலின் விஷமத்தனம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்


செய்தி கிடைக்காத ரய்சுதீனுக்கு குமுதம் ரிப்போர்ட் ஒரு சர்க்கரைப் பொங்கல்


நடிகைகளுடைய பிறந்தநாளையும் அவர்களுடைய அந்தப்புற சல்லாபங்களையும் , துல்லியமாகப் புலணாய்வு செய்து தருகிற நம்பர் ஒன் வாரஇதழ் குமுதம், நடிகைகள் வீட்டுநாய் என்னபிஸ்கட் திண்ணும் என்பதை துல்லியமாகப் புலணாய்வு செய்துதரும் நம்பர் ஒன் வார இதழ் குமுதம் மேல்படி விஷயங்களில் மற்ற புலணாய்வு ? இதழ்களைவிட அன்றுமுதல் இன்றுவரை முதலிடம் வகித்து வருவது குமுதம் என்பதை எல்லோரும் அறிவோம்.


அப்படிப்பட்ட குமுதம் மூதறிஞர் பிஜே அவர்கள் ஹிட்லிஸ்டில் முதல் இடம் வகிப்பதாகக் கூறியதாம் ?


நாம் கேட்கிறோம் ? குமுதம் தரும் அனைத்து தகவல்களையும் சரி காண வருகிறீர்களா ? இதுவரை குமுதத்தை இப்படித் தான் பார்த்து வந்தோமா? புலணாய்வு விஷயங்களை சேகரித்து தருவதில் குமுதம் நம்பர் ஒன் வாரஇதழ் தான் என்று சர்டிபிகேட் தரப்போகிறீர்களா ? அல்லது தனது வலைப்பதிப்பை நக்கீரன், ஜூனியர் விகடன் வழியில் கொண்டு செல்ல பரபரப்பு செய்தி என்று உண்மையை பொய்யுடன் கலந்தும் அல்லது திரித்துக் கூறியும் சிண்டு முடியும் பணியை முடிக்கி விடப் போகிறீர்களா ? பிஜேயை எதிர்ப்பதற்காக என்னக் கேவலத்தையும் அடைந்து கொள்வதெனும் முடிவுக்கு வந்து விட்டீர்களா ? ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் செய்தி கிடைக்காத ரய்சுதீன் குமுதம் ரிப்போர்;ட்டை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகிறார்.


கோவையில் பிடிபட்டவர்களுடைய டைரியில் பிஜேயுடைய பெயர் இருந்ததாம் ?


இதனால் மூதறிஞர் பிஜே அவர்கள் அதில் உடந்தையாகி விடுவாரா ? பிஜே அவர்களை பிடிக்காத குலாம் முஹம்மது அவருடைய பெயரையும், நம்பரையும் கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி தனது ஆட்களிடம் உத்தரவிட்டிருப்பார் என்பது உலகறிந்த விஷயமல்லவா ?


ரய்சுதீனிடம் நாம் கேட்கும் சிலகேள்விகள் ????

இமாம் அலியுடைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணமுடித்ததற்காகவும் ஆர்.எஸ்.எஸ் அலுவலக தகர்ப்பில குற்றம் சாட்டப்பட்ட பலருடைய செல்போன் நம்பர் கைப்பற்றப் பட்டதற்காகவும் ஹாமித்பக்ரியை கைதுசெய்து சிறையிலடைத்தார்கள் அவருக்காக விடியல் எத்தனை இடத்தில் போராட்டம் நடத்தியது ? பேரணி நடத்தியது ? பட்டியலிடடுக் கூறத்தயாரா ? கோவை சிறைவாசிகளுடைய விடுதலைக்காக விடியல் எத்தனை இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தது ? பேரணி நடத்தியது ? பட்டியலிட்டுக் கூறத்தயாரா ?

தமுமுக போராட்டம் அறிவித்து விட்டதாம் ? ததஜ இதுவரை எதுவும் அறிவிக்க வில்லையாம்


ததஜடைய அனைத்து எதிரிகளும் அவர்கள் யாராக இருந்தாலும் என்ன அமைப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களுடன் தோள் கொடுப்பதில் முக்கியத்தவம் காட்டி வருகிற தமுமுக பிஜேயைப பிடிக்காத விடியலுக்காக ஏன் போராட்டம் செய்யமாட்டார்கள் என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்வார்கள் அதிமேதாவி ரய்சுதீனுக்குப் புரியாமல் போனது ஏன் என்பது தான் மர்மமாக உள்ளது.


சரி அதெல்லாம் போகட்டும் இப்பொழுதும் குலாம்முஹம்மது தன்னுடைய அமைப்பின் மீது ஏற்பட்ட கலங்கத்தை துடைத்தெறிவதற்கு தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தாதது ஏன் ? ஜனநாயக நாட்டில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி தனது கோரிக்கைகளை அடைந்து கொள்வதற்கு அவர்களுக்கு தடையாக இருந்தது எது ? அல்லது அவர்களுடைய அமைப்பின் அஜென்டாவில் அது போன்று போராடி சலுகைகளை பெறவேண்டிய தேலையில்லை என்று எழுதப்பட்டுள்ளதா ? அவ்வாறு அவர்கள் செய்யவில்லை எனும்போது அர்களுக்காக ரய்சுதீன் உலகைக் கூவி அழைப்பது ஏன் ? பதில் கூறுவாரா ?



எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவனைப் போன்றவனாவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: அபூதாவூத், அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்


குறிப்பு : கோவையில் பிடிப்பட்டவர்களை எம்.என்.பியைச் சேர்ந்தவர்கள் தான் என்கிற காவல்துறை அறிவிப்பை நாம் அங்கீகரிக்கவில்லை, ஆனாலும் குற்றத்தில் சம்மந்தப்பட்டவர்களை ரய்சுதீன் தனது வலைப்பதிப்பில் பகிரங்கமாக அங்கீகரிப்பதையும் அதை வேறு ஒரு அமைப்புடன் முடிச்சுப்போட்டு சிண்டு முடிந்து விடுவதையும் எதிர்ப்பதுவே நமது நோக்கமாகும்.

0 Comments:

Post a Comment

<< Home