|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, August 02, 2006

பிறரைப் போல பாவனை செய்பவன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்


எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

பிறரைப் போல பாவனை செய்பவன்


இதற்கு முன் நாம் அனுப்பிய '' குமுதம் ஸ்பெஷல் '' கட்டுரையில் எமது பெயருக்குக் கீழ் சிலருடைய பெயர்களை இணைத்து '' கவாப் '' மெயிலில் எமது மெயில் ஐடியைப்போல் கிரியேடிவ் செய்து அவரிடத்தில் உள்ள ஐடிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக பப்ளிஸ் செய்திருந்தார் பிறரைப் போல பாவனை செய்பவன் என்னைச் சேர்ந்தவனல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தனக்குப் பிடிக்காத ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் முஸ்லிம் உம்மத்தை விட்டு வெளியில் போகவும் மேல்படியார் தயங்க மாட்டார் என்பதை எமது ஐடியைப்போல் உருவாக்கி அதில் அந்த கட்டுரைக்கு எள் முனையளவும் கூட சம்மந்தமில்லாத சில சகோதரர்களுடையப் பெயரை புகுத்தி தன்னை யாரென்றும் தனது நோக்கம் எதுவென்றும் தம்முடைய தரம்தாழ்ந்த இந்த செயல்பாட்டின் மூலம் நிரூபித்து வருவதை ஓரளவு இனையத்தில் அனுபவமுள்ளவர்கள் இது யாருடைய ஐடியிலிருந்து வந்தது என்பதை புரிந்து கொள்வார்கள்.


ஜிமெயிலில் கிரியேடிவ் செய்ய முடியவில்லை என்பது தெளிவாகிறது அதனால் கவாப் மெயிலில் கிரியேடிவ் செய்துள்ளார்.


நம்மாலும் இதை இன்னார் தான் செய்திருப்பார் என்று யூகிக்க மட்டும் முடிகிறது அதனால் அவருடைய பெயரை எழுதி இவர் தான் என்றுக் கூற நாம் தயாராக இல்லை. அவரைப் போன்று கற்பனையாக குற்றம் சுமத்த நாம் விரும்பவில்லை.


(ஆனாலும் இதில் நமக்கொரு சந்தோஷமான விஷயம் யாதெனில் நமது கருத்துக்கள் இன்னும் பலரை சென்றடைய அவருடைய இந்த செயல்பாடு மாபெரும் உதவியாக அமைந்தது என்பதாகும் உமராகிய நாம் யாருடைய சொல் கேட்டும் எழுதுபவரல்ல என்பதை எமது மெயிலைப் பார்வையிடுபவர்களுக்கு நன்றாகத் தெரியும் இன்னும் நமது பெயருக்குக் கீழ் அவருடைய மனோஇச்சைப் பிரகாரம் எத்தனைப் பேரை சேர்த்துக் கொண்டு இன்னும் அதி தீவிர முயற்சியில் இறங்கி ஜிமெயிலில் கிரியேட் பண்ணினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தன்னைத் தானே அவர் ஏமாற்றிக் கொண்டதாகவே கருதப்படும்.)


ரஅயச.நஅயடை.ரஅயசளூபஅயடை.உழஅ இதுதான் நமது ஈமெயில் ஐடியாகும் நம்மைப் போன்று பாவனை செய்த மேல்படியாருடைய ஐடி ரஅயச.நஅயடை.ரஅயசளூபயறயடி.உழஅ இதுதான். இப்பொழுது உங்களால் ஓரளவு வியூகித்திருக்க முடியும் அது யார் ? என்று


இதன் மூலமாவது அவர் ஒருப்பெரும் பொய்யர் என்றும், மோசடியாளர்; என்றும் இரட்டை வேடதாரி என்றும் புரிந்துகொண்டு இதிலிருந்தாவது அவரை நீங்கள் ஓரங்கட்ட முன் வரவில்லையென்றால் அவர் விழப்போகும் அதளபாதாளத்தில் உங்களையும் இழுத்துக் கொண்டுப்போய் விழுத்தாட்டுவார் என்பதை இந்த நூதன ஐடி கிரியேட்டிவ் திருட்டு மூலம் புரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளுங்கள்.


மேலும் மேல்படியாருடைய ஆதரவு அமைப்புகளுடைய செயல்பாடுகள் விரல் விட்டு சொல்ல முடியாதவைகளாகவே உள்ளன என்பதுடன் இதற்குமேலும் அவர்களுடைய செயல்பாடுகள் காணல் நீராகவே காட்சியளிக்கும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அடித்தளம் வலுவில்லாத எந்த அமைப்பும் (குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில்) ஃபீல்டில் நிலைத்ததாக வரலாறு இல்லை. அதனால் ஏகத்துவ அடிப்படையில் நிலை நிருத்தப்பட்ட மக்களை ஏமாற்றி திசைதிருப்புவதே அவர்களது பிரதான நோக்கமாகும் அவர்களுடைய கண்கட்டி வித்தையை பரப்புவதற்கு கைக்கூலியாக வளைகுடாவில் நிருத்தப்பட்டவர் தான் மேல்படி நூதன ஐடி கிரியேட்டிவ் திருடன்.



குறிப்பு:

சென்னையில் கோவை சிறைக் கைதிகளுடைய விடுதலைக்காக மாபெரும் பொதுக்கூட்டம் அதில் ததஜ மட்டும் கலந்து கொள்ளவில்லையாம். ததஜ வின் இந்த செயல்பாடு நெருடலாக உள்ளதால் தமிழகத்தில் தனிமைபடுத்தப்படும் என்று இவர்களோடு சேர்ந்து மாற்று மதத்தவர்களும் கருதுகின்றார்களாம்.


எந்த மாற்று மதத்து அமைப்பு அறிக்கை விட்டது அதை ஏன் வெளியிடவில்லை இதிலிருந்து கற்பனையாகவே பலவிஷயத்தையும் உண்மைக்குப் புறம்பாக கூறுகிறார்கள் விடியாதவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேணடும.;


மேலும் ததஜ எப்படி கலந்து கொள்ளும் ? பிஜேயுடைய தலையீட்டால் தான் அவர்கள் தொடர்ந்து சிறையில் வாடுவதாக அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகள் விடுகிறார்கள் ,


சிறைக் கைதிகளுடைய நலனை மற்ற எல்லா அமைப்புகளைக் காட்டிலும் தனிமனிதனாகிய நான் செய்துள்ளேன் ( தான் சார்ந்துள்ள அமைப்பைக் காட்டிலும்) என்று ஒருவர் தனியாக அறிக்கை விடுகிறார்.


பிஜே எதுவுமே செய்யவில்லை குழப்பத்தை தான் உண்டு பண்ணுகிறார் என்றும் கூறுகிறீர்கள். பின் எதற்கு அவர் போராட்டம் செய்ய வேண்டும் ?


உதாரணத்திற்கு ஒருக் காரியத்திற்காக ஒருவரை அனுகுவதாக இருந்தால் இதற்கு நீங்கள் தான் தகுதியானவர் இதை செய்துகொடுங்கள் என்றுக் கூறினால் அதை செய்து கொடுக்க அவரும் முன்வருவார் மாறாக இதை நாசமாக்குவதற்கு நீங்கள் தான் தகுதியானவர் இதை செய்து தாருங்கள் என்றால் எப்படி அதை செய்து கொடுக்க முன்வருவார் ?


கடந்த ஜெயலலிதாவுடனான ததஜ சந்திப்பில் கோவை சிறைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கும்படி கோரிக்கை வைத்ததையும் இருட்டடிப்பு செய்தீர்கள், ஜாமீனில் விடுவதற்கு ஆவன செய்வதாக வாக்களித்த ஜெயலலிதாவை தோற்கடிப்பதற்கு உங்களாலான அனைத்து கைங்கரியங்களையும் செய்தீர்கள் இப்பொழுது ததஜவைத தவிற என்று போல்ட் செய்து காட்டி உள்ளீர்களே ?


உண்மையில் பகுத்தறிவை இழந்து விட்டீர்களா ? அல்லது மக்களை ஏமாற்ற கபடநாடகம் ஆடுகிறீர்களா ? எதை செய்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான், உங்களுடைய எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் செயல்பாட்டின் மூலம் மக்களும் தெளிவடைந்து வருகிறார்கள்.


அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home