|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 03, 2006

தள்ளாடும் தமுமுக

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
இஸ்லாமியக் கொள்கைகளை தவிடு பொடியாக்கும் முயற்சியில் இறங்கிய தமுமுக என்ற அமைப்பு, இஸ்லாத்தின் அடிப்படை அறியா சில பெயர்தாங்கிகளின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, இந்தியாவில் பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி தனது முயற்சியில் வெற்றி பெற்றதை தமிழத்திலும், தமிழகம் சார்ந்த வெளிநாடுகளில் வசிப்போரும் நன்கு அறிவீர்கள்.

அரசியலில் களம் இறங்குவதாக கூறிக்கொண்டு, சுனாமி, ஃபித்ரா போன்ற அமானிதங்களை வெகுவாக கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் தேர்தல் செலவுக்காக தங்களின் தலைவர்களிடமிருந்து பெற்ற பெட்டிகளிலும் அவர்களை சூழ்ந்துள்ளவர்களுக்கு சரியானபடி பங்கீடு செய்யாததால் தமுமுகவில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனை சரிகட்ட இன்னும் சில நாட்களில், தலைவர்களும், மாவீரர்களும் வசூல் படையெடுப்பு நிமித்தமாக அரபு நாடுகள் செல்ல இருக்கின்றனர். அங்கு வரும் மாவீரர்களுக்கும், பலமுகதன்மை படைத்த தலைவர்களுக்கும், வேங்கை, அபாபீல், ராவுத்தர் போன்றோர் சிறப்பான வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் செலவு என்ற பெயரில் அடித்து மாற்றிய பெட்டிகளுக்கும், மக்களின் உயிர்குடித்த சுனாமி பெயரில் சுரண்டிய பெரும் தொகைகளுக்கும், சரியானபடி வரவு செலவு இல்லாததால் தலைவர்களுக்குள் சிலர் தமுமுக கட்சிக்குள்ளேயே ஆள் சேர்த்து வருவதாகவும், கூடிய சீக்கிரம், தமுமுக வலது, தமுமுக இடது என்ற நிலையும் வந்துவிட்டதாகவும் தெரிகின்றது.

இந்த நிலைமையில் விசா வியாபாரி கோவையில் வெடிமருந்து பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களை விசா வியாபாரி பத்திரிக்கை சந்திப்பாளர்களுக்கு காவல் துறையினரை கண்டித்து அறிவிப்பு கொடுக்கிறார், இது ஒரு பக்கம் இருக்க தமுமுகவின் பலமுகத்தனமை தலைவர் படுபயங்கரமாக தமுமுகவிற்காக விளம்பரம் செய்து வரும் நக்கீரன் பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளார்.

படிபப்பவர்கள் அனைவரும் தமுமுகவினர் என்று நினைத்துவிட்டார்கள் போலும். கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களை நாங்கள் தான் பொறுக்கிக் கொடுத்தோம் என்று மார்தட்டுபவர்கள் தங்கள் தலைமையான கருணாநிதிக்கு அல்லவா கணடணம் தெரிவிக்க வேண்டும். கருணாநிதியின் ஆட்சியில் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றபடுவதும். கடந்த கருணாநிதியின் ஆட்சில் கைது செய்யப்பட்டு ஒன்று மறியா பாலகர்கள் முதல் செய்யாத செயலுக்காக தண்டணை அனுபவித்து வருவபர்களுக்கு ஜாமீனில் கூட விடக்கூடாது என கங்கனம் கட்டிவரும் திருவா(ரூரா)ளாருக்கு கண்டனம் செய்யக் கூட வக்கத்துப் போன தமுமுக அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்கு என்ன செய்ய இயலும்.

அன்புடன்
ஆதம்

0 Comments:

Post a Comment

<< Home