|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 07, 2006

வாசகர் மடல்,

வெளிச்சம் இணையதளத்தாருக்கும், வாசகர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். யாராவது ஒருவர் குறுக்கு வழியில் புகழ் பெற வேண்டும் என்று நினைத்தால் ததஜவை திட்டினால் போதும் அந்த அமைப்பை சேர்ந்த பல பேர் பதில் கொடுத்து பிரபலபடுத்திவிடுவார்கள் என்பதை இலாஹி, காசிமி விசயத்தில் நிறுபித்து விட்டீர்கள். அதே போன்ற ஒன்றை தற்போதும் செய்யாதீர்கள். நான்கு பேருக்கு தெரியாத, எந்த சமுதாய பணியிலும் ஈடுபடாத ரயிசுதீன், தென்சாசி சித்திக் போன்றோர் தங்களை பிரபலபடுத்த செய்கிற திட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கட்டுரையில் தனி நபருடைய பெயரை தவிர்க்கவும். கடந்த முப்பது வருட சமுதாய பணியில் உள்ள சகோ.பிஜெ, சகோ.பாக்கர் போன்றோரை தயவு செய்து இந்த ஏசி அறை படைப்பாளிகளுடன் ஒப்பிடாதீர்கள்.
அக்பர் பாஷா.
திருவண்ணாமலை.

எம்.என்.பி என்ற போலி ஜிகாத் வசூல் மோசடி இயக்கத்தின் செய்திகளை யாருமே வெளியிடாமல் புறக்கணிக்;கிற நிலையில் முகவைதமிழன் வரிந்து கட்டி கொண்டு செய்தி வெளியிட்டு பிரபலபடுத்துவது ஒன்றே அவர் விடியல் என்பதற்க்கு சான்று அல்லவா ?. அதிலும் பெண்கள் ததஜ, தமுமுக கூட்டத்தில் கூடும் கூட்டத்தில் நூரில் ஒரு பங்கு இல்லை. ஆனால் பயங்கர கூட்டம் கூடியது போல செய்தி வெளியிட்டு புல்லரிக்க வைப்பது ஏனோ?. இத்தனையும் செய்து கொண்டு தான் எந்த அமைப்பிலும் இல்லை என்பாராம் நாமும் நம்ப வேண்டுமாம்?.
ஹசன் பாருக்.
சவுதி அரோபியா.

தற்போது சிறையில் வாடுபவர்களில் பலபேர் குண்டு வெடிப்புக்க சம்மந்தமி ல்லாதவர்கள் மற்றும் அப்பாவிகள். ஆனால் சித்திக் என்பவர; சிறையில் உள்ளவர்கள் எல்லாம் பிஜெ சொல்லி குண்டு வைத்தவர்கள் என்று பகிரங்கமாக சொல்கிறார். இது போன்ற சமுதாய துரோகிகள் இருக்கும் வரை சிறைவாசிகளின் விடுதலைக்காக நாம் என்ன குரல் கொடுத்தாலும் அர்தமற்றதே.
அபுதாஹிர்.
துபை.



0 Comments:

Post a Comment

<< Home