|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, August 15, 2006

கருனாநிதி அரசின் இட ஒதுக்கீடு ஆணையம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த வருடம் குடந்தையில் நடத்திய உரிமை மீட்பு பேரணியின் எதிரொலியாக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கல்வி , மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்பட்ட முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு ஆணையம் அமைத்துக் கொடுத்து தனது கட்சிக்கு முஸ்லிம்களை வாக்களிக்கும் படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைக் கேட்டுக் கொண்டார் .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஜெயலலிதா அவர்களின் தோட்டத்திற்கு செல்லாமல் கோட்டைக்குச் சென்று ஆணையத்தைப பெற்றுக்கொண்டனர். அதற்கு நன்றிக்கடனாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பணயம் செய்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் பிரச்சாரம் செய்தனர்.

கருனாநிதியையும், அவருடன் கூட்டுச்சேர்ந்திருந்த கோயபல்ஸ் வகையறாக்களையும் இனங்கணடு கொண்ட முஸ்லிம்கள் கூட்டணி வலுவில்லாமல் களத்தில் நின்ற ஜெயலலிதாவிற்கு தங்களுடைய வாக்குகளை கனிசமாக வழங்கி எதிர்கட்சி எனும் அந்தஸ்த்துக்கு உயர்த்திச் சென்றனர் அதனால் கருனாநிதியின் அசைக்க முடியாத கோட்டைகள் ( சென்னை உட்பட) ததஜ வின் தீவிரப் பிரச்சாரத்தால் சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டது.

இந்த முறை முஸ்லிம்களுடைய கோபத்தை உணர்ந்து கொண்ட கருனாநிதி மேல்படி ஜெயலலிதாவின் வழியில் முஸ்லிம்களை வென்றெடுக்க முயன்றார் அதன் வெளிப்பாடே அவரது அதே ஆணையத்தை புதுப்பித்து அதற்கு இரண்டு வருட காலக்கெடு விதித்துள்ளார் வரவேற்கிறேம் கண்டிப்பாக நாம் எதிர்க்க வில்லை நம்முடைய நோக்கம் இழந்த நமது உரிமைகளை மீட்பதேயாகும் என்ன லட்சியத்தில் ததஜ வின் கீழ் குடந்தையில் குழுமினோமோ அந்த லட்சியம் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது அல்லாஹவுக்கேப் புகழ் அனைத்தும்.

ஆனாலும் ஜெயலலிதா அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆணையத்திற்கு உள்நோக்கம் இல்லாமல் ஒருவருட காலக்கெடு மட்டுமே விதித்திருந்தார், ஆனால் கருனாநிதி பாராளுமன்ற தேர்தலை உள்நோக்கமாகக் கொண்டு இரண்டு வருடம் காலக்கெடு விதித்திருப்பதாக உணர்கிறோம் அதனால் இது அவரால் வழமையாக முஸ்லிம்களை ஏமாற்றும் சதி திட்டமாகவும் தெரிகிறது கருனாநிதியுடைய ஆணையம் சதிதிட்டமாக இருக்குமேயானால் திமுகவை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரும், பெரும் போராட்;டக் களங்களில் குதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோயபல்ஸ் அவர்களே !!
தேர்தலுக்கு முன்பு ஒருவருட காலக்கெடு விதித்து இதே ஆணையத்தை ஜெயலலிதா அமைத்து தவ்ஹித் ஜமாதின் முஸ்லிம்கள் கூட்டமைப்புக்கு வழங்கியபோது பேராசிரியர் தனது கூலிப்படையுடனும் அவருடைய ஆதரவு பிரலபலங்கள் சிலருடன்; சேர்ந்து கொண்டு அது வெத்துப் பேப்பர், வெரும் பேப்பர் என்றுக் கூறி வாணத்திற்கும், பூமிக்குமாக குதித்தார், ஆணையத்தை பெற்றுக் கொள்ள கோட்டைக்குச் சென்ற கூட்டமைப்பினரை ஏமாளிகள் போன்று அது ஒரு நாடகம் போன்று சித்தரித்து புகைப்படத்துடன் அவரது ஆசியில் இயங்கும் அந்தப்புற கள்ள இணையத்தில் பிரசுரித்து புளங்காகிதம் அடைந்தார், அவரது வளைகுடா கைக்கூலி எழுத்தர்களைக் கொண்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் புதுப்புதுப் பெயர்களில் மனம் போனப் போக்கில் தீமைகளுக்கெதிராக எழுதுகோல் ஆயுதமேந்தி ??? என்று எழுதி தள்ளிக்; கொண்டிருந்தார்.

இப்பொழுது ஃபித்னாப் பேர்வழிகளாகிய புருடா மன்னர்களுக்கு தீமை எது ? தீமையை யார் தொடங்குவது ? தீமையை யார் ஒடுக்குவது என்று விளங்கி இருக்கும், அவர்களுக்கு விளங்காவிடிலும் விளங்க வேண்டிய பொதுவானவர்களுக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

பேராசிரியருடைய மகுடிக்கு முன் படம் எடுத்து ஆடியவர்கள் இப்பொழுது ஜெயலலிதா ஆணையமே வேறு ஒருவடிவில் வந்ததைக் கண்டு தனது பொந்துக்குள் போய் சுருண்டுக் கொண்டனர் .

யூத சியோனிஷர்கள் படிப்பினை பெறவேண்டும்
ஜவாஹிருல்லாஹ் சாப் அவர்கள் ஒருங்கிணைந்த தமுமுகவில் இருக்கும் போது அவர் தவ்ஹீத்வாதிகளுக்கு தலையாட்டும் கலையும், தமீம் அன்சாரி போன்ற தரீக்காவாதிகளுக்கு வாலாட்டிய கலையும்,

வெளியில் வந்தப்பிறகு இரண்டு இணையத்தை ஒரே நேரத்தில் வடிவமைத்து கள்ள இணையத்தில் வாலாட்டும் கலையும், ஒரிஜினல் இணையத்தில் தலையாட்டும்; கலையும்.

கொளத்தாங்கரையில் நெஞ்சுக்கட்டுடன் குளிக்கும் பருவப்பெண்களை தங்களது மகன்களுக்காக பெண் பார்க்கச் சொல்லி அனுப்பும் அறியக் கருத்தை? பரப்பும் மவ்லூதுக்கு வக்காலத்து வாங்கும் ஷேக் ? அப்துல் காதர் ஜமாலியுடைய நிகழ்ச்சிக்கு தனது தொண்டர் படையை சீருடையுடன் அனுப்பிவிட்டு தரீக்காவாதிகளுக்கு தலையாட்டும் கலையாகட்டும், அது விமர்சனத்துக்குள்ளானதும் அவர்கள் புதியவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கலந்து கொண்டார்கள் என்று தமீம் அன்சாரியை விட்டு எழுதச் சொல்லி தமுமுகவிற்குள் இருக்கும் தவ்ஹீத் வாதிகளுக்கு வாலாட்டும் கலையாகட்டும். பேஷ் . . . பேஷ்

பழுத்த யூத சியோனிஷம் அவரிடம் மண்டியிட்டு விட்டது என்றால் இது காழ்ப்புணர்வில் எழுதும் வார்த்தைகள் அல்ல. உண்மையையே உரத்துக் கூறுகிறேன்.
உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரலி நூல் அபூதாவூத்.
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

குறிப்பு :
முகவைத் தமிழனுடைய சமீபத்திய புலனாய்வு கண்டுபிடிப்பு அறிவிப்பு ஹசன் அலியை பற்றியதாகும் . ஜெயாவுடன் செய்து கொண்ட ஹூதைபியா உடன் படிக்கைக்காக , ஹசன் அலியை தோற்கடிப்பதற்காக கங்கனங்கட்டி ததஜ செயல் பட்டதாம் ?

தேர்தலில் திமுக வா ? அதிமுக வா ? என்பதுவே இருதரப்பிலும் முக்கியமாக இருந்தது மாறாக ஹசன் அலியா ? அல்லது அவரை எதிர்த்து நின்றவரா ? என்பதல்ல இருதரப்பு நோக்கம்.

ஹூதைபியா உடன்படிக்கை என்பது உலகம் அழியும் காலம் வரை ஒவ்வொரு முஸ்லிமும் மறக்க முடியாத சம்பவமாகும் நெஞ்சில் நிலைநிருத்தி வாழ்வில் ஒழுகி கடைபிடிக்க வேண்டிய உயிரைவிட மேலாக மதிக்க வேண்டிய நபிகளாருடைய வாழ்க்கை வரலாற்றை இனியும் ஒருதடவை நக்கலடிப்பதற்காக உபயோப படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

0 Comments:

Post a Comment

<< Home