|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, August 22, 2006

வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் அல்ல: அர்ஜுன் சிங்

வந்தே மாதரம் என்ற தேசபக்திப் பாடலைப் பாடுவது கட்டாயம் அல்ல, அவரவர் விருப்பம் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் விளக்கம்அளித்தார்.

Alboom-L22L

''வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவது எங்களுடைய மத வழக்கத்துக்கு முரணானது, எனவே இப்பாடலைப் பாடுமாறு முஸ்லிம் மாணவ, மாணவியரைக் கட்டாயப்படுத்தக் கூடாது'' என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறி வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும் கருத்து தெவித்துள்ளது.
இந்நிலையில் வாராணசி (காசி) நகல், ஜாமியா சல்அபியா என்ற இடத்தில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அர்ஜுன் சிங் இந்த விளக்கத்தை அளித்தார்.
''வந்தே மாதரம்'' என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல, ஆனாலும் முஸ்லிம்கள் விரும்பாவிட்டால் அதைப் பாடுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

0 Comments:

Post a Comment

<< Home