|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 24, 2006

இது எப்படி சாத்தியம்?


இறைவனின் திருப்பெயரால்...
தமுமுகவும் ஜாக்கும்.
தமுமுகவில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். அது மார்க்கத்திற்க்கு முரணாண அமைப்பு என்று ஃபத்வா கொடுத்தது ஜாக் அமைப்பு.(ஆதாரம் ஜாக் வெளியிட்ட வீடியோ). ஆனால் தற்போது ஹராமான தமுமுகவுடன் ஜாக் அடிக்கும் கூத்துக்களும், ஒவ்வொரு பள்ளியாக திருட அவர்கள் தமுமுகவுடன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அனைவரும் அறிந்ததே. அதாவது வளைகுடாவில் தமுமுக தொலைக்காட்சியில் ஜாக்கின் நிகழ்சிகளை ஒளிபரப்பும் அளவுக்கு இன்று நெருக்கமாகிவிட்டனர்.

தமுமுகவும் அபுஅப்துல்லாவும்.
அதே போல தமுமுக, ஜாக் மற்றும் அனைத்து இயக்கங்களும் வழிகேடே. இந்த அமைப்புகள் அனைத்தும் நவீன மத்ஹபே, இது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். எனவே அனைவரும் அனைத்து அமைப்புகளை விட்டும்; வெளியே வாருங்கள். ஜாமாத்துல் முஸ்லிமின் என்பதில் சேருங்கள் இது சில காலம் முன்பு அந்நஜாத் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் அபுஅப்துல்லா தொடர்சியாக தனது பத்திரிக்கை அட்டை படத்தில் வெளியிட்ட செய்தியாகும். இன்று அவருடைய நிலைமை என்ன நரகத்தில் சேர்க்கும் தமுமுகவுடனும், ஜாக்குடனும் பகிரங்கமாக உறவுவைத்து கொண்டுள்ளார்.

தமுமுகவும் மனநோயாளி இலாஹியும்.
டிசம்பர் 6க்காக துபையில் பல லட்ச ரூபாய் வசூலித்து அதை ஏப்பம் விட்டதற்காக அன்றைய தமுமுக நிர்வாகிகள் ஜவாஹிர், ஹைதரால் டிசம்பர் திருடன் என்று பட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்தான் இலாஹி. இவர் அன்று ஹைதரையும், ஜவாஹிரையும் திட்டி வெளியிட்ட நோhட்டிஸ்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இன்றும் சாட்சியாக உள்ளது. தற்போது இலாஹியை தனது கள்ள வெப்சைட்டின் ஆசிரியராக நியமிக்கும் அளவுக்கும், இந்த இலாஹிக்காக கடந்த தேர்தலில் திமுகவிடம் சீட்டு கேட்டு தவமிருக்கும் அளவுக்கும் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அன்று டிசம்பர் திருடனாக தெரிந்த இலாஹி இன்று தமுமுக தலைமை வேட்பாளராக தெரிகிறார்.

தமுமுகவும் சுன்னத் ஜமாத்தும்.
அந்த கருப்பு சட்டைகாரனை விடாதே அவனை பள்ளிக்குள் அனுமதிக்காதே அவன் நஜாத்காரன் அவனை விரட்டுங்கள் என்று முழுங்கி வந்த சுன்னத் ஜமாத்தினர் தற்போது தமுமுக உடன் எப்படி உறவு வைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமுமுக பெயரில் தர்காவுக்கு அழைப்பு விடும் நோட்டிஸ்கள் அடிக்கும் அளவுக்கும், சுன்னத் ஜமாத்துடன் கூடி தவ்ஹித் சகோதரர்களுக்கு தொல்லை கொடுப்பதும் தினந்தோரும் நாம் கேட்கும் செய்திகளாகி விட்டன. தமுமுகவுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் இடையே அமைந்த உறவு எந்த அளவுக்கு உள்ளதென்றால் சுன்னத் ஜமாத் போடும் கூட்டத்திற்க்கு தமுமுகவின் தொண்டர்படை வேலை செய்யும் அளவுக்கு தொடர்பு பலமாக உள்ளது.

விடியலும் தமுமுகவும்.
விடியல் வெள்ளி என்பது விஷ விதையாகும். அதை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முழுங்கி வந்த தமுமுகவினர் தற்போது பொது நிகழ்சிகளை விடியலுடன் கூட்டனி வைத்து நடத்தும் அளவுக்கு வந்து இருக்கிறார்கள். தற்போது விடியலை சேர்ந்தவர்களை தங்களது அவதூரை பரப்பும் ஏஜென்டாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். விடியலை சேர்ந்த குண்டர்கள் தமுமுகவினரை தாக்கிய காலம் போய் இந்த இரண்டு குண்டர்களும் தவ்ஹித் சகோதரர்களை தாக்கும் அளவுக்கு வந்து விட்டது.

போலி ஒற்றுமைக்கு காரணம்.
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது அந்த அமைப்புகளும் தமுமுகவும் சேருவதற்க்கு எள் முனையளவும் வாய்ப்பே இல்லை. அவர்கள் ஒன்று சேர்வதற்க்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது காரணமாக இருந்தால் நாமும் நம்மை அதில் இணைத்து கொள்ளலாம். ஆனால் ஒரு தனி மனிதனுக்கு எதிராக அவரை தலைகணம் பிடித்தவராகவும், குர்ஆன் ஹதீஸ் ஞானமில்லாதவராகவும், காட்டி கொடுப்பவராகவும் சித்தரிப்பதற்காக கூடும் அவர்களின் அயோக்கி கூட்டனியை எப்படி நியாயப்படுத்த முடியும்.

இவர்கள் வெற்றி பெறப்போவது இல்லை.
இவர்கள் கொள்கை வேறு, அவர்கள் கொள்கை வேறு ஆனால் இன்று எல்லா கொள்கைகளையும் விட்டு கொடுத்து விட்டு ஒன்றினைவதற்க்கு பிஜெ என்ற ஒருவர்தான் காரணம் என்று அறிகிறோம். மேலே குறிப்பிட்ட யாருக்கும் பிஜெவின் வளர்ச்சி, புகழ், அவர் தலைவராக உள்ள ததஜ என்ற அமைப்பின் இமாலய வளர்ச்சி பிடிக்கவில்லை. எனவேதான் எதிரிக்கு எதிரி நன்பன் என்ற கேவலமான தத்துவத்தை கையில் பிடித்து கொண்டு சகோ.பிஜெவையும், ததஜவையும் அழிக்க பல முனைத்தாக்குதல் தொடுத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மை, சத்தியம் என்ற வட்டத்திற்க்குல் வரும்வரை என்ன திட்டம் போட்டு யாரை கூட்டனி சேர்த்தாலும் வெற்றி பெறபோவது இல்லை. தற்போது இந்த கேவலமாக கூட்டனியால் முடியாதது பஜ்ரங்தலால், ஆர்.எஸ்.எஸால் தான் நாளை முடியும் என்றால் அவர்களுடன் கூட்டனி சேர்ந்து பிஜெவையும், ததஜவையும் அழிக்க இவர்கள் தயங்க மாட்டர்கள்.

ஹசன்.
சவுதி அரோபியா.






0 Comments:

Post a Comment

<< Home