|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, August 29, 2006

தார்பாயில் வடிகட்டிய பொய்யன்

ஏகனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
கோமாளி என்பது சரிதான்.
முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீனை கோமாளி என்று பல முறை ஆதரங்களுடன் நிருபித்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருங்காபுரி சல்மா தோற்றதுக்கு தன்னுடைய இரண்டு மெயில்தான் காரணம் என்று தொடங்கிய அவரது கோமாளித்தனம் இன்றுவரை தொடர்கிறது. ஏதோ இவர் கடையநல்லூர் பள்ளியை பற்றி கேள்வி கேட்டதுபோலவும் நான் ஏதோ பாபர் மசூதி வரலாற்றை எழுதியது போலவும் புலம்பி கொண்டு தற்போது சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குட்டி, அல்வா, தொண்டி என்று தனது பித்னாவை ஆரம்பித்ததை வைத்து மீண்டும் இவர் கோமாளி என்பதை உறுதி செய்திருக்கிறார்.

சைக்கோ உதவிக்கு வருவாரா?
இவரது ஃபித்னா பணிக்கு சைக்கோ தென்காசி சித்திக்கை வேறு உதவிக்கு அழைக்கிறார். புpத்னா செய்து கேவலமாக பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கும் இவனுக்கு உதவி செய்ய யார்தான் வருவார்கள்?. வரும் பொழுது விளக்குமாறும், வேப்பங்கொளையும் கொண்டு வருமாறு வேண்டுதல் வேறு?. அது கூட பழைய செருப்பையும் சேர்த்து கொண்டு போய் இந்த கோமாளியை ஒருதரம் மந்திரித்தால் எல்லாம் சரியாக போய்விடும். தற்போது திண்டுக்கல்லில் ஒரு மோதலும், மற்றும் சில ஊர்களில் சிறு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. கூடியவிரைவில் சைக்கோ தென்காசி சித்திக் வந்து அந்த பிரச்சனைகளுக்கு பிஜெதான் காரணம் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த கோமாளி தனது மேதாவிதனத்தை காண்பிப்பதற்க்கு சில கேள்விகளை தொடுத்துள்ளார் அதற்கான பதிலை பார்பபோம்.

கடையநல்லூர் பள்ளி எந்த அமைப்புக்கும் சொந்தமில்லை.
கடையநல்லூர் பள்ளிவாசல் சகோ.பிஜெ அல்ஜன்னத்தில் ஆசிரியராக இருந்தபோது வசூல் செய்யப்பட்டு கட்டப்பட்டது. அந்த பள்ளி கட்டுவதில் பெரும்பங்கு கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களையே சாரும். கடையநல்லூர் பள்ளி ஜாக்குக்கும் சொந்தமில்லை, ததஜவுக்கும் சொந்தமில்லை என்பதுதான் உண்மை. அந்த பள்ளி அந்த பகுதி தவ்ஹித் சகோதரர்களுக்கே சொந்தமாகும். ஓட்டுமொத்தமாக அந்த சகோதரர்கள் ததஜவில் இருப்பதால் அந்த பள்ளி ததஜவின் சொத்தாகாது. அப்படிபட்ட பள்ளியைத்தான் வெளிநாட்டு பணத்திற்காக மார்க்;கத்தை சொல்லும் ஜாக் வெறியர்கள் அபகரிக்க பார்க்கிறார்கள். அந்த பள்ளிக்கும் ததஜவுக்கும் உள்ள தொடர்பு தவ்ஹித்பள்ளி என்பதும் மற்றும் அந்த பள்ளியின் நிர்வாகிகள் ததஜவிலும் நிர்வாகிகளாக உள்ளனர் என்பதுதான். அதற்காக அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று எப்பொழுதும் ததஜ உரிமை கொண்டாடவில்லை. அந்த பள்ளி ததஜவின் சொத்தாகதே தவிற அந்த தவ்ஹித் பள்ளியை அதற்க்கு சம்மந்தமில்லாத ஜாக் கூட்டம், தமுமுக குண்டர்களோடு கைப்பற்றவோ அல்லது மூடவோ முயலும்பொழுது முஸ்லிம் சமுதாய தலைமை அமைப்பு ததஜ எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?.

அவர்களுக்கும் அந்த பள்ளிக்கும் தொடர்பு இல்லை என்றால் அந்த பள்ளி செய்தியை ததஜவின் இணையத்தில் வெளியிடுவது ஏன்?. அதற்காக ஆர்ப்பரிப்பது ஏன்?. என்று கோமாளி கேள்வி கேட்டுள்ளார்.

விடியலை சேர்ந்த இந்த முனாபிக்குக்கும் அந்த பள்ளிக்கும் என்ன சம்மந்தம் என்பதை முதலில் இந்த கோமாளி தெளிவு படுத்தட்டும்?. இவர் ஏன் அந்த பள்ளி செய்தியை தனது இணையத்தில் பிரசுரித்தார் என்பதை முதலில் இவர் வெளிப்படுத்தட்டும்?. எந்த தொடர்பும் இல்லாமல் அந்த பள்ளி செய்தியை இவர் தனது இணையத்தில் போடலாம் ஆனால் ததஜ ஒரு தவ்ஹித் பள்ளி மீண்டது என்பதற்காக செய்தி வெளியிட கூடாதாம்?. இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை? அந்த பள்ளியின் நிர்வாகத்தை ததஜவின் மாநிலதலைமை கட்டுப்படுத்ததே தவிற தவ்ஹித் பள்ளி என்ற முறையில் தொடர்பு இல்லாமல் இல்லை. எங்கே இருக்கிற பாபர் மசூதிக்காக குரல் கொடுக்கிற ததஜ, கண்னுக்கு தெரிந்து ஒரு பள்ளிக்கு துளியும் சம்மந்தமில்லாத கூட்டம் அபகரிக்க நினைக்கும் பொழுது அதை தடுக்காமல் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. இது போன்ற செய்திகள் நம்மை விட அல்கோபர் கோமாளி ரயிசுதீனுக்கு தெளிவாகவே தெரியும் இருந்தும் எதையாவது சொல்லி மக்களை குழப்ப வேண்டும் என்ற வெறி அவரை அப்படிடியல்லாம் எழுத தூண்டுகிறது.

எதற்க்கு செலவாகிறது?.
தமுமுக என்ற கூட்டமாவது ஃபித்ரா, சுனாமி என்று வசூலித்து அதில் பெருந்தொகையை திருடினாலும், சிறு சதவீதத்தையாவது மக்களிடம் கொடுத்தார்கள். ஆனால் இந்த விடியல் கும்பலோ நூறு சதவீதத்தையும் திருடும் கும்பல். அந்த திருட்டு பணத்தை வைத்து விசா எடுப்பது முதல் தொழில் முதலீடுவரை அனைத்தையும் செய்து கொண்டு ததஜ அழைப்பு பணிக்கான பணத்தை வீணக்குகிறது என்று பொய்யை பரப்பி விடுவது சரியா?. உள்ளுர் தவ்ஹித் சகோதரர்கள் அந்த பள்ளிக்கு செல்வதால் செலவாகிறதா?. (அப்படி என்ன செலவாகிறது என்பது கோமாளிக்கே வெளிச்சம்!) தென்காசியிலிருந்து கூலிக்கு மாரடிக்க தமுமுக குண்டர்களை அழைத்து வந்து பிரச்சனை செய்வதால் ஜாக்கிற்க்கு செலவாகிறதா?. கோமாளி பதில் சொல்வாரா?

வுpடியல் கும்பலை சேர்ந்த இந்த கோமாளி இதை சொல்வதற்க்கு என்ன அருகதை இருக்கிறது. நான் அறிந்தவரை எந்த வகைக்கு என்று நிதி கொடுக்கிறோமோ அதே பணிக்காக செலவிடும் ஒரே அமைப்பு ததஜதான். இதற்க்கு கடந்த இரண்டுவருட ஃபித்ராவையும், சுனாமி நிதியையும் ஒரு பைசா பாக்கியில்லாமல் விநியோகித்ததை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம்.

சங்பரிவார் கும்பலைவிட கொடுரமான ஜாக் கும்பல்.
அடுத்து கடையநல்லூர் பள்ளியை இந்து கும்பலா கைப்பற்ற போகிறது?. ஜாக் என்ற கும்பலுக்கும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களுக்கும்தானே பிரச்சனை என்று எழுதியுள்ளார். இந்த ஜாக் கும்பல் அந்த இந்து கும்பலை விட கொடுரமானவர்கள். இந்த ஒரு பள்ளிதான் பிரச்சனை என்றால் நான் இது போன்ற வார்த்தையை எழுத மாட்டேன். இந்த பள்ளியை முடித்து கொண்டு அடுத்து மேலப்பாளையும் மற்றும் சில ஊர்களின் பெயரை பட்டியலிட்டு அதையும் கைப்பற்றுவோம் என்று களமிறங்கியதால்தான் இந்த ஜாக் கும்பல் பாபர் மசூதியை உடைத்த கும்பலை விட கேவலமானவர்கள் என்று சொல்கிறேன்.

இவர்களுக்கு வக்காலத்தா?
பள்ளிக்கு தொழுத முஸ்லிம்களையும் அதன் இமாமையும் ததஜ குண்டர்கள் என்று அழைத்ததாக குறைப்பட்டு கொள்ளும் கோமாளி அந்த இமாமும், அந்த முஸ்லிம்களும் என்ன செய்தார்கள் என்பது தெரியுமா?. பள்ளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை தாக்கி காயப்படுத்தியது, காலத்தால் அழிக்க முடியாதா சகோ.பிஜெ 80 முதல் 88வரை பேசிய ஆடியோ, வீடியோவை நடுரோட்டில் கொண்டு போய் போட்டு உடைத்தது, மற்றும் நூலகத்தை சேதப்படுத்தியது மற்றும் கடையநல்லூர் முழுவதும் வெறியாட்டம் போட்டது இதுதான் இமாமத் செய்பவரின் மற்றும் தொழுகையாளிகளின் லட்சணமா?. இவர்களுக்குதான் கோமாளி வக்காலத்து வாங்குகிறார்.

எது அதிகாரப்பூர்வ செய்தி என்று அறியாத முட்டாள்.
அடுத்து யாரோ ஒரு சகோதரர் அரசுஆணை என்று எழுதியதற்காக எங்கே அரசு ஆணை என்று கேட்டால் என்ன சொல்வது?. ததஜவின் அதிகாரப்பூர்வ இணையத்தில், உணர்வில் என்ன செய்தி வருகிறதோ அதுதான் ததஜவின் செய்தியாகும். ஓவ்வொரு சகோதரர்கள் சொல்லும் செய்திக்கெல்லாம் யாரும் பதில் தரமுடியாது. இங்கு நான் குறிப்பிடும் செய்திகள் எல்லாம் என்னை சார்ந்ததே?. நான் குறிப்பிட்டதில் சில திருத்தங்கள் இருந்தால் அதற்க்கு ததஜவோ, பிறறோ பதில் சொல்ல முடியாது. நான் ஒன்றை கேட்கிறேன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று இந்த முகவைதமிழன் சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தார். இது விடியல் வெள்ளியின் கருத்தா? அல்லது இவரின் தனிப்பட்ட கருத்தா?. தனிக்கருத்து என்றால் அரசுஆணை என்பதும் அந்த சகோதரர் தவறாக எழுதிய கருத்தாகும். இது போன்ற தவறுகளை இந்த முகவை தமிழன் இணையத்தில் உள்ளதை ஆயிரக்கணக்கில் என்னால் பட்டியலிட முடியும்?.சவாலுக்கு முகவை தமிழன் தயாரா?

முகவை தமிழன் இணையசெய்தி.
நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.
இது அல்கோபர் ரயிசுதீன் பொய்யன் என்பதற்க்கு மீண்டும் ஒரு ஆதாரம். ஆதரத்தை அங்கே இங்கே தேட தேவையில்லை. அவரது கட்டுரையின் நடுவிலேயே இதற்கான ஆதரம் உள்ளது.

சகோதரர்களே பள்ளி திறந்த நாள் முதல் கொண்டு பாங்கு சொல்வதும், முதல் ஜமாத்தை குறித்த நேரத்தில் நடத்தியது மற்றும் பள்ளி பராமரிப்பும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களின் கையிலேயே உள்ளது.(இதை உறுதி செய்ய கடையநல்லூர் சகோதரர்கள் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளவும்) அவர்களே அனைத்தையும் செய்து வருகிறார்கள். இது பொதுவாக அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஜாக், தமுமுக கும்பல் ஒரு நாள் கூத்தாக ஜமாத் முடியும்வரை வேண்டுமென்றே காத்திருந்து( இவர்கள்தான் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பவர்களாம்) இரண்டாவது ஜமாத் போட்டது. உண்மை நிலைமை இப்படி இருக்க அந்த பள்ளி தவ்ஹித் சகோதரர்கள் கையில் இல்லை அவர்களை வஃக்பு போர்டு அனுமதிக்கவே இல்லை என்று பொய்களை வண்டி வண்டியாக அவிழ்த்து விடும் இந்த கோமாளியை வெறும் பொய்யன் என்று சொல்லாமல் தார்பாயில் வடிகட்டிய பொய்யன் என்று சொல்லலாம்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.







0 Comments:

Post a Comment

<< Home