|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 16, 2006

கிருஷ்ணா கமிஷன் - ஓர் நினைவூட்டல்.

இந்திய அரசியல்வாதிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோக பட்டியலில் இதுவும் ஒன்று.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் 1992 டிசம்பர் மற்றும் 1993 ஜனவரி மாதங்களில் மும்பையில் வரலாறு காணாத வகுப்பு வாத படுகொலைகள் நடைபெற்றன. மும்பையின் ஹிட்லர் பால்தாக்கரேயின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன.

சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முஸ்லிம் விரோத படுகொலைகளின் வரிசையில் மும்பை கலவரமும் இடம் பெற்றது.

ஹிந்து பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு அனைத்தும் நடந்து முடிந்த பின் விசாரனை கமிஷன் ஒன்றை அமைத்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இந்த விசாரனை கமிஷனைத்தான் கிருஷ்ணா கமிஷன் என்று இங்கு நாம் நினைவு கூர்ந்து கொள்வோம்.

பொதுவாக ஒரு பிரச்சனையை தொடர்ந்து அமைக்கப்படும் கமிஷன் என்பது அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் தக்க வைத்துக் கொள்வதற்கும், உலக அரங்கில் தங்களை ஒரு ஜனநாயகவாதிகளாக சித்தரித்து கொள்வதற்கும் இந்தியாவின் அயோக்கிய அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த எதார்த்த நிலையிலிருந்து கிருஷ்ணா கமிஷன் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன?

கிருஷ்ணா கமிஷன் தனது விசாரணையை துவக்கி சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு தேர்தலையும் சந்தித்தது. அந்த தேர்தலில் சுதாகர்ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மன்னை கவ்வி வீடுபோய் சேர்ந்தது. பிறகு பதவியேற்ற சிவசேனை, பா.ஜ.க போன்ற பயங்கரவாதிகளின் தலைமையிலான அரசாங்கம் இந்த கிருஷ்ணா கமிஷனை கலைத்தது. சிவசேனைப் போன்ற ஹிந்து பயங்கரவாத கும்பல்களின் ஆட்சியில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அன்று இருந்தது.

இப்பயங்கரவாதிகளின் நடவடிக்கையை கண்டித்து அன்று அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு மீண்டும் கிருஷ்ணா கமிஷன் தொடர்ந்து செயல்பட்டது. வழக்கம் போல விசாரணைகள் முடிக்கிவிப்பட்டது.

மும்பை கலவரங்கள் பற்றியும் அதன் பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பற்றியும் விசாரணையை முடித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அன்றைய சிவசேனா அரசு தயக்கம் காட்டி வந்தது. அறிக்கையை வெளியிடத் தயங்கியதற்கு உண்மையான காரணம் சிவசேனை தலைவரான பயங்கரவாதி பால்தாக்கரே மீது கிருஷ்ணா கமிஷன் அறிக்கை கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்ததுதான்.

கிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் சில..

கலவரத்திற்குப் பிறகு மும்பையின் மேயராக பதவியேற்ற மிலந்த்வைத்யா என்ற பயங்கரவாதி முஸ்லிம்களுக்கு எதிராக போலிஸ்காரர்களுடன் சேர்ந்து வாள் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டார்.

சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசிற்கு பின்பு பதவியேற்ற சிவசேனை - பா.ஜ.க அரசாங்கத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கஜானன் கிருட்டிகார் என்பவர் கலவரத்தின் போது ஒரு கும்பலுக்கு தலைமை தாங்கினார். இந்த கும்பலில் உள்ள பயங்கரவாதிகள்தான் ஒரு பள்ளிவாசலையும் தாக்கி சேதப்படுத்தினார்கள்.

கலவரத்தின் போது அதிகமான முஸ்லிம்கள் இறந்து போனதற்கும், காயமுற்றதற்கும் காரணம் என்னவென்றால் சிறுபான்மையினர் மீது ஹிந்து பயங்கரவாதிகளின் ஆதிக்க உணர்வும், காவல்துறை தன்னகத்தே கொண்டிருந்த முஸ்லிம் விரோத மனப்பான்மையுமே என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்தின் போது மும்பை மாநகர கூடுதல் காவல்துறை ஆணையாளராக இருந்த ஆர்.டி.டியாகி உட்பட 32 போலிஸ்காரர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருந்தார். (ஆர்.டி.டியாகி ஓய்வு பெற்ற உடன் சிவசேனை கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கலவரம் நடந்த 11-01-1993 அன்று சிவசேனையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மதுக்கர் சர்போட்தார், அவரது மகனான அதுல் மற்றும் 5 பேரும் ஜீப் ஒன்றில் 32 ரக இயந்திர துப்பாக்கிகள் இரண்டு, இருபது ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் 99 எம்.எம் ரக கைத்துப்பாக்கியும், இரண்டு வெட்டு அரிவாள்களும் எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அணி அவர்களது ஜீப்பை இடைமறித்து சோதனையிட்ட பிறகும் அன்றைய காங்கிரஸ் அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மிகுந்த கால தாமதம் காட்டியது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிவசேனை கிளைத்தலைவர்கள் முதல், சிவசேனை தலைவரான பால்தாக்கரே வரை பல சிவசேனை தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களது சொத்துக்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு தாக்குதல்களை தொடுப்பதற்கு தலைமை வகித்துள்ளனர் என்றும் பால்தாக்கரே ஒரு அனுபவம் வாய்ந்த ராணுவத் தளபதி போல செயல்பட்டு தனது விசுவாசமிக்க சிவசேனைக்காரர்களைக் கொண்டு வழிநடத்தினார் என்றும் ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்திற்கு காரணமாக அத்வானியின் ரதயாத்திரையும் அமைந்திருந்தது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்களை தாங்கி சமர்ப்பிக்கபட்ட கிருஷ்ணா கமிஷன் அறிக்கை எதிர்பார்த்தது போலவே குப்பைத் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்தது.

ஓவ்வொரு முறையும் முஸ்லிம்களின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து காய் நகர்த்தும் இந்தியாவின் அயோக்கியத்தனமாக அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க உளப்பூர்வமாக முற்படுவதில்லை. சட்டத்தின் வளைவு, நெலிவுகளில் புகுந்து அவ்வப்போது ஹிந்து பயங்கரவாதிகள் தப்பி வருவதும், முஸ்லிம்கள் என்றால் சட்டம் அவர்களை இருக்கிப் பிடிப்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கேலி செய்வது போவவே இருக்கிறது.

நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு என்று மேடைகளில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் இந்தியாவின் அயோக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு முறையேனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை திறந்த மனதுடன் படிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு, ஒழுக்கம், பிறமதத்தினரின் உரிமை பேணுதல் போன்ற எண்ணற்ற விசயங்களை புரிந்து கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment

<< Home