|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, December 13, 2006

அரசியலில் ஈடுபடுவது அயோக்கியத்தனம் - ஜே.எஸ்.ரியாயி.

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

என்று திருந்துமோ இந்த பாஜில் பாகவிகள் கூட்டம் ?

உமர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அஹமது : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர் : என்ன படு குஷியா தெரியிறீங்க

அஹமது: டிசம்பர் 6 பற்றி அல்கோபர் கோமாளியுடைய வலையில் டிசம்பர் திருடனுடைய பேராவலை கவனித்தீர்களா ?

உமர்: இல்லையே ! அது என்னப் பேராவல்

அஹமது: தமுமுக அவசியம் தேர்தலில் நின்றேயாக வேண்டுமாம் !

உமர்: உடன்குடியில் ஜே.எஸ்.ஆர் அரசியலை எதிர்த்து புரட்சிகரமான கருத்தை சொன்னாரே அது என்ன ஆவதாம் ?

அஹமது: அது யார் ஜே.எஸ்.ஆர் ?

உமர்: அதாங்க நம்ம லுஹாவோட பணிப்போர் நடத்தி அமைப்பை கூறுப்போட காரணகர்த்தாவாக இருந்தவங்கள்ள ஒருத்தரு!

அஹமது: சுபுஹ் தொழாத ரிஃபாயின்னு சொல்லுங்க அப்பத்தான் நம்ம வட்டாரத்துல விளங்கும்.

உமர் : அவரேத் தான்.

அஹமது: அப்புடி என்ன புரட்சிகரமான கருத்த சொன்னாரு ?

உமர்: அத ஏன் கேக்குரீங்க ஜவாஹிருல்லாஹ் சாப்பை மேடையில உக்கார வச்சிக்கிட்டு அரசியிலுல ஈடுபடுரது அயோக்கியத் தனம்குற மாதிரி விமர்சிச்சுப் பேசிட்டாரு

அஹமது: சபாஷ் !!!

உமர்: அதோட உடுவாரான்னுப் பார்த்தா அதான் இல்ல 30 35 ஆயிரத்துக்கு மேல கடன வாங்கி செலவு பண்ணி தேர்தலுல நின்னேன் கடவுள் புண்ணியத்தால ஜெயிச்சு அவ்வளவு கடனையும் அடைச்சேன் என்று ஒருவன் சொல்லுவான் இதன் அர்த்தம் என்ன ???? ஜெயிச்சப் பிறகு அரசியலுல அடாவடித் தனம் செஞ்சு கடனை அடைப்பான்னு முடிச்சுட்டாரு !!!

அஹமது : புல்லரிக்குதே ? ஹைதர் அலி பக்கத்துல இருந்தாரா இல்லையா ?

உமர்: அவரு இல்ல ! அதோட விடாம இந்தப் பொழப்பு தமுமுக காரர்களாகிய நாங்கப் பொழக்க மாட்டோம் நாங்களெல்லாம் மறுமையை நம்பி வாழக்கூடிய மக்களாவோம். எங்களுக்கு இந்த உலகம் ஒரு அற்பமாகும் என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கத்த ஆரமிச்சுடாரு ?

அஹமது: அவரு அதுமாதிரிப் பேசி கொஞ்ச நாள் கூட ஆகாமல் இருக்கும் போது இந்த டிசம்பர் திருடன் ஏன் இப்புடி ஒரு அறிக்கையை உட்டாரு ? அவுங்களுக்குள்ள அன்டர்ஸ்டேன்டிங் எதுவும் இல்லாம இருக்கா ?

உமர்: இது அவர்களோட அரசியல் ராஜதந்திரம் அவர்களோட மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அரசியலுல நிக்கனும்கிறது தான் அவர்கள் அனைவர்களுடைய ஆசையும் ஆனால் சமீபத்திய பிரச்சனை என்னவென்றால் மதுரை மத்திய தொகுதிக்கு நின்ற கவுஸ் பாஷாவை ததஜ சமுதாய தொலைநோக்கு சிந்தனையுடன் ஆதரிக்கத் தொடங்கியது முதல் ஜே.எஸ்.ஆர் போன்றவர்களை விட்டு ஊர் ஊராக அரசியலை எதிர்த்துப் பேச விட்டனர்.

அஹமது: இதுல வேர கவுஸ் பாஷா ததஜ அலுவலகத்துக்கே நேராக வந்து நன்றிக் கூறி சென்று விட்டார்.

உமர்: தமுமுக கவுஸ் பாஷா சார்ந்த திமுகவுடைய சிறுபான்மை பிரிவாக இருக்கும் போது இவ்வாறு அவர் நடந்து கொண்டதால் இவர்களுக்கு அரசியல் உலக வாழ்க்கையே வெறுத்து விட்டதாம் அதனால் தமுமுகவுலயும் மறுமையை நம்பிய மக்கள் இருப்பதாக நினைத்து சில தவ்ஹீது வாதிகள் பிரிவினையின் பேர்து அவர்களுடன் சென்றார்கள் அல்லவா அவர்களில் பலர் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கி விட்டனர் அதுனால எதப்பத்தி எந்த மேடையில பேசுனாலும் அப்புடியே மறுமையையும் கொங்சம் டச்சுப் பண்ணி உடுங்கன்னு அவர்களோட அனைத்துப் பேச்சாளர்களுக்கும் உத்தரவு போட்டுருக்காங்களாம் அதுனால மறுமையை கேட்டு விரண்டோடிய ஜவாஹிருல்லாஹ்வை மேடையில உட்கார வைத்துக் கொண்டே மறுமையையும் கொஞ்சம் டச் பண்ணி உட்டாரு.

அஹமது: என்ன தான் அவர்களோட அரசியல் மேடையில மறுமையை டச்சுப் பண்ணினாலும், அதிலும் பிஜேவை டச் பண்ணாம இருக்க மாட்டாங்களே ?

உமர்: பிஜேயை திட்டாம அவர்களுக்கு புரோகிராமா ? அது அவர்களது மாவு பத்திரிகையாக இருக்கட்டும், கள்ளவெப்சைட்டாக இருக்கட்டும், அல்லது அவர்களது எடுபிடிகளுடைய ப்ளாக் ஸ்பாட்டாகட்டும், பல்லாயிரக் கணக்கில் கொட்டி நடத்தப்படும் கூட்டங்களாகட்டும், மூதறிஞர் பிஜே அவர்களை திட்டாமல் அது அவர்களால் முடியாது ப்ரதர் பிஜேயைத் திட்டாம அவர்களது அரங்கம் களை கட்டாது அது மட்டுமல்ல இத்தனை செலவு செய்து பிஜே யை திட்டிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை டானில் ஒளிபரப்ப மேலும் பல லட்;சங்களை முடக்குவார்கள்.

அஹமது: தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும் என்பார்கள் திட்ட திட்ட பிஜே ஜொலிக்கிறார்

உமர்: ஆரம்ப காலகட்டத்துல மார்க்க வியாபாரிகள் அவரை அடித்து வளர்த்தார்கள் இப்பொழுது அவர்களது எடுபிடிகள் திட்டி வளர்க்கிறார்கள்.

அஹமது: தமுமுகவை விட்டு தவ்ஹீத் வாதிகள் சிலர் வெளியாகத் தொடங்கி விட்டனர் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

உமர்: முகவை மாவட்டத்துல உயிரைப் பணயம் வைத்துப் போராடி தமுமுக எனும் பெயரை நிலை நிருத்திய தன்னலமற்றவர்கள் கூண்டோடு வெளியேறி விடுவதாக விடுத்த மிரட்டல் தெரியாதா உங்களுக்கு ?

அஹமது: என்னங்க குண்டைப் போடுரீங்க ?

உமர்: நான் குண்டு போடல அவர்கள் போட்ட குண்டு வடமரைக்காயர் தெருவுல உள்ள ஏழாம் நம்பர் பில்டிங்கையே ஒரு உலுக்கு உலுக்கிடுச்சாம் ?

அஹமது: புதிர் போடாம விஷயத்துக்கு வாங்க கேக்கவே குசாலமா இருக்கு

உமர்: முகவை மாவட்டத்துல தமுமுகவை நிலை நிருத்த வியர்வை சிந்தியவர்கள் பிரிவினைவாதிகளுடைய பசப்பு வார்த்தையில மயங்கி அவுங்களோடப் போயிட்டாங்க அங்க போனப்பிறகு தான் அண்ணன் அவர்களை திட்டுவதை மாத்திரமே அடிப்படை செயல்பாடாக கொண்டு செயல்படுவதை விளங்கிக் கொண்டவர்கள் அண்ணன் அவர்களை சாடும் போதெல்லாம் அவ்வப்பொழுது அவர்களை தட்டிக் கொண்டு வந்தார்கள் அத்துடன் அவர்களுடைய சுயரூபத்தை தெரிந்து கொண்டவர்கள் தங்களது கைக்காசையும் போட்டு வாங்கிய ஆம்புலன்ஸை தமுமுக பெயரில் எழுதி வைத்துக் கொண்டனர் ஆம்புலன்ஸை தமுமுக பேருக்கு எழுதிக் கொடுக்க மறுத்தவர்களை கட்டம் கட்ட திட்டம் தீட்டினர் அதனால் சமீபத்துல அவர்களுடைய செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்ததில் மிக அழகாக இவரை கட்டம் கட்டினர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

அஹமது : அடப்பாவிகளா ?

உமர்: நிலமை தீவிரமடைவதை அறிந்தவர்கள் முகவை மாவட்டம் முழுவதையும் ( தமுமுகவினரை ) துடைத்து அள்ளிக் கொண்டு ததஜவுக்கு போய்விடுவோம் என்று நியூக்ளியலர் மாதிரிப் போட்டார்களே ஒருப்போடு வடமரைக்காயர் பில்டிங் ஒரு குலுங்கு குலுங்கிடுச்சிங்கோ !!!!! காலை, கையைப் புடிச்சு பழைய பதவியில் நீடிக்கக் கூறியுள்ளனர்.

அஹமது: பலி வாங்காமல் விட மாட்டார்களே ?

உமர்: அவர்கள் பதுங்கும் போதெல்லாம் கொடூரமாகப் பாய்வார்கள் பிஜே என்கின்ற தனி மனிதருடைய ஆக்ரமிப்பில் தமுமுக இருப்பதாக அறிந்தவர்கள் ஒரு பிஜே என்கின்ற தனிமனிதரை செல்லாக்காசாக ஆக்குவதற்காக மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உடைத்து நொறுக்கியவர்கள் ஒரு மாவட்டம் தனி ஒருமனிதருடைய ஆக்ரமிப்பில் போவதை அறிந்தவர்கள் அதுவும் ஆம்புலன்ஸை தனது பெயரில் வைத்துக் கொண்டு அடம் பிடிப்பவரை சும்மா விடுவார்களா ? முகவை மாவட்டத்தையே தூள் தூளாக உடைத்தெறிந்து சின்னாப் பின்னமாக்கி விட்டார்கள்

அஹமது: அடப்பாவிகளா !

உமர்: ஒன்றுக்கே சக்திப் பெறாத முகவை மாவட்டத்தை மூன்றாக உடைத்து மேல்படியாரை செல்லாக்காசாக ஆக்கி விட்டார்கள், அதிலும் அவருடைய செலவாக்கிற்கு உட்பட்டப் பகுதியில் ஹைதரஅலியுடைய ஆளை வேண்டுமேன்Nறுப் புகுத்தினார்களாம் . இவர் சும்மா விட்டாரா ? தான் யார் ? என்பதை அழகாக அவர்களுக்கு டிசம்பர் 6 ல் காட்டி விட்டார் மூன்றும் சேர்ந்து மூன்றுக்குப் பக்கத்துல இரண்டு சைபரைத் தாண்ட முடிமாமல் தவியாய் தவித்து விட்டதாம் !

அஹமது: பெருந்திரளானக் கூட்டம் போன்று காட்டி இது கூட்டத்தில் ஒருப் பகுதியினர் என்று எழுதினார்களே ?

உமர்: மொத்தக் கூட்டமே அதான் ப்ரதர் ஒருப் பகுதி என்பதெல்லாம் வடிகட்டின வாடிக்கையான கேமரா ஹம்பக்!

அஹமது: தமுமுகவுக்குல இருக்குற மொத்த தவ்ஹீது சகோதரர்களுடைய நிலமையும் இன்றோ, நாளையோ என்று தானுள்ளது. அதனால் தான் ஒருத்தரை விட்டு அரசியலை எதிர்த்து மறுமையைப பற்றிப் பேச விடுகிறார்கள் இன்னொருத்தரை விட்டு தமுமுக தேர்தலுல நின்றேயாக வேண்டும் அது அவசியத்திலும் அவசியம் என்று எழுத விடுகிறார்கள்

உமர்: இருதலை கொல்லி எறும்பு(தலைவர்)களிடம் சிக்குண்ட தமுமுக தொண்டர்கள் அந்தோப் பாவம் !!!

அஹமது: விவாதம் என்ன முபாஹலாவிற்கே இலாஹி தயாராக இருந்ததாகவும் பிஜே அவர்கள் தான் ஓடி ஒளிந்ததாகவும் குதிரை கனைத்திருந்ததை கவனித்தீர்களா ?

உமர்: விவாதமாகட்டும், முபாஹலாவாகட்டும் எதுவாக இருந்தாலும் அதை எங்கே வைத்துக் கொள்வது ? எப்பொழுது வைத்துக் கொள்வது ? என்கின்ற ஒப்பந்தம் அவசியம் என்பது மனிதர்களுக்;குப் புரியும் பிராணிகளுக்குப் புரியாது கோயபல்ஸ் சார் ஸ்டைலில் கூறுவதாக இருந்தால் விவாதம் அல்லது முபாஹலாவிற்கும் இடையில் ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் அவசியமானதாகும். அந்த ஜென்டில்மேன் அக்ரீமென்டுக்காகத் தான் மூதறிஞர் பிஜே அவர்கள் ராணி மஹாலில் ஹம்பக் மன்னனுக்காக காத்திருந்தார்கள். காத்திருந்தவர் ஜென்டில்மேன் ஓடிப் பொனவர் சுத்த பேமானி என்று மக்கள் தெளிவாக அப்பொழுNது புரிந்து கொண்டனர். குதிரை ஊருக்குப் புதுசு என்பதால் புரியவில்லை.

அஹமது: இந்த வருஷம் ரியாத் தமுமுக வின் ஹஜ் ஊழல் குரூப்பிலிருந்து ஜமால் மௌலவி ஜகா வாங்கிட்டாரு கேள்விப் பட்டீர்களா ?

உமர்: சத்தியத்தை இப்பத் தான் விளங்கினாரா ?

அஹமது: எது சத்தியம் ? எது அசத்தியம் என்று அவருக்;கு கொட்டாம்பட்டியில் இருக்கும் போதே தெரியும், ஆனாலும் என்ன செய்ய பணம் படுத்தும் பாடு அவரையும் ஒரு வழிப்படுத்தி விட்டது யாரெல்லாம் பணம் பண்ணும் நோக்கத்தில் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டனரோ அதே நோக்கத்தில் அவரும் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டார் பாக்கெட்டை நிரப்புவதற்காக அவர்களுடன் இருந்து கொண்டார் என்பது தனி விஷயம் இப்பொழுது உள்ள மேட்டர் அதுவல்ல , ஹஜ் செர்வீஸ் எனும் பெயரில் ரியாத் தமுமுக நடத்தும் மெகா ஊழலின் வருமானத்தில் சட்டியை அவர்கள் எடுத்துக் கொண்டு அகப்பையை மட்டும் இவருக்கு காட்டி வந்தார்களாம் கொதிப்படைந்த ஜமால் மௌலவி தனிச்சட்டிப் பார்ப்பதற்காக தனி சர்வீஸை தொடங்கி விட்டாராம் .

உமர்: அதான் கிளிக்கு ரெக்கை மொளச்சிருச்சு ஆத்த விட்டுப் பறந்துப் போயிடுச்சின்னு இளையவன் புலம்பிக் கொண்டுள்ளாரோ.

அஹமது: ஜமால் மௌலவி மட்டும் ஆத்தை விட்டுப் பறக்கல இளையவனை தனியாற்றில் விட்டு விட்டு அந்த மூவரும் கூட தொண்டரணியுடன் தனியாப்பறந்து விட்டார்களாம்.

உமர்: சூரியன் எத்திசையில் உதிக்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்

அஹமது: கண்கெட்டப் பின்னே சூரியன் எத்திசையில் உதித்தால் அவருக்கென்ன ?

உமர்: அதென்னங்க தொண்டரணி ? எதெதுக்கு தொண்டரணின்னு ஒரு வௌஸ்தை இல்லையா ? ஹஜ் செர்வீஸூக்கு எதுக்குங்க தொண்டரணி ? தமுமுக காரங்களுக்கு தவாபுலயும், ' சஈ 'யிலயும் முதலிடம் வேண்டும்; என்று கொடிப் பிடிச்சு கோஷம் போடுவதற்காகவா தொண்டரணி ?

அஹமது: அங்கப்போய் கொடிப் பிடிச்சு கோசம் போட்டா குருவிய சுடுர மாதிரி சுட்டுப் பொசுக்கிடுவான் நாம் மெகா ஊழல் என்று ஏற்கனவே சொன்னோமல்லவா ? அந்த மெகா ஊழலை பக்காவாக செய்து முடிக்கவே இந்த தொண்டரனியை யூஸ் பண்ணுவாங்க ரியாத்திலிருந்து ஹஜ் செய்வதற்கு '' ''தஸ்-ரீஹா'' '' என்று சொல்லக் கூடிய அரசு அனுமதி பெற வேண்டும் அதற்கு ஒரு தொகை செலுத்த வேண்டும் '' 'தஸ்-ரீஹா' '' இல்லாமல் அழைத்துச் சென்றால் ஒருப் பெருந்தொகையை லட்டு மாதிரி லபக்குன்னு விழுங்கிடுவாங்க இந்த '' லபக் ''குக்காகத் தான் அந்த தொண்டரனி வழியில் சோதனைச் சாவடியில் மாட்டிக் கொண்டால் இஹ்ராம் அணிந்த ஹாஜிகள் தவியாய் தவிக்கும் பொழுது தொண்டரணியினர் ஹாஜிகளை கொரில்லா மாதிரி ' லபக் ' கென கொத்திச் சென்று வேறு வழியாக மக்காவில் திணித்து விடுவர் இதற்குத் தான் தொண்டரனியினர் இதல்லாமல் கொடிப் பிடித்துக் கோஷம் போடுவதற்கல்ல இஹ்ராம் அணிந்து இஸ்லாமிய அரசை ஏமாற்றுவதற்காக என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உமர்: என்று திருந்துமோ இந்த பாஜில் பாகவிகள் கூட்டம் ?

அஹமது : ஜெயலலிதாவிடம் ததஜ பெற்றுக் கொண்ட இடஒதுக்கீடு கமிஷன் டாய்லட் துடைக்கிறப் பேப்பராமே ?

உமர் : அதைத் தானே அவர்களுடைய கலைஞர் அரசும் செய்தது பின் எதுக்கு வெற்ற்pக் களிப்பை கொண்டாட கூவி அழைத்தார்கள் ?

அஹமது: அதான் குதிரை !

. . . உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 2:194.


அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக்கூறும் உமர்

புதுப்பொழிவுடன் பலதரப்பட்ட செய்திகளைத் தாங்கி மிண்ணுகிறது.
வெளிச்சம்

HTTP://VELICHAM2006.BLOGSPOT.COM

0 Comments:

Post a Comment

<< Home