|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, September 30, 2007

சவூதியில் இந்திய பல்கலைக்கழகங்கள்

இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் சவூதி அரேபியாவில் தேர்வு மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.

சவூதியில் தற்போது இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் ரியாத்; ஜித்தா மற்றும் தமாம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்களை நிறுவியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மெளலானா பல்கலைக்கழகம் ஆகியவை ரியாத் மற்றும் ஜித்தாவில் தேர்வு மையங்களை தொடங்கியுள்ளன.

இதன் மூலம் சவூதியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களது உயர் கல்வியை இந்தப் பல்கலைக்கழகங்களில் சவூதியில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் இங்கு தேர்வு மையங்களைத் தொடங்கவுள்ளன.

ரியாத்தில் 26ம் தேதி ஓஸ்மானியா பல்கலைக்கழக பழைய மாணவர் என்.ஆர்.ஐ சங்கத்தின் வருடாந்திர விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இந்திய தூதரகத்தின் உதவி அதிகாரி ராஜீவ் சஹாரே இத்தகவலைத் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

<< Home