|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, September 20, 2007


Bismillah...
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோயை எதிர்த்து போராடும் மரபணு (ஜீன்) அழிவதன் காரணமாகவே புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகமாக நுரையீரல் புற்றுநோய் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடித்து நிறுத்தியவர்கள்தான் அதிகமாக நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும் பி.எம்.சி. ஜெனோமிக்ஸ் ஆய்வு வெளியிட்டுள்ளது.

பி.சி. புற்றுநோய்க் கழகத்தைச் சேர்ந்த வான் எல் டாம் மற்றும் ஸ்டீபன் லாம் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வரும் கனடாக் குழுவினர் இது குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

புகைபிடிக்கும், புகைபிடித்து நிறுத்தியவர்கள் மற்றும் புகையே பிடிக்காதவர்கள் என 24 பேரின் நுரையீரல்கள் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நுரையீரல்களில் உள்ள மரபணுக்களின் தொடர்ச்சியான மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதுதான் மரபணுக்களின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள உதவியது.

ஒவ்வொரு நுரையீரலிலும் 5வது மரபணு எந்த நேரத்திலும் செயல்படும் திறனுடன் உள்ளது. ஆனால், புகைப்பிடித்தல் போன்ற சுகாதார மாற்றங்களால் இந்த மரபணுவின் செயல்பாடு மாறுகிறது (குறைகிறது). இந்த மரபணு செயல்பாடு மாற்றங்களில் ஒரு சில மாற்றங்கள் புகைப்பிடித்தலை நிறுத்தும்போது மீண்டும் சீரடைகிறது. ஆனால் ஒரு சில மரபணுக்களின் தன்மை (மாற்றங்கள்) மீண்டும் சீர் செய்ய முடியாத அளவிற்கு அழிந்துவிடுகின்றன.

உடலில் ரசாயனத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன், உணவுச் சத்தை உயிர்ச்சத்தாக மாற்றும் திறன் போன்றவைகளை செய்யும் மரபணுக்கள் புகைப்பிடித்தலை நிறுத்தும்போது மீண்டும் சீரடைகிறது.

ஆனால் நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மரபணுக்கள் புகைப்பிடிப்பதால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரை புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என்று தான் கூறப்பட்டு வந்தது. ஆனால் புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோயை எதிர்க்கும் மரபணுக்கள் அழிவதால் புகைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் புகைப்பிடித்து தற்போது நிறுத்தியவர்களுக்கும் உண்டு என்பதே இந்த ஆய்வில் அறியப்பட்ட மற்றொரு தகவலாகும்.

மற்றொரு உண்மை என்னவென்றால், ஒரு சில மரபணுக்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றன. இவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் செயல்படத் துவங்குகின்றன. இந்த மரபணுக்கள் செயல்படத் துவங்கினாலும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும். அதில் குறிப்பிடத்தக்க மரபணுவான ஒன்று செயல்படும்போது மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட 3 முக்கிய விஷயங்கள் என்னவெனில், புகைப்பிடிப்பதால் மீண்டும் சீராக வாய்ப்புக் கொண்ட மாற்றங்களை அடையும் மரபணுக்கள், முற்றிலுமாக தங்களது தன்மையை இழந்துவிடும் மரபணுக்கள், புதிதாக திறன்பெற்று செயல்படத் துவங்கும் மரபணுக்கள் என்பனவாகும்.

புகைப்பிடிப்பவர்களில் 85 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களாகவும், புகைப்பிடித்து நிறுத்தியர்வகளுக்கும் இதில் பாதி விழுக்காடு அளவிற்கு நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Thanks...tafareg

0 Comments:

Post a Comment

<< Home