|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, September 02, 2007

ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது


சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைப்பதற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், இந்துக்கள் புனிதச் சின்னமாக கருதுவது ராமர் பாலம். அதை இடித்தாலோ, சேதப்படுத்தினாலோ அது லட்சக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளையும், மனதையும் புண்படுத்தும் செயலாகும்.

மேலும் நமது பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாக அமைந்து விடும். ராமர் பாலத்தின் மீது துளையிடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். விரைவில் வெடிகுண்டு வைத்து பாலத்தைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எனவே இதை அவசர வழக்காக கருதி விரைந்து விசாரித்து தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமி.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி.நலோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மோகன் வாதிடுகையில், சுவாமி கூறுவதைப் போல அது பாலமே அல்ல. கால்சியப் படிவுகளால் ஆன இயற்கையான ஒரு அமைப்பு என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மோகன் பதில் ஏதும் சொல்லவில்லை.

ராமர் பாலம் இடிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை அரசு அளிக்குமா என்றும் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மத்திய அரசின் வக்கீல் உறுதிமொழி அளிக்கவில்லை.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். செப்டம்பர் 14ம் தேதி வரை ராமர் பாலத்தை இடிக்கவோ, துளையிடவோ கூடாது. அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படக் கூடாது.

பாலத்துக்குச் சேதமில்லாத வகையில் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளலாம் சென்று கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அரசியல் கோமாளி என்று பலராலும் அறியப்பட்ட சு.சுவாமி. சில நேரத்தில் உண்மைகளை சொன்னாலும், பெரும்பாண்மை நேரங்களில் தன்னை பிரபலபடுத்த பொய்யான செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி அவர் தற்போது கையில் எடுத்துள்ளதுதான் ராமர் பாலம் இடிப்பு.

இதே சுப்பரமணி சுவாமி சில மாதங்களுக்கு முன்பு ராமர் பாலம் இருப்பதற்க்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், நாஸா மையமே பாலம் இருப்பதை உறுதிபடுத்தியிருப்பதாகவும் கதையளந்திருந்தார். பிறகு நாஸா மையமே இருப்பது மணல் திட்டுதான் என்று போட்டு உடைத்தவுடன், தற்போது சு.சாமி இந்துக்களின் நம்பிக்கை என்று பிளேட்டை திருப்பி போட்டுள்ளார்.

இலட்சோப லட்ச ஆண்டுகளுக்கு முன்பு வாணரங்களை வைத்து கட்டப்பட்டதாக கதையில் வரும் பாலத்தை இடிக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உலகிலேயே இல்லாத பாலத்தை இடிக்ககூடாது என்று நீதி மன்றத்தை அனுகியவர்கள் நமது இந்தியர்களகாகவே இருப்பர்.

இந்த விசயத்தில் சமுதாய ஆர்வலர்கள், திராவிட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் மக்களிடம் சங்பரிவார கும்பல் ஏற்படுத்த முனைந்திருக்கும் திட்டத்தை முறியடித்து உண்மையில் ராமர் பாலம் என்று கிடையாது என்பதை பரப்ப முனையவேண்டும். மேலும் தமிழகத்திற்க்கு நண்மை பயக்கும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துகிற திமுக அரசை முழுமையாக இவ்விசயத்தில் ஆதரிக்க வேண்டும்.
ஜாஹிர் ஹீசேன்.

0 Comments:

Post a Comment

<< Home