|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 16, 2007

தஸ்லிமாவை நாடு கடத்தக் கோரி போராட்டம்

சென்னை: வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்தக் கோரி தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஜமாத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.எம்.பேக்கர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

தஸ்லிமா, முஸ்லீம்களின் உணர்வுகளை காயப்படுத்தியவர். அவர் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அவரை நாடு கடத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.

போராட்டத்தின்போது பேக்கர் பேசுகையில், தஸ்லிமாவை நாடு கடத்தும் வரை முஸ்லீம்கள் போராட்டம் நடத்துவர். முஸ்லீம் பெண்கள் குறித்து தஸ்லிமா கூறியுள்ள கருத்துக்கள் முஸ்லீம் சமுதாயத்தை காயப்படுத்தியவை ஆகும் என்றார் அவர்.
Thanks...Thatstamil

0 Comments:

Post a Comment

<< Home