|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 13, 2007

தஸ்லீமா நஸ்ரினை இந்தியா வெளியேற்றாது - செந்தில் அழகு.

ஹலோ பிரதர். நான் ஒரு இஸ்லாமிய point of view வில் சொல்லவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமிய நோக்கத்தோடு பார்க்கிறீர். நீங்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மாயையில் உள்ளீர்கள். எப்போது நீங்கள் அதிலிருந்து வெளியே வருகிறீர்களோ அன்று தான் உங்கள் சமுதாயம் முன்னேறும்.

15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஷரியா சட்டம் இயற்றப் பட்டது. இன்றும் நீங்கள் அதை பின்பற்றினால் உங்களை என்னவென்று சொல்ல. உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்பதா இல்லை உங்களை நினைத்து அழுவதா என்று எனக்கு புரியவில்லை.

அம்பேத்கார் 50 வருடங்களுக்கு முன்னர் எழுதிய சட்டத்தையே நாம் திருத்தி, மாற்றி எழுதுகிறோம் ஆனால் நீங்கள் 15 ஆயிரம் வருடங்கள் முன்னர் எழுதிய ஷரியா சட்டங்களை பின்பற்றுவது என்ன முட்டாள்தனம்!!

முன்பு மனிதன் ஒரு வேளையும் இல்லாமல் இருந்தான். அப்போது 5 வேளைகள் தொழுதான். ஆனால் இப்போது உள்ள வேளைகளிலும் 5 வேளை தொழ வேண்டும் என்றீர்கள் என்றால் எந்த சுவரில் சென்று முட்டிக் கொள்வது??

// முஸ்லிம்களை நன்கு தெரிந்தவர்கள் அரைவேக்காடுகள் என்றுதான் சொல்வார்கள். //

அரிசி முழுமையாக வெந்து குழைந்து இருந்தால் நன்றாக இருக்காது. அரை வேக்காடுதான் நன்றாக இருக்கும் :-‍) !!!

நான் மறுபடியும் கூறிக்கொள்கிறேன். நான் முதலில் சமய மார்க்கமாய் எழுதவில்லை. இதை சமய மார்க்கமாய் திசை திருப்பியது பெருமதிப்புக்குறிய தாங்கள் தான். நான் இன்றும் சொல்வேன், இந்தியா அடைக்கலம் தேடி வந்தவரை ஒருப்போதும் ஏமாத்துவதில்லை, நீங்கள் என்னதான் கத்தினாலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும் தஸ்லீமா நஸ்ரீனை இந்தியா வெளியேற்றம் செய்யாது !!

செந்தில் அழகு.

0 Comments:

Post a Comment

<< Home