|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 11, 2007

முஸ்லிம் விரோத எழுத்தாளர் தஸ்லீமா மீது எம்எல்ஏக்கள் தாக்குதல்


ஏகனின் திருப்பெயரால்..
வங்கதேச எழுத்தாளரும் தனது எழுத்துக்களால் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானவருமான தஸ்லீமா நஸ்'ரீன் தாக்கப்பட்டார்.

ஹைதராபாத் பிரஸ் கிளப்பில் இந்தத் தாக்குதல் நடந்தது. அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திகாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியைச் சேர்ந்த 3எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து தஸ்லிமாவைத் தாக்கினர்.

பத்திரிக்கையாளர்களை தஸ்லீமா சந்திக்க இருந்த நிலையில் 3 எம்எல்ஏக்கள் தலைமையில் அவரை எதிர்த்து கோஷமிட்டபடி வந்த அவர்கள் தாக்கினர். பூச்செண்டுஇ பூத் தொட்டி என கையில் கிடைத்தை எடுத்து அவர் மீது வீசினர். இதில் அவர் காயமடைந்தார்.

இந் நிலையில் அந்த 3 எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாம் குறித்தும்இ பெண்ணுரிமை குறித்தும்இ செக்ஸ் குறித்தும் பல சர்ச்சைக்குரிய புத்தகங்களை எழுதியுள்ளவர் தஸ்லீமா.

அவருக்கு எதிராக வங்கதேசத்தில் 'பத்வா' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இந்தியாவில் குடியேறி வசித்து வருகிறார்.

1 Comments:

At 9:24 AM, Blogger சந்திப்பு said...

வெளிச்சம். தஸ்லீமா நஸ்ரின் முஸ்லீம் விரோத எழுத்தாளர் அல்ல. மேலும் அவர் இஸ்லாத்துக்கும் எதிரானவர் அல்ல. அதே சமயம் புனித குர்ரானில் உள்ள பெண்ணடிமைத்தனம் - ஆணாதிக்க சிந்தனை மற்றும் பழமைவாத கருத்துக்கள் இன்றைய சமூகத்துக்கு ஒத்துவராதவை என்பதையும். அத்தகைய கருத்துக்களில் இசுலாமிய சமூகத்தை அடிமைத்தனத்தில் கருத்து ரீதியாக முகிழ்த்து வைத்திருப்பதற்கு எதிராக வெளிச்சம் பாய்ச்சி வருகிறார் தஸ்லீமா நஸ்ரின். இதற்கு எதிராக மத அடிப்படைவாதிகள் அவருக்கு பங்களாதேசில் இருந்து இந்தியா வரை கொலை மிரட்டல் விடுத்து தங்களது பழமைவாத தனத்தை காட்டி வருகிறார்கள். எனவே முஸ்லீம்கள் உண்மையில் எதிர்க்க வேண்டியது அந்த மத அடிப்படைவாதிகளைத்தானே ஒழிய தஸ்லீமா நஸ்ரினை அல்ல.

 

Post a Comment

<< Home