|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 30, 2007

திருச்சியில் மூட்டை மூட்டையாக ஜெலட்டின் குச்சிகள்

திருச்சி துவாக்குடியில், மூட்டை மூட்டையாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

துவாக்குடியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிட்டங்கியில் 18 மூடைகளில் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு உரிய அனுமதியை நடராஜன் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடராஜனை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதே சம்பவத்தில் ஒரு முஸ்லிம் பெயர் அடிபட்டிருந்தால், திருச்சி மலைக்கோட்டையை தகர்க்க முஸ்லிம் தீவிரவாதி சதி, சென்னையை தகர்க்க சதி என்றும் சம்மந்தப்பட்ட நபரோடு உலகில் உள்ள அனைத்து இயக்கத்தையும் சம்மந்தப்படுத்தி செய்தி வெளியிட்டு பரபரப்பை நமது காவல்துறையும், பத்திரிக்கைகளும் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் இந்த திருச்சி சம்பவத்தில் அதிக அளவில் வெடிப்பொருட்கள் பிடிபட்டும் சாதரண செய்தியாகயுள்ளது அதிர்சியளிக்கிறது. முஸ்லிம்கள் பிடிபட்டால் திவிரவாத குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்படுத்துவதும், அதே மற்றவர்கள் செய்தால் பாறையை பிளக்க மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள் பிடிப்பட்டது என்றும் செய்தி வெளியாவது வேடிக்கை. .இந்த சம்பவத்தை காவத்துறை தீவிர விசாரனை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் விருப்பம்.

0 Comments:

Post a Comment

<< Home