|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, September 22, 2007

ராமர் பெயரில் இனி பாஜக ஓட்டு வாங்க முடியாது-காரத்

ராமர் பால விவகாரத்தை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட பாரதீய ஜனதா கட்சி முயற்சித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கி மதப் பிரச்சனையாக்க மும்மரமாக முனைந்து வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

சென்னை வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது எனபதற்கு அறிவியல் பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில்,சேது சமுத்திர திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற முயல வேண்டும்.

ராமர் பால பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற தப்புக்கணக்கில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என்று அத்வானி கூறியிருக்கிறார். ராமரை முன்னிறுத்தி உத்தரப்பிரதேச தேர்தலில் களமிறங்கிய பாஜக அங்கு படுதோல்வி அடைந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,

சேது சமுத்திர திட்டத்தை பாஜக மத ரீதியான பிரச்சனையாக்குகிறது. அரசியல் ஆதாயத்துக்காக கற்பனைக் கதையை வரலாறு என்று சொல்லி அப்பாவி மக்களிடம் மத உணர்வுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்றார்.

0 Comments:

Post a Comment

<< Home