|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, January 28, 2007

இட ஓதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாஅத் தர்னா!

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு கோரி நாளை தவ்ஹீத் ஜமாஅத் தர்னா
நாகர்கோவில், ஜன. 28: முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை தர்னா போராட்டம் நடத்தப்படுகிறது என்று, அதன் மாநிலச் செயலர் ஹாஜா நூஹ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சிறுபான்மையினர் இட ஓதுக்கீடு விசயத்தில் அலட்சியம் காட்டும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை உணர்த்தும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், சச்சார் கமிட்டி பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்படும்.

போராட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் குடும்பத்துடன் பங்கேற்பர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை எரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 வரை இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஹாஜா நூஹ்.

தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் அபூதாகிர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி - தினமணி 28-01-2007

0 Comments:

Post a Comment

<< Home