|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, December 18, 2006

இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி ஜன. 29-ல் தர்னா!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி நெல்லையில் ஜன. 29-ல் தர்னா.

திருநெல்வேலி, டிச. 18:

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 29-ம் தேதி மாவட்டம் தழுவிய தர்னா போராட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் மாவட்டத் தலைவர் எஸ். யூசப் அலி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ், மாநிலச் செயலர்கள் சம்சுல் லுஹா, காஜாநூஹ், எம்.எஸ். சுலைமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீடு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இட ஓதுக்கீடு சம்பந்தமாக முஸ்லிம்கள் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தப் பிரச்சினையில் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதற்கு கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி, ஜனவரி 29-ம் தேதி மாவட்டம் தழுவிய அளவில் திருநெல்வேலியில் தர்னா போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்சி, மாவட்டச் செயலர் கே.ஏ.ஓ.சாதிக், மாவட்டப் பொருளாளர் நேசனல் சாகுல், மாவட்ட துணைத் தலைவர் முஹமது அலி, மாவட்ட துணைச் செயலர் அப்துல் மற்றும் நிர்வாகிகள் முகைதீன், முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி - தினமணி 18-12-2006

0 Comments:

Post a Comment

<< Home