|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, November 01, 2007

மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி சென்னையில் இன்று மழையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!




குஜராத்தில் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுகுவித்தது மோடி தான் என்பதை ஆதாரப்பூர்வமாக தெஹல்கா நிரூபித்ததை அனைவரும் அறிவர். இதனைத் தொடர்ந்து மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக் கோரி சென்னையில இன்று (30-10-2007) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

திடீர் என்று ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மழை என்றும் பாராமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், மாநிலச் செயலளார் சித்தீக் ஆகியோர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் மற்றும் துனைத் பொதுச் செயலாளர் ஏ.எஸ் அலாவுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.



0 Comments:

Post a Comment

<< Home