|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, October 25, 2007

களியக்காவிளை விவாதமும் கலங்கி போன கூட்டமும்

அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சுன்னத் வல் ஜமாஅத் என்ற பசுத்தோலை போர்த்திக்கொண்டு இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பரேலவிகள் எனும் புலிகள், விவாதத்தில் பதில் சொல்ல முடியாமல் போனால் விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என எண்ணித்தான் ஒப்பந்த தினத்தன்று தலைப்புகள் இருதரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனாலும் அவர்கள் நேரத்தை கடத்தும் விதமாக, நீங்கள் (P.J) சுப்ஹான மவ்லூது ஓர் ஆய்வு , இஸ்லாமிய அடிப்படை கல்வி போன்ற புத்தகங்களில் அப்படி எழுதியிருக்கிறீர்களே இப்படி எழுதியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அங்கே என்ன எழுதினோம், இங்கே என்ன எழுதினோம் என்பதல்ல இப்போதைய தலைப்பு, அதைவிட இன்னும் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளோம். அங்கே எழுதியது பற்றி தனிதலைப்பில் நாம் விவாதிப்போம், இப்பொழுது இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பற்றி நாம் விவாதிப்போம் என்று தவ்ஹீத் அணியினர் கூறியபோது, அது அவர்களுக்கு சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது.


ஏனென்றால் விவாத ஒப்பந்த தினத்தன்று சொல்லப்பட்ட பல தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் இந்த நான்கு தலைப்புகளும். எனவே அவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் பதில்கள் தரப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்த விதி. உதாரணமாக, துபாயில் அரசு அனுமதியுடன் மவ்லூது நடக்கின்றது என்றார்கள். துபாயில் காபரே டான்ஸ் கூட அரசு அனுமதியுடன் நடக்கிறது, எனவே அதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் சொல்வீர்களா என்று தவ்ஹீத் அணியினரால் கேட்க முடியும். ஆனால் இது தலைப்பிலிருந்து விலகி நேரத்தை வீணாக்கிவிடும். எனவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருதரப்பாரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளை முதலில் பார்ப்போம் என்றனர்.


ஆனால் இந்த பரேலவிகளோ தாங்கள் எழுதிக்கொண்டு வந்ததைத்தான் திரும்ப திரும்ப சொன்னார்களே தவிர தவ்ஹீத் அணிக்கு பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. 'சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுங்கள், 9 கேள்வி கேட்டோம் 10 கேள்வி கேட்டோம் என்று விடாமல் சொல்லுங்கள். அவர்கள் அதற்கு பதில் சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லுங்கள்' என்று ஷேக் அப்துல்லா ஜமாலி தன்னுடைய அணியினருக்கு எழுதிக் கொடுத்த துண்டு சீட்டுகள் இன்றும் என் கைவசம் இருக்கின்றன.


நிகழ்சியின் செலவுகளை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்த விதியாக இருந்த போதிலும் மண்டபம் மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்களை அவர்கள் ஏற்பாடு செய்ததால், அவர்கள் தரப்பிலுள்ள பார்வையாளர்களும் மைக்கில் பேசி குறுக்கிட்டார்கள், தவ்ஹீத் அணியின் மௌலவிகள் பேசும்போது மைக்கை ஆஃப் பண்ணினார்கள்.

தவ்ஹீத் அணியில் 8 பேர் விவாதித்தார்களென்றால் பரேலவிகள் அணியிலோ 208 பேர் விவாதித்தார்கள். பரேலவிகள் அணியிலிருந்த பார்வையாளர்கள் 200 பேரும் எழுந்து கூச்சல் போட்டனர். பாட்டில்களை வீசினர், களியக்காவிளையை பற்றி உங்களுக்கு தெரியாது என்று மிரட்டினர். களியக்காவிளையை விட்டு வெளியே போக முடியாது என்று கூறினர். கூச்சல்போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தமிழன் டிவி யில் வரும் மேலை நாஸர் என்பவரை ஒப்பந்தப்படி வெளியேற்றும் படி தவ்ஹீத் அணியின் நடுவர் கூறியபோது, மீதமுள்ள 199 பேரும் கூச்சல் போட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டினர். தவ்ஹீத் அணியின் பார்வையாளர்கள் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கி அமைதி காத்தனர். ஏனென்றால் 'நீங்கள் யாரும் எழுந்திருக்கக் கூடாது, இந்த விவாதம் நடக்க வேணடும். பல வருடங்களாக விவாதத்திற்கு மறுத்தவர்கள் வேறு வழியின்றி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் விவாதத்தை முடக்க எதுவும் செய்யலாம் ,ஆனால் இந்த விவாதம் நடக்க வேண்டுமானால், இந்த அரங்கத்தில் எத்தகைய அசம்பாவிதம் நடந்தாலும் சரி நீங்கள் எழுந்திருக்கக் கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் அணியின் தலைவரும் நடுவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் அமைதி காத்தனர்.


எந்த அளவிற்கென்றால் அந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த அன்றைய குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான சகோ.ஹாஜா நூஹ்வை அவர்கள் அடித்தபோது கூட திருப்பி அடிக்க சக்தியிருந்தும் எதுவும் செய்யாமல் பொறுமை காத்தனர். மௌலவிகள் மட்டுமே பதிலளித்தனர். சற்று கடுமையாகவே நடந்து கொண்டனர். ஏனென்றால் அவர்களிடத்தில் சத்தியம் இருந்தது. அபுபக்கர்(ரலி) அவர்களின் மகன் தந்தையை நோக்கி 'தந்தையே அன்று போர்க்களத்தில் எதிரணியில் இருந்த நீங்கள், என் வாளுக்கு பக்கத்தில் இருந்தீர்கள், என் தந்தையாயிற்றே என்ற பாசத்தால் உங்களை நான் கொல்லாமல் விட்டு விட்டேன்' என்று சொன்னபோது, 'அதுபோன்ற ஒரு வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைத்திருக்குமானால், என் மகனாயிற்றே என்று உன்னை நான் விட்டிருக்கமாட்டேன். மாறாக கொன்றிருப்பேன்' என்று அபுபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். ஏனென்றால் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் பாடம் படித்தவர்கள். அதுபோலவே குர்ஆனையும் ஹதீஸையும் ஏற்றுக்கொண்டிருக்கும் தவ்ஹீத்வாதிகள், அசத்தியவாதிகளிடமும் இணைவைப்பாளர்களுடனும் கடுமையாகத்தான் நடந்து கொள்வார்கள்.


தவ்ஹீத் அணியினர் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிவீச தயாராக வந்தபோது, அதற்கெல்லாம் தேவையில்லாமல் குளத்தங்கரையிருந்து அவர்களை அல்லாஹ் எழுந்திருக்க முடியாமல் செய்துவிட்டான். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!


விவாதம் முடிந்தபின், சுப்ஹான மௌலூதில் இத்தனை அசிங்கங்களும் ஆபாசங்களும் தான் உள்ளனவா என்பதை களியக்காவிளை விவாதத்தை விண் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இதையா நாங்கள் கண்ணியம், புண்ணியம் என நினைத்து ஓதிக்கொண்டிருந்தோம், எங்களை தெளிவுபெறச் செய்த இறைவா உனக்கு நன்றி என ஒவ்வொரு குடும்ப பெண்மணிகளும் கூறியதைக் கேட்டு புகழனைத்தும் இறைவனுக்கே என்றோம்.


இறுதியாக, அந்த விவாதம் களியக்காவிளையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. களியக்காவிளை பகுதியில் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி வந்தனர். அந்த நிகழ்ச்சியை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்த ஷிஹாப் என்பவரின் உதவியாளர்வரை இன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துள்ளார் என்றால் இது எத்தகைய வெற்றி என்பதை உணரமுடியும். மேலும், விவாதத்திற்கு முன்புவரை சுன்னத் வல் ஜமாஅத்தில் இருந்த களியக்காவிளை இளைஞர்கள் விவாதத்தை கண்டபின், தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட தலைமையை தொடர்பு கொண்டு களியக்காவிளையில் உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை துவங்கியே தீர வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, அங்கு அவர்களை வைத்தே கிளையும் துவங்கப் பட்டது. விவாதத்திற்கு முன்பு வரை சுன்னத் ஜமாஅத்திலிருந்த இளைஞர்கள், இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்துடைய களியக்காவிளை கிளையின் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். உள்ளங்களை புரட்டக் கூடியவன் அல்லாஹ். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!


(குறிப்பு : விவாதத்திற்கு பின் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாறி அவர்கள் அறியாமையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததை விவரித்து உணர்வுபூர்வமாக உள்ளத்திலிருந்து அளித்த பேட்டிகள் அடங்கிய சி.டி விண் டிவி யிலும் ஒளிபரப்பப்பட்டது. அது நம்மிடமும் உள்ளது.)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
முஹம்மது மாஹீன்

5 Comments:

At 1:17 PM, Blogger சிந்திக்க உண்மைகள். said...

CAN YOU PLEASE PUBLISH THIS IN YOUR BLOG.



முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/10/26/india-sting-traps-footsoldiers-of-gujarat-riots.html

 
At 3:20 PM, Blogger Unknown said...

வியாழன், அக்டோபர் 25, 2007
சுபுஹான மௌலிதில் தவறில்லை!
பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது!களியக்காவிளை விவாதத்தின்போது!

அன்பிற்குரிய இஸ்லாமியர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சேர்ந்த அதன் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மௌலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.

அதில் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த ஊனுயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் மௌலிது பற்றிய விவாதம் நடைப்பெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மௌலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மௌலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூல்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மௌலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மௌலிதில் என்ன தவறு இருக்கிறது? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மௌலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மௌலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும.; ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மௌலிதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் "சுபுஹான மௌலிது ஒரு ஆய்வு" எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு, பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.

விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமை பட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.

முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா? என்று பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணி கருதியிருந்தால், டாஷ் வென்ற அணி பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும்?

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுல் ஆபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் "சுபுஹான மௌலிது ஒரு ஆய்வு" பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மௌலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் "இஸ்லாம் அடிப்படைக்கல்வி" இதவும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.

தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசி வரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட ஊனுயில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மௌலிதில் தொடங்கியது இதை கண்டுக்கொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமிது மௌலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மௌலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மௌலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத,; கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமிது மௌலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு "அரபி மொழி தெரியாது" என்று அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீனே "சுன்னத் ஜமாஅத்" அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீது ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் ஊனுயில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம.;

15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மௌலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது "ஷிர்க்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி (தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மௌலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மௌலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மௌலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மௌலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன்? "ஷிர்க்" என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மௌலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத,; விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன்?

மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மௌலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் "ஷிர்க்" அல்லவா? இது கூடுமா? இது மார்க்கத்தில் உண்டா? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன், சுபுஹான மௌலிதை ஆய்வு செய்து "சுபுஹான மௌலிது ஒரு ஆய்வு" என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜைனுல் ஆபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மௌலிதில் என்ன தவறு இருக்கிறது? என்று நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன், மௌலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மௌலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன்? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன? மௌலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார்? மௌலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன்? முகமூடி கிழிந்து விடும் என்றா? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன்? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம்? பி.ஜைனுல் ஆபிதீன் மௌலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா?

விவாதத்தில் பேசாமல் மௌனம் சாதித்ததின் மூலம் "சுபுஹான மௌலிதில் தவறில்லை" என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.

வஸ்ஸலாம்

சகதுல்லாஹ்
துபை.

Posted by விடாதுகருப்பு at at

Labels: இஸ்லாம் DiggIt! Del.icio.us

Bookmark this post:



7 comments:
Anonymous said...
நாங்கள் சுன்னத் ஜமாஅத் அறிஞர்களை பொதுவாக
விவாதத்திற்கு அழைத்தால் வருவதில்லை. நாங்கள் சுன்னத் ஜமாஅத் அறிஞரான எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலியை விவாதத்திற்கு அழைத்தால் ஒப்பந்தம் போட்டுவிட்டு ஓடிவிட்டார் என்று சொன்ன பி.ஜைனுல் ஆபிதீனா இப்படி? நேரயாக விவாதத்திற்கு வந்த சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் மௌலிதைப்பற்றி விளக்கம் கேட்காமல் மற்ற நேரங்களில் பேசி? இவ்வளவு நாட்களாக பேசி வந்ததெல்லாம் வெறும் புல்டாவா? தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் அறிஞர்கள் மீது பல சந்தேகங்களையல்லவா ஏற்படுத்துகிறது. மௌலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பி.ஜைனுல் ஆபிதீன் வாய் மூடி இருக்கலாமா?

முகம்மது சாதிக்
சென்னை

மதியம் 3:16 , அக்டோபர் 25, 2007
Anonymous said...
களியக்காவிளை விவாதமும் கலங்கி போன கூட்டமும்.


http://velicham2006.blogspot.com/2007/10/blog-post_25.html

காலை 4:16 , அக்டோபர் 26, 2007
Anonymous said...
களியக்காவிளை விவாதமும் கலங்கி போன கூட்டமும்.


அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சுன்னத் வல் ஜமாஅத் என்ற பசுத்தோலை போர்த்திக்கொண்டு இஸ்லாத்தை அழிக்கத்துடிக்கும் பரேலவிகள் எனும் புலிகள், விவாதத்தில் பதில் சொல்ல முடியாமல் போனால் விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என எண்ணித்தான் ஒப்பந்த தினத்தன்று தலைப்புகள் இருதரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனாலும் அவர்கள் நேரத்தை கடத்தும் விதமாக, நீங்கள் (P.J) சுப்ஹான மவ்லூது ஓர் ஆய்வு , இஸ்லாமிய அடிப்படை கல்வி போன்ற புத்தகங்களில் அப்படி எழுதியிருக்கிறீர்களே இப்படி எழுதியிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அங்கே என்ன எழுதினோம், இங்கே என்ன எழுதினோம் என்பதல்ல இப்போதைய தலைப்பு, அதைவிட இன்னும் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளோம். அங்கே எழுதியது பற்றி தனிதலைப்பில் நாம் விவாதிப்போம், இப்பொழுது இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பற்றி நாம் விவாதிப்போம் என்று தவ்ஹீத் அணியினர் கூறியபோது, அது அவர்களுக்கு சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது.

ஏனென்றால் விவாத ஒப்பந்த தினத்தன்று சொல்லப்பட்ட பல தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் இந்த நான்கு தலைப்புகளும். எனவே அவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் பதில்கள் தரப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்த விதி. உதாரணமாக, துபாயில் அரசு அனுமதியுடன் மவ்லூது நடக்கின்றது என்றார்கள். துபாயில் காபரே டான்ஸ் கூட அரசு அனுமதியுடன் நடக்கிறது, எனவே அதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று நீங்கள் சொல்வீர்களா என்று தவ்ஹீத் அணியினரால் கேட்க முடியும். ஆனால் இது தலைப்பிலிருந்து விலகி நேரத்தை வீணாக்கிவிடும். எனவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருதரப்பாரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளை முதலில் பார்ப்போம் என்றனர்.

ஆனால் இந்த பரேலவிகளோ தாங்கள் எழுதிக்கொண்டு வந்ததைத்தான் திரும்ப திரும்ப சொன்னார்களே தவிர தவ்ஹீத் அணிக்கு பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. 'சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுங்கள், 9 கேள்வி கேட்டோம் 10 கேள்வி கேட்டோம் என்று விடாமல் சொல்லுங்கள். அவர்கள் அதற்கு பதில் சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லுங்கள்' என்று ஷேக் அப்துல்லா ஜமாலி தன்னுடைய அணியினருக்கு எழுதிக் கொடுத்த துண்டு சீட்டுகள் இன்றும் என் கைவசம் இருக்கின்றன.

நிகழ்சியின் செலவுகளை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்த விதியாக இருந்த போதிலும் மண்டபம் மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்களை அவர்கள் ஏற்பாடு செய்ததால், அவர்கள் தரப்பிலுள்ள பார்வையாளர்களும் மைக்கில் பேசி குறுக்கிட்டார்கள், தவ்ஹீத் அணியின் மௌலவிகள் பேசும்போது மைக்கை ஆஃப் பண்ணினார்கள்.

தவ்ஹீத் அணியில் 8 பேர் விவாதித்தார்களென்றால் பரேலவிகள் அணியிலோ 208 பேர் விவாதித்தார்கள். பரேலவிகள் அணியிலிருந்த பார்வையாளர்கள் 200 பேரும் எழுந்து கூச்சல் போட்டனர். பாட்டில்களை வீசினர், களியக்காவிளையை பற்றி உங்களுக்கு தெரியாது என்று மிரட்டினர். களியக்காவிளையை விட்டு வெளியே போக முடியாது என்று கூறினர். கூச்சல்போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தமிழன் டிவி யில் வரும் மேலை நாஸர் என்பவரை ஒப்பந்தப்படி வெளியேற்றும் படி தவ்ஹீத் அணியின் நடுவர் கூறியபோது, மீதமுள்ள 199 பேரும் கூச்சல் போட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டினர். தவ்ஹீத் அணியின் பார்வையாளர்கள் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கி அமைதி காத்தனர். ஏனென்றால் 'நீங்கள் யாரும் எழுந்திருக்கக் கூடாது, இந்த விவாதம் நடக்க வேணடும். பல வருடங்களாக விவாதத்திற்கு மறுத்தவர்கள் வேறு வழியின்றி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் விவாதத்தை முடக்க எதுவும் செய்யலாம் ,ஆனால் இந்த விவாதம் நடக்க வேண்டுமானால், இந்த அரங்கத்தில் எத்தகைய அசம்பாவிதம் நடந்தாலும் சரி நீங்கள் எழுந்திருக்கக் கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் அணியின் தலைவரும் நடுவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் அமைதி காத்தனர்.
எந்த அளவிற்கென்றால் அந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த அன்றைய குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான சகோ.ஹாஜா நூஹ்வை அவர்கள் அடித்தபோது கூட திருப்பி அடிக்க சக்தியிருந்தும் எதுவும் செய்யாமல் பொறுமை காத்தனர். மௌலவிகள் மட்டுமே பதிலளித்தனர். சற்று கடுமையாகவே நடந்து கொண்டனர். ஏனென்றால் அவர்களிடத்தில் சத்தியம் இருந்தது. அபுபக்கர்(ரலி) அவர்களின் மகன் தந்தையை நோக்கி 'தந்தையே அன்று போர்க்களத்தில் எதிரணியில் இருந்த நீங்கள், என் வாளுக்கு பக்கத்தில் இருந்தீர்கள், என் தந்தையாயிற்றே என்ற பாசத்தால் உங்களை நான் கொல்லாமல் விட்டு விட்டேன்' என்று சொன்னபோது, 'அதுபோன்ற ஒரு வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைத்திருக்குமானால், என் மகனாயிற்றே என்று உன்னை நான் விட்டிருக்கமாட்டேன். மாறாக கொன்றிருப்பேன்' என்று அபுபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். ஏனென்றால் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் பாடம் படித்தவர்கள். அதுபோலவே குர்ஆனையும் ஹதீஸையும் ஏற்றுக்கொண்டிருக்கும் தவ்ஹீத்வாதிகள், அசத்தியவாதிகளிடமும் இணைவைப்பாளர்களுடனும் கடுமையாகத்தான் நடந்து கொள்வார்கள்.

தவ்ஹீத் அணியினர் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிவீச தயாராக வந்தபோது, அதற்கெல்லாம் தேவையில்லாமல் குளத்தங்கரையிருந்து அவர்களை அல்லாஹ் எழுந்திருக்க முடியாமல் செய்துவிட்டான். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!

விவாதம் முடிந்தபின், சுப்ஹான மௌலூதில் இத்தனை அசிங்கங்களும் ஆபாசங்களும் தான் உள்ளனவா என்பதை களியக்காவிளை விவாதத்தை விண் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இதையா நாங்கள் கண்ணியம், புண்ணியம் என நினைத்து ஓதிக்கொண்டிருந்தோம், எங்களை தெளிவுபெறச் செய்த இறைவா உனக்கு நன்றி என ஒவ்வொரு குடும்ப பெண்மணிகளும் கூறியதைக் கேட்டு புகழனைத்தும் இறைவனுக்கே என்றோம்.

இறுதியாக, அந்த விவாதம் களியக்காவிளையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. களியக்காவிளை பகுதியில் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி வந்தனர். அந்த நிகழ்ச்சியை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்த ஷிஹாப் என்பவரின் உதவியாளர்வரை இன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்துள்ளார் என்றால் இது எத்தகைய வெற்றி என்பதை உணரமுடியும். மேலும், விவாதத்திற்கு முன்புவரை சுன்னத் வல் ஜமாஅத்தில் இருந்த களியக்காவிளை இளைஞர்கள் விவாதத்தை கண்டபின், தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட தலைமையை தொடர்பு கொண்டு களியக்காவிளையில் உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை துவங்கியே தீர வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, அங்கு அவர்களை வைத்தே கிளையும் துவங்கப்பட்டது. விவாதத்திற்கு முன்பு வரை சுன்னத் ஜமாஅத்திலிருந்த இளைஞர்கள், இன்றைக்கு தவ்ஹீத் ஜமாஅத்துடைய களியக்காவிளை கிளையின் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். உள்ளங்களை புரட்டக் கூடியவன் அல்லாஹ். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!

(குறிப்பு : விவாதத்திற்கு பின் சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாறி அவர்கள் அறியாமையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததை விவரித்து உணர்வுபூர்வமாக உள்ளத்திலிருந்து அளித்த பேட்டிகள் அடங்கிய சி.டி விண் டிவி யிலும் ஒளிபரப்பப்பட்டது. அது நம்மிடமும் உள்ளது.)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
முஹம்மது மாஹீன்

http://velicham2006.blogspot.com/2007/10/blog-post_25.html

மாலை 6:05 , அக்டோபர் 26, 2007
Anonymous said...
I am not going to argue whether PJ is correct or not.

But subhana moulud or any other moulood are totally rubbsih and can lead into shirk.

To oppose PJ, finally you guys forced to support moulood. Shame on you.

Sorry to post it in english as i don't have Tamil font

இரவு 10:50 , அக்டோபர் 26, 2007
Anonymous said...
இறைவேதமாம்-இறுதி வேதமாம் குர் ஆனை மூட்டைகட்டி வைத்துவிட்டு - 'வாஜி-வாஜி-வாஜி..சிவாஜி' ட்யூன் போட்டோ..அல்லது 'தீப்பிடிக்க...தீப்பிடிக்க முத்தம் கொடுடா' ட்யூன் போட்டு சூப்பர்' சுப்ஹான மவ்லுதை ஓதி - மறுமையில் 'சுவர்க்கம்' செல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்..ஆமின்

நாகூர் ஆண்டவர் தாசன்

இரவு 11:10 , அக்டோபர் 26, 2007
Anonymous said...
தவ்ஹீது ஜமாஅத்தின் தறுதலைத்தனத்தை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் களியக்காவிளை விவாதத்தில் உள்ள முதல் இரண்டு சீடீயைப்பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். தவ்ஹீது ஜமாஅத் மேடைகளிலே வீரத்தோடு சவால் விடுவது, சவாலை ஏற்று விவாத ஒப்பந்தத்திற்கு வந்தால் குளறுபடி செய்வது ஓடிவிடுவது இதுவெல்லாம் தவ்ஹீது ஜமாஅத்தில் நீண்ட காலமாக இருந்து வருவதை அனைவரும் அறிவர். எல்லாசெயலையும் வீடியோ எடுத்து சீடீ போட்டு வெளியிடுவார்கள். சுன்னத் ஜமாஅத்தோடு நடந்த விவாத ஒப்பந்தங்கள் மட்டும் சீடீயில் வராது. ஓடிவிட்டார்கள் என்று மொட்டையாக செய்திதான் வரும். ஹாமிது பக்ரி அவர்கள் (பி.ஜைனுல் ஆபிதீனுடன் இருந்த காலத்தில் அவரின் அறிவுரையுடன்) முஸதபா ரஷாதியுடன் விவாதம் நடைப்பெற்றது. அதை வெளியிடும் தைரியம் தவ்ஹீது ஜமாஅத்தின் தலைமைக்கும் கிடையாது. அதை வெளியிடுமாறு கேட்கும் துணிவு தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும் கிடையாது. தவ்ஹீது ஜமாஅத்தினருக்கே இந்த விவாதம் நடந்தது தெரியுமா? என்று தெரியவில்லை. தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு தெரிந்ததெல்லாம் தவ்ஹீது ஜமாஅத் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுக்கொள்வதும் மற்றவர்கள் சொன்னால் சீறுவதும் தான். பொதுவாக மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறது. இவர்களுக்கு?

அமீன்
திருவாரூர்

மாலை 6:44 , அக்டோபர் 28, 2007
Mohamed Sadiq said...
எந்த அணியினரும் பீ.ஜே யின் சவாலை ஏற்று எப்படி வர முடியும். மைக்கையும், கூட்டத்தையும் பார்த்து எமோஷன் ஆகக்கூடியவரின் பேச்சை எப்படி நம்ப முடியும். விவாதத்திற்கு தயாரா? என்று பீ.ஜே சுன்னத் ஜமாஅத்தினருக்கு சவால் விடும் தகுதியை இழந்து விட்டார். தொடை நடுங்கியாகிவிட்டார். விவாதத்தில் நான் பேசுகிறேன் என்று பத்திரத்தில் எழுதி அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து நான்கு சாட்சிகளுடன் பீ.ஜே வந்தால் அவரை சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் விவாதத்தில் பங்கு பெற அனுமதி கொடுத்து விவாதத்தை நடத்தலாம். இல்லையென்றால் பீ.ஜே சூரியனைப்பர்ர்த்து கத்துகிறார், பிழைப்பு நடத்திக்கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும்.

மாலை 6:27 , அக்டோபர் 29, 2007

 
At 2:56 PM, Blogger வெளிச்சம் said...

யார் விவாதத்தை தொடங்கினால் என்ன ஒட்டு மொத்த விவாதத்தின் சிடியை பார்த்து தவ்ஹிதுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மை. எனக்கு தெரிந்த சுன்னத் ஜமாத் சகோதரரரே இனி மௌலுது ஓத மாட்டேன் என்று முடிவெடுத்ததை கண்ணால் கண்டேன். எனக்கு தெரிந்து மௌலுதில் இவ்வளவு குப்பைகள் உள்ளதை பல ஊர் பொதுக்கூட்டத்தின் வழியாக உலகுக்கு வெளிக்கொண்டு வந்தது மௌலவி.பிஜெ அவர்களே. அவரை பார்த்து பதில் சொல்ல தெரியவில்லை என்பதும், தோத்துவிட்டார் என்பதும் உட்சகட்ட நகைச்சுவை.

ஒரு வருட காலம் விவாதிப்பதற்க்கு ஏராளமான விசயங்கள் சுன்னத் ஜமாத்துக்கும், தவ்ஹித் ஜமாத்துக்கும் உள்ளது. விவாத ஒப்பந்தத்தில் என்ன உள்ளதோ அதைத்தான் விவாதிக்க வேண்டும் என்ற சாதாரண விசயம் கூட தெரியாத சு.ஜ வும் அவற்களை தாங்கி பிடிக்கும் இந்த மேதாவிகளை என்ன வென்று சொல்வது. விவாதத்தை திசை தருப்பக்கூடிய பிஜெயின் புத்தகங்கள் பற்றிய கேள்வியை தவிர்ததை பற்றி குறை கூறும் இவர்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.
M.Jaheer Hussain.

 
At 3:17 PM, Blogger Unknown said...

சகோ.பிஜேவுக்கு சுப்ஹான மவுலூதை பற்றி பதில் சொல்ல தெரியவில்லையா?. சகோதரர்கள் ஜோக்கடிக்க வேறு எதையாவது செய்யவும். விவாத சிடியை பாரத்தவர்களுக்கு உண்மை தெளிவாக தெரியும். விதாண்டாவாதம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். விவாத ஒழுங்கு தெரியாதவர்கள் பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.சகோ. மாஹினுக்கு எனது பாராட்டுக்கள்

வஸ்ஸலாம்....Basheer

 
At 1:27 PM, Blogger Indian said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சுன்னத் வல் ஜமாஅத் அணியினர் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளிவீச தயாராக வந்தபோது, அதற்கெல்லாம் தேவையில்லாமல் குளத்தங்கரையிருந்து அவர்களை அல்லாஹ் எழுந்திருக்க முடியாமல் செய்துவிட்டான். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே!

கடைசி வரை சுபுஹான மௌலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை.சுபுஹான மௌலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத ஆனால் பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன்? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம்?

சகோ.பிஜேவுக்கு சுப்ஹான மவுலூதை பற்றி பதில் சொல்ல தெரியவில்லை. விவாத சிடியை பாரத்தவர்களுக்கு உண்மை தெளிவாக தெரியும். விதாண்டாவாதம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும். விவாத ஒழுங்கு தெரியாதவர்கள் பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

தவ்ஹீது ஜமாஅத்தின் தறுதலைத்தனத்தை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்....

கடைசி வரை சுபுஹான மௌலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும்
இல்லை ஆனால்
"சுப்ஹான மௌலூதில் இத்தனை அசிங்கங்களும் ஆபாசங்களும் தான் உள்ளனவா என்பதை களியக்காவிளை விவாதத்தை விண் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம். இதையா நாங்கள் கண்ணியம், புண்ணியம் என நினைத்து ஓதிக்கொண்டிருந்தோம், எங்களை தெளிவுபெறச் செய்த இறைவா உனக்கு நன்றி என ஒவ்வொரு குடும்ப பெண்மணிகளும் கூறியதைக் கேட்டு புகழனைத்தும் இறைவனுக்கே என்றோம்".?????????!!!!!!!

நாகூர் ஆண்டவர் தாசன்

 

Post a Comment

<< Home