|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 23, 2007

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும், கிருஸ்துவர்களுக்கு 3.5 சதவீதமும் ஆக மொத்தம் சிறுபான்மையினருக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

முதல்வர் கருணாநிதி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அவை முன்னவரும் நிதியமைச்சருமான அன்பழகன் இதை முன்மொழிந்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, இன்றைய கூட்டத்துடன் சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Thanks...thatstamil

0 Comments:

Post a Comment

<< Home