|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 23, 2007

யார் இந்த போலி?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்புக்குறித்தான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சத்தியமார்க்கம் இணையதளத்தின் அறிவிப்பு கட்டுரையை கீழே தந்துள்ளேன். இதை ஏன் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன் என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். நோன்பு கால வேளையில் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம் என்றே பொருமை காத்து வந்தேன். கடந்த நோன்புப் பெருநாளின் விடுமுறையில் 4 நாட்களை சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண பகுதியில் கழித்தேன். அந்த பயணம் கூட ஒருவகையில் இந்த ஈமெயில் அனுப்பக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லலாம்.

வக்கிர சிந்தனை இல்லாத ஒரு மனிதன் உலகில் இருப்பதாக நான் நம்பவில்லை. அதை அடக்கி ஆள்பவன் சமுதாயத்தில் நல்ல மனிதனாக பிரகாசிக்கிறான். அதை அடக்காமல் அடங்காப்பிடாரியாக இருப்பவன் அசிங்கப்படுகிறான், கேவலப்பொருளாக காட்சி அளிக்கிறான். அப்படியொரு கேவலப்பொருளாக விளங்கும் ஒருவனை அடையாளம் காட்டும் தொடக்கம் தான் இது. கண்னை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லும் ஒரு குருமதியாளனின் முகத்திரையை கிழிக்கும் முயற்சியின் ஆரம்பமாக இதை எடுத்து கொள்ளுங்கள்.

நான் யாரைப்பற்றி பேசுகிறேன் அல்லது யார் இந்த போலி என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கட்டுரையில் நான் எதையெல்லாம் சிகப்பு கலரில் ஹை லைட் செய்துள்ளேனோ அவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

என்னை அறிந்தவர்கள் மத்தியில் என்னைப் பற்றியும், எனது அன்பு உறவுகள் பற்றியும் இழிவு படுத்தி இந்த போலி கருத்து பரப்பியுள்ளான். என்னைப் பொருத்தவரை மாற்றான் தோட்டத்து மல்லிகையின் நறுமணத்தையும் பொருந்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். அதே சமயம், சக முஸ்லிம் சகோதரனின் கண்ணியத்தை பேண தவறிய/முடியாத இந்த போலியின் கண்ணியத்திற்கு நான் எந்த உத்தரவாதத்தையும் தர விரும்பவில்லை.

இன்ஷா அல்லாஹ் தேவையேற்படும் பட்சத்தில் வெளிப்படையாக அந்த போலியின் ஒரிஜினல் பெயரிட்டு இது தொடர்பான எனது அடுத்த மெயிலை அனுப்புகிறேன். மாற்று மத சகோதரர்களிடையே முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த போலியை என்னால் முடிந்தளவு சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட நான் தயங்க மாட்டேன். எந்த சூழலிலும் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தாமல் இருக்க என்னால் முடிந்தளவு நான் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

இந்த போலியை அடையாளம் தெரிந்து கொண்டவர்களும், தெரிந்து கொள்ளாதவர்களும் அன்பு கூர்ந்து எனது இந்த ஈமெயிலை சச்சரவுகளில் நாட்டமில்லாத உங்களுக்கு தெரிந்த சகோதரர்களுக்கு அனுப்பி வையுங்கள். அப்படி செய்வது அந்த போலி பற்றிய விழிப்புணர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தும். தெரிந்து கொள்ளாதவர்கள் அடுத்தடுத்த ஈமெயில் வழியாக இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வார்கள், .

அன்புடன்,
முத்துப்பேட்டை ஏ.ஆர்.பரக்கத் அலி
ரியாத் - சவுதி அரேபியா

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-
சத்தியமார்க்கம்.காம் பெயரில் இயங்கும் போலிகள்!
செவ்வாய், 02 அக்டோபர் 2007

கடந்த சில வாரங்களாக சத்தியமார்க்கம்.காம் என்ற நமது இணைய தளத்தின் பெயரில் ஒருவர் திருகுதாளம் செய்து விஷமத்தனமாகப் பல இடங்களில் நிதானமிழந்து மோசமான வகையில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்.

இதனை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தாலும் விஷமிகளின் அறிவிழந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும் , போலிகளுக்கு நாமே இலவச விளம்பரத்தை நமது தளத்தில் கொடுக்க வேண்டாம் என நினைத்ததாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளிக் கொண்டிருந்தோம் .

மேலும் , சமுதாயம் உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற விஷமத்தனங்களின் பக்கம் நமது கவனத்தைச் செலுத்தினால் சமூக சிந்தனையின் பக்கமிருந்து நமது கவனம் திருப்பப்பட்டு இது போன்ற மனநோயாளிகளிடத்தில் பதிலுக்கு பதில் , விளக்கம் என நமது பொன்னான நேரம் வெறுமனே வீணாகும் என நினைத்ததாலும் அதுவே இஸ்லாத்தின் எதிரிகள் மற்றும் இது போன்று விஷமிகளின் நோக்கம் என்பதை நாம் நன்கறிந்ததாலும் அவர்களின் இச்சூழ்ச்சி வலையில் விழக்கூடாது என்ற நோக்கில் முழுமையாக அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம் .

ஆனால் சில வாசக சகோதரர்கள் போலியின் எழுத்துகளை நேரடியாகக் குறிப்பிட்டு நம்மிடம் கீழ்கண்ட விதத்தில் விளக்கம் கோரி வருகின்றனர்.

//தங்கள் இணைய தளத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு கிறிஸ்தவ நண்பரின் வலைப்பதில் ஒரு செய்தியை ஒருவர் பதித்துள்ளார் . தாங்கள் அது பற்றி ஏன் எந்தச் செய்தியோ மறுப்போ இது வரை வெளியிடவில்லை . அப்படியானால் அத்தகவல் தாங்கள் பதித்தது தானா ? என்பதை விளக்கவும்//

இது போன்று தொடர்ந்து வரும் வாசகர்களின் கணைகளுக்குத் தகுந்த விளக்கம் கூறப்படாத சூழலில் அவ்விஷம எழுத்துகளுக்கு உரியவர்களாக எம்மை யாரும் கருதிவிடலாகாது என்ற நோக்கில் கீழ்க்காணும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கட்டற்றச் சுதந்திரத்தைத் தன்னகத்தே கொண்ட இணையத்தில் எவரும் எந்தப் பெயரிலும் எழுதலாம் ; எழுதமுடியும் . அப்துல்லாஹ் என்ற பெயரில் ஒருவர் தவறானக் கருத்தை எழுதினால் அதற்காக அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்டவர்களையெல்லாம் சந்தேகிப்பது தவறானக் கண்ணோட்டம் ஆகும்.

சத்தியமார்க்கம் என்ற பெயரில் அடுத்த இணையத்திற்குச் சென்று எழுத நமக்கு எந்தத் தேவையும் இல்லை . அல்லாஹ்வின் அளப்பரும் அருளால் , எழுதுவதற்கும் பதிப்பதற்கும் எமக்குரியத் தனித் தளம் இருக்கும்போது வெளியே சென்று எழுத / பதிக்க வேண்டிய நிலையில் யாம் இல்லை . சத்தியம் என்றால் என்னவென்று தெரியாதவர்களே இது போன்ற போலிப் பெயர்களில் அசத்தியத்தைப் பரப்புவார்கள் .

'சத்திய மாக்கம் ' / ' சத்தியமார்க்கம் ' போன்ற பெயர்களில் இணைய சேவைகள் தரும் இலவச வலைப்பதிவுகளை ஏக அளவில் துவங்கி பிறரின் வலைப்பதிவுகளில் இவர் இட்டு வரும் பின்னூட்டங்களுக்குள் நம் தளத்தின் முகவரி கொடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தவறானக் கருத்தைப் பதிந்தவரிடம் அக்கருத்து பதியப்பட்ட இடத்திலேயே அதை நிரூபிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது . ஆனால் அவதூறு எழுதிய அந்த நபர் அதற்குத் தகுந்த விளக்கம் இதுவரை வைக்கவில்லை. இதிலிருந்தே அந்த நபரின் அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

"ஒருவர் தான் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு ) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் " என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள் . ( முஸ்லிம் )

ஆதாரமற்ற எந்தச் செய்திகளையும் முஸ்லிம்கள் நம்பி அதைப் பிறருக்குப் பரப்பக்கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம் . எனவே ஆதாரமற்ற அவதூறு செய்திகளை எளிதில் நம்பி , அதற்கு மறுப்பு என்ற பெயரில் அந்த நபரை விளம்பரப்படுத்த நாங்கள் தயாராக இல்லை . இன்ஷா அல்லாஹ் இனியும் அது பற்றி எழுத மாட்டோம் .

சத்தியமார்க்கம்.காம் இணைய தளமானது , http://www.satyamargam.com/ என்ற ஒரே டொமைன் முகவரியில் இருந்து மட்டுமே தற்போது இயங்குகிறது . சத்தியமார்க்கம் தளத்திற்கென்று வலைப்பதிவுகள் எதுவும் இல்லை . அவ்வாறு ஒரு வலைப்பதிவு துவங்கப்படின் அது சத்தியமார்க்கம் தளத்திலேயே தெளிவாக அறிவிக்கப்படும்.

எனவே http://www.satyamargam.com/ என்ற முகவரி அல்லாமல் வேறு எந்த முகவரியில் இருந்து சத்தியமார்க்கம் என்ற பெயரில் கருத்துகள் பதிக்கப்பட்டாலும் அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைச் சகோதரர்களுக்கு அறியத்தருகின்றோம் .

சத்தியமார்க்கம் பெயரில் விஷமத்தனமாக வேறு ஏதாவது முகவரிகள் இயங்குவதைச் சகோதரர்கள் அறியவரின் அவற்றை இங்குப் பதிந்து மனநோய் முற்றிப்போயிருக்கும் இப்போலி யை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன்
-நிர்வாகம்(சத்தியமார்க்கம்.காம்)

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-
கருத்துக்கள்
-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

பழுத்த மரம் கல்லடிபடும் என்பார்கள்.
சர்வதேச அளவில் இன்று சத்தியமார்க்கமாம் இஸ்லாம் அதிக அளவில் தாக்கப்பட்டு வருவதற்கும் இதுவே காரணம். இதில் சத்தியமார்க்கம் தளமும் விலக்கல்ல என்பது தெரிகிறது. நேரடியாக எதிர்க ொள்ளும் திராணியற்ற இதுப ோன்ற முதுகெலும்பு அற்ற க ோ ழைகளின் செயல்களை ஒதுக்குங்கள். இணையத்தில் இஸ்லாத்தை எடுத்தியம்ப தமிழ் தளங்கள் பல இருக்க மூடர்களால் குறிவைத்து கல்லடி பெறும் :) பழுத்த சத்தியமார்க்கம் தளத்திற்கு எம் வாழ்த்துக்கள். த ொடரட்டும் உங்கள் பணி. நன்றி

கருத்து எழுதியவர் இப்னுஅமீர் , பதிந்தது: October 2, 2007 நேரம்: 5:42
-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் இணைய உலகில் வலம் வருபவர்களுக்கு இதுப ோ ன்ற அசிங்கங்களை செய்வது யார் என்பது தெரியும்.
இவர் நிதானம் இழந்தது உங்களிடம் மட்டுமல்ல இவர் விஷமம் செய்து ஆங்காங்கே க ோட்டை விட்டு தன் தும்பை அடுத்தவர் கையில் க ொ டுத்து விட்டு மாட்டிக்க ொண்டு வருவது பல இடங்களில் நடந்துள்ளது.
தன்னைத் தவிர வேறு யாரும் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக அரசியல் பேசக்கூடாது என்று தனக்குத்தானே புலம்பிவரும் இவர் வெகு விரைவில் தனிமைப்படுத்தப்படுவது உறுதி.

கருத்து எழுதியவர் சவூதித்தமிழன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 7:32

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

சத்தியமாக்கம் என்ற (தவறான பெயருடன்) கிறிஸ்த்தவ இணையத்தளத்தில் எனக்கு எதிராகவே ( சற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல்) மிகக் கேவலமான கருத்துப்பதிக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் இணையத்தில் கிறிஸ்த்தவ இணையத்தின் பின்னூடலுக்கு பதிலளித்தோம். விமர்சிப்பவர்கள் அந்நிய முகமூடி அணிந்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று புரியவில்லை. சிறப்பாக செயல்படும் இணையங்களில் பெயரைக் கெடுக்க எடுக்கப்படும் சதிவேலையாக இது இருக்குமோ...

கருத்து எழுதியவர் ஜி.நிஜாமுத்தீன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 8:35

-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-+=-

நன்றி,

1 Comments:

At 8:48 AM, Blogger சிந்திக்க உண்மைகள். said...

"எழில்" என்ற ஒரு கொண்டை "இந்து நியூஸ் நெட்வொர்க்" (INN :-)) என்று வைத்துக் முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் தூற்றி எழுதிக்கொண்டு,

" உண்மை அடியான் " " இனிய இஸ்லாம் " "இது தான் இஸ்லாம் " என்று போலி ப்திவுக்ளின் மூல்மாக இஸ்லாத்தை இழிவுபடுத்தி கொண்டு வருகிறான்.
---------------------------
எழில் என்ற உண்மையடியான் ? மற்றும் ஒரு கொண்டை அம்பலம் !

'இந்துக்கள் பாகிஸ்தானில் தும்மியதற்கு மரண தண்டனை', 'பிட்பாக்கெட அடித்தவன் ஒரு அல்லும்மா தீவிரவாதி' என்று கட் அண்ட் பேஸ்டுகள் மூலம் ஆதாரம் காட்டி ஒரு நாளைக்கு 100 பதிவுகளை இஸ்லாமியர்களை எதிர்த்து எழுதி இந்துக்களுக்கு பேதி கொடுக்கும் எழில் என்ற வேதம் ஓதும் பதிவரின் பதிவுகளைப் தமிழ் பாரதியில் படித்திருப்பீர்கள், இவரும் 'தேச துரோக, நக்சலைட் கும்பல் குழுமியிருக்கும் இடமே தமிழ்மணம்' என்று வெட்ஜெட் போட்டு வைத்திருக்கிறார். அது குழுப்பதிவு ? அல்லது தனிப்பட்டவர் பதிவு ? என்பது தெரியவில்லை.

ஆனால் அதே குரூப் புதுக் கொண்டையைப் போட்டுக் கொண்டு முஸ்லிம் விரோத செய்திகளை "தமிழ்மணத்தில்" "தேன் கூடு" ல் 'உண்மையடியான்' என்ற பெயரில் எழுதிவருகிறது.

உண்மையடியான் சார் மொட்டை அடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் 'உண்மை கொண்டையை' எப்படி போட்டாலும் மறைக்க முடியாது.

தமிழ்மணத்துக்கு ஜே !

அம்பலமானதும் மறைந்து போன கொண்டை :)

பின்னூட்டமாக இதனை தெரிவித்த சென்னை அனானிக்கு நன்றி !
Posted by அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) at 5:42 AM

http://amkworld.blogspot.com/2007/10/blog-post_2628.html
--------------------------
1- முழுக்கட்டுரையில் இருந்து தனக்கு வேண்டிய வரிகளை மட்டும் பீறாய்ந்து போடுவது.

2- எந்தச் சூழலில் இப்படி பேச நேர்ந்தது என்கிற பின்னணியை முற்றாக மறைப்பது.

வெறிபிடித்த நரிகள்.

உலகம் முழுவதும் நகர விரிவாக்கம், சேரி ஒழிப்பு போன்றவை நடக்கத்தான் செய்கின்றன. அவற்றால் பாதிக்கப் படுகிறவர்கள் கீழ்த்தட்டு மக்கள்தான் என்பதும் எல்லர்கும் தெரியும். அது போன்ற ஒரு ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் நடந்திருக்கிறது. அது நியாயம் இல்லாததாக இருக்கலாம். அதனால் பாதிக்கப் படும் மக்களுக்காக குரல் தரலாம். ஆனால் இந்த பார்ப்பண நரி என்ன செய்கிறது தெரியுமா

அதில் ஒரு பகுதியினர் இந்துக்கள் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பாகிஸ்தானில் சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்படும் இந்துக்கள் என்று அடுத்த புலம்பலை ஆரம்பித்து விட்டது.

மனுஷர்களுக்காக குரல் கொடுக்காமல் மதங்களுக்காக குரல் கொடுக்கும் இந்த கொடூரப் பிறவிகளை என்ன செய்யலாம் சொல்லுங்கோ

Posted by கீரன் at 8:28 PM 0 comments
---------------------------
எழில் என்னும் தியாகப்போராளி
முஸ்லிம் பெண்கள் மீது அக்கறைப்பட்டு அவர்களின் விடுதலைக்காக வலைப்பூவில் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கும் எழில் என்ற தியாகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த நபருக்கு இந்து மதத்தில் பெண்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதில் எந்த அக்கறையும் இல்லை. பெண் அர்ச்சகர் விவகாரம் முதல் மாதவிலக்குக் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப் படுவது வரை இந்து மத்தில் பெண்ணடிமைத் தனம் பற்றிய எந்த விவாதத்திலும் இவருக்கு அக்கறை இல்லை.

ஆனால் எங்கே முஸ்லிம் பெண்கள் புரட்சிக்கு தயாராகிறார்களோ அங்கே இவர் தவறாமல் ஆஜராகி அவர்களுக்காக இலவசமாக வாதாடும் வக்கீலாகி விடுவார்.

இசுலாம் எப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறது, கிறிஷ்துவர்கள் எப்படி மதமாற்றம் செய்கிறார்கள் என்று கேட்டால் மிக விளக்கமாக ஆதாரங்களுடன் விவாதம் செய்யுவர்.

கிறிஷ்துவத்தின் குறைபாடு பற்றி கிறிஷ்துவ நாத்திகன் எழுதினால் அது இவருக்கு ஆதாரம். இசுலாம் பற்றி இசுலாமியர் விமர்சித்தால் இவருக்கு அது மிகப்பெரிய பொக்கிஷம். இந்து மதத்தின் சீர்கேடுகள் பற்றி இந்து நாத்திகன் எழுதினால் அது மட்டும் மதத்துவேஷம்.

இந்து நியூஸ் நெட்வொர்க் (INN :-)) என்று வைத்துக் கொண்டு மேலே கண்ட அத்தனையும் செய்யும் இந்த சாதனையாளர் தாய்மதம்? திரும்பிய இசுலாமிய, கிறிஷதுவர்கள் பற்றி புள்ளி விவரங்களும் அள்ளி விடுவார்.

வாழ்க எழிலரசரின் எழிலான சேவை.
http://mahadevanmayon.blogspot.com/2007/03/blog-post_777.html

 

Post a Comment

<< Home