|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 23, 2007

TNTJ - திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு தொந்தரவையும், அவர்களுடைய சொத்துக்களுக்கு சேதத்தையும் பி.ஜே.பி மற்றும் இந்து முன்னனியை சேர்ந்த குண்டர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் ஈகைத் திருநாளை சந்தோசமாக கொண்டாடி விட கூடாது என்கிற சதி திட்டத்துடன் கலவரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பி.ஜே.பி மற்றும் இந்து முன்னனி குண்டர்களால் ஏற்பட்ட இந்த பதற்றத்தை தொடர்ந்து காவல்துறை தனது அராஜக நடவடிக்கையை வழக்கம் போலவே முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. அதனை கண்டித்து கடந்த 20-10-2007 அன்று சென்னையிலும் , மாவட்ட தலைநகரான திருவாரூரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருவாரூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்ட காட்சிகளை கீழே காணலாம்.



0 Comments:

Post a Comment

<< Home