|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 23, 2007

தினமனி ஆசிரியர் அவர்களுக்கு அதிரை பாரூக் கடிதம்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

உயர் திரு தினமனி ஆசிரியர் அவர்களுக்கு ரியாத்திலிருந்து அதிரை பாரூக் எழுதுவது.

புனித ரமளான் மாதத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்கு மூன்று மகிழ்ச்சிகள்

ஒன்று: தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி மகிழ்வித்தது,

மற்றொன்று: சவுதி அரசு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் எழுதி வெளியிட்ட நோன்பு என்ற தலைப்பிட்ட நூலை பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு ரியாத் வாழ் தமிழ் கூறும் முஸ்லீம்களுக்கு வழங்கி கௌரவித்தது.

மூன்றாவது: தினமனி இதழில் அரசியல் அரங்கம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுடைய பேட்டியை முழுப் பக்கத்தில் வெளியிட்டது.

இவைகள் அனைத்தும் புனித ரமளான் மாதத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திற்று.

சுதந்திர இந்தியாவில் குடந்தை பேரணியில் குழுமியதுபோல் எப்பொழுதும், எங்கும் குழுமியதில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள், அதேப்போல் சுதந்திர இந்தியாவில் தினமனியில் அரசியல் அரங்கம் பகுதியில் முழுப்பக்கமும் இதுவரையில் யாருடைய பேட்டியும் வெளியானதில்லை என்றே எண்ணுகின்றேன்.

இந்த சந்தோஷங்களை உலகம் முழுவதிலும் வாழக்கூடிய தமிழ்கூறும் முஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் அலவாளாவிக் கொண்டிருக்கையில் துபாயிலிருந்து மேலப்பாளையக் காரர் ஒருவர் ( பசுலுல் இலாஹி ) உங்களுக்கு மாநில தலைவர் பிஜே அவர்களைப் பற்றி சில பொய்யான தகவல்களை எழுதி அனுப்பி உள்ளார். அவர் அதில் எழுதி உள்ளது அனைத்தும் பொய் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு அது உங்கள் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட்ட விளம்பரம் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்து அவர் எப்படி கற்பனையாக இட்டுக்கட்டிக் கூறுவார் என்பதற்கு தெளிவான உதாரணமாகும். மேலும் இவருடைய கடந்த காலத்தை உங்களுக்கு சிறிது விளக்குவது இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

இவர் யார் ?
எந்த தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை இன்று உயர்த்திப் பிடித்து எழுதி இருக்கிறாரோ அதே தமுமுக தலைவர் ஒருமுறை துபாய் சென்றிருந்த போது அவரை தரக்குறைவான நரகல் நடை வாசகங்களைக் கொண்டு துண்டுப் பிரசுரங்களை எழுதி விநியோகித்தார் அவற்றில் ஒன்று ஜவாஹிருல்லாஹ்வுடைய பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது அதைப்படித்த ஜவாஹிருல்லாஹ் அமைதியாக அந்த பிரசுரத்தைக்கொண்டு மலப்பாதையை துடைக்கச் சொல்லுங்கள் என்று நாகரீகமாக ? கூறிவிட்டார். ( இன்றுவரையிலும் அவருடைய வெளியீடுகள் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிகிறோம் )

இவ்வாறு கீறியும், பாம்புமாக கொத்திக்கொண்டவர்கள் இப்பொழுது எவ்வாறு எதனடிப்படையில் தோழமைக் கொண்டார்கள்? அதற்கு முன் ஏன் பகைவர்களாக ஆனார்கள்? பிளவுபடாத தமுமுகவில் தற்போதைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாநில தலைவராக இருக்கும் அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் அமைப்பாளராகவும், ஜவாஹிருல்லாஹ் தலைவராகவும், மேல்படி பசுல் இலாஹி வளைகுடா பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்கள்.

ஒரு டிசம்பர் 6 போராட்டத்திற்காக துபாய் மண்டல மக்கள் பெருவாரியான தொகையை வசூல் செய்து மேல்படி பசுல் இலாஹியிடம் கொடுத்தனர் அந்த பல்லாயிரக்கணக்கான திர்ஹம்களை தலைமைக்கு அனுப்பாமல் அப்படியே அமுக்கிக் கொண்டார் இதன் செய்தி அறிந்த தலைவரும், அமைப்பாளரும் அவரை இயக்கத்திலிருந்து வெளியாக்கி அவர் மீது ஒழுங்கு நடடிவடிக்கை எடுத்தார்கள். அவர் நீக்கப்பட்ட சமீப காலத்தில் ஜவாஹிருல்லாஹ் துபாய் சென்றிருந்த போது தான் இருவரும் நரகல் நடையில் மோதிக் கொண்டார்கள்.

கொத்திக் கொண்டவர்கள் தோழமை கொண்டது எவ்வாறு? எதனடிப்படையில்?
தஞ்சை பேரணியின் பெருந்திரளைக்கண்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது அத்தனை மக்களையும் கொண்டு அரியாசனையில்; அமர ஆசைப்பட்டார் அதற்கு தடையாக இருந்த மதபோதகர் பிஜே அவர்களையம், அவரது ஆதரவாளர்களையும் வெளியேற்றிட முடிவு கட்டி அதை செம்மையாக செயல்படுத்தவும் செய்தார், இயக்கம் பிளவுபட்டு இருகூறாக மாறியது பேனரும், தலைமை அலுவலகமும் அவர்களுக்கு ஒதுங்கி விட்டது (எந்த ஒரு இயக்கமும் பிளவு பட்டால் மக்கள் பழக்கப்பட்ட பழைய பேனரில் தான் இருப்பார்கள் புது பேனருக்கு அவ்வளவாக வரமாட்டார்கள் இதுதான் அவர்களது கனிப்பாக இருந்தது) புது பேனரை உருவாக்கி மக்கள் சக்தியை ஒருங்கிணைப்பது கடினம் என்று நினைத்தவர்கள் மக்களிடம் அவர்களை செல்லவிடாமல் பல திட்டங்களை வகுத்து செயல்பட்டார்கள்.

அதில் ஒன்று இன்டர்நெட்டில் தொடர்புடைய படித்த மக்கள் மத்தியில் வெளியேறிச் சென்றவர்களைப் பற்றி அவதூறுகள் எழுதி வெளியிடுவதும் அவற்றை காப்பிகளாக்கி பாமர மக்களுக்கு விநியோகிப்பதும் என்பது ஒரு திட்டமாகும். அதற்கு தகுதியான அவதூறு எழுதும் ஒருவர் தேடப்பட்டார் இதற்கு முன்பொரு முறை தன்னைப் பற்றி பொய் தகவல்களை நரகல் நடையில் எழுதியது பேராசிரியருக்கு நினைவுக்கு வரவே அவரையே இதற்கு தேர்வு செய்வது எனும் முடிவுக்கு வந்து அதனடிப்படையில் மேல்படி மேலப்பாளையத்து இலாஹி அவதூறுகள் எழுதும் அரும் ? பணிக்கு தகுந்த சன்மாங்களுடன் பேசி அமர்த்தப்பட்டார் இன்று வரை அது செம்மையாக நடந்து வருகிறது.

ஆனால் அவர்கள் நினைத்தது நடந்ததா ? என்றால் அது தான் இல்லை ! வளர்ச்சி இங்கும், வீழ்ச்சி அங்குமாக மாறிவிட்டது மனிதன் ஒன்று நினைப்பான் கடவுள் ஒன்றை நிகழ்த்தி விடுவார்.

இவர்களுடைய இந்த சதி ஆலோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அசிங்கத்தால் அறிஞர் பிஜே அவர்களும், அவரது அமைப்பும் மக்கள் மத்தியில் மாபெரும் வளர்ச்சி அடைந்தது.

அவரது ஊழல் பற்றி இறுதியாக ஒரு தகவல்
தமுமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டபின் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கிய தொகுதிகளில் பாளையங்கோட்டை தொகுதியை (மேலப்பாளையம் உள்ளடக்கியது) வாங்கி மேல்படி இலாஹிக்கு கொடுத்து தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்து கொள்வதற்காகவும் அதன்பேரில் துபாயில் வசூல் வேட்டை நடத்துவதற்காகவும் தமுமுக தலைமையில் திட்டமிட்டார்கள்.

திட்டமிட்டப்பிரகாரம் துபாயில் இருந்த இலாஹிக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி ( இவர் ஏற்கனவே ரியாத்தில் விசா பிஸினஸ் செய்து பெருந்தொகையை அமுக்கிக் கொண்டு தலைமறைவானவர் ) பாளை தொகுதியை வாங்கித் தருகிறோம் ஞாயமான தொகையுடன் தாயகம் வந்து சேருங்கள் என்று தகவல் அனுப்பினார். அதன் பிரகாரம் மேல்படி அமுக்கல் பேர்வழி துபாயில் முக்கியமான அரசியல் பிரமுகர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு கேம்ப் கேம்பாகவும், பெரும் பெரும் தொழில் அதிபர்களையும் சந்தித்து கணத்த தொகையை கரந்து கொண்டு தாயகத்திற்கு வந்து சேர்ந்தார்.

கத்தை கத்தையாக ஃபாரின் கரன்சி கட்டுகளுடனும், கோட்டை கணவுகளுடனும் தாயகத்திற்கு வந்தவர் நிலைமை தலைகீழாக இருப்பதைப் பார்த்து ( முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாளை தொகுதியை விட்டுக் கொடுக்க வலுவாக மறுத்து விட்டார் ) மீண்டும் துபாய்க்கு ஓட்டம் பிடித்தார் ஆனால் வசூலித்த எவரிடமும் அதன் தொகைகளை திருப்பித் தரவில்லை, அவற்றை அப்படியே அமுக்கிக் கொண்டார்.

இப்படிப்பட்ட பணத்துக்காக சமுதாயத்தில் மாண மரியாதையை இழந்து கேவலப்பட்ட ஒருவர் தான் மாபெரும் மக்கள் தலைவரும், மதகுருவுமாகிய மரியாதைக்குரியவரை இடிந்துரைக்கிறார் என்பதை உங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன், தமுமுக கூட்டணி
தேர்தர் நேரத்தில் அனைத்து முஸ்லீம் அமைப்புகளிலும் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன், தமுமுக மட்டும் தான் கூட்டணி அமைத்தது அதனால் தான் இடஒதுக்கீடு அளித்தாக உளறி இருக்கிறார்.

மற்ற அமைப்புகளை விட தமுமுக தான் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திமுகவுடன் கூட்டணி அமைத்தது உண்மை என்றால் ஆளும் மாநில ( திமுக ) அரசை வற்புருத்தி தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்தாமல் டெல்லிக்குச் சென்று ஏன் ஆர்பாட்டம் செய்தார்கள்? கூட்டணி அமைக்கும் போது மாநில அரசுக்கு இடஒதுக்கீடு வழங்கும் உரிமை உண்டு எனும் நம்பிக்கையில் கூட்டணி வைத்தவர்கள் அதற்கடுத்து மாநில அரசால் முடியாது என்று அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்த மர்மம் என்ன ? இப்பொழுது மாநில அரசு இடஒதுக்கீடு அறிவித்ததில் தனக்கு பங்கு உண்டு என்று எவ்வாறு கூறுகிறார்கள் ? இது முன்னுக்குப் பின் முரணாக இல்லையா ? அல்லது இடஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுக்கா ? மத்திய அரசுக்கா ? என்ற அரசியல் ஞானம் அறவே இல்லாமல் தான் கூட்டணி வைத்தார்களா ? இப்படிப்பட்ட ஞான சூன்யங்களை நம்பி பின் செல்லும் பாமர மக்களுடைய நிலை என்னாவது ? தவ்ஹீத் ஜமாத்துடைய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் தான் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது.

தீவிரவாதத்தை ஆதரித்தாரா?
 தீவிரவாதம் தான் தீர்வு என்ற உறுதியுடன் இருந்த பலரை ( இன்றும் கோவை சிறையில் அடைபட்டு கிடப்பவர்களில் முக்கியமானவர்களை ) தான் ஒரு மதபோதகர் என்ற அடிப்படையில் அறிஞர் பி.ஜே அவர்கள் தனிப்பட்ட முறையில் அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தை எடுத்துரைத்து தீவிரவாதத்திலிருந்து தடுத்து நிருத்தி இருக்கிறார்கள். அதையும் மீறிப்போய் விழுந்து விட்டவர்கள் அவர்கள்.

 ஜிஹாத் என்றப் பெயரில் அப்பாவி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் விடியாத தலைவர்களுக்கும், அதில் போய் வீழ்ந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கும் ஜிஹாத் என்றால் என்ன ? ஜிஹாத் யாருக்கு கடமை ? எப்பொழுது கடமை ? ( இஸ்லாமிய அரசுக்கு மாத்திரம் கடமை, எந்த ஒரு அமைப்புக்கோ, தனி மனிதனுக்கோ ஜிஹாத் கடமை அல்ல ) என்று கொடிக்கால் பாளையத்தில் குர்ஆன் - ஹதீஸ் ( மார்க்க )அடிப்படையில் விலாவாரியாக விளக்கி பேசிய இரண்டு சிடிக்கள் இன்றும் உலகம் முழவதுமுள்ள தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சென்டர்களில் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் தீவிரவாதத்தை ரகசியமாக அவர் தூன்டி இருப்பாரா ?

பதவி ஆசையும், சுய விளம்பரத்தை விரும்புபவரா ?
 அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுக உருவாக்கப்பட்டு அதனுடைய பொதுக் கூட்டங்களில் லட்சோப லட்சம் மக்கள் திரளில் ஒவ்வொரு முறையும் தவறாமல் இந்த அமைப்பை அரசியல் அமைப்பாக்க மாட்டோம், நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம், உங்களை எங்களுக்காக ஓட்டுப் பொறுக்கும் கூட்டங்களாக ஆக்க மாட்டோம் என்று ஏக இறைவனின் மீது சத்தியமிட்டு முழங்குவார்கள். அதனடிப்படையில் இன்றளவும் வாக்கு மாறாமல் நடந்து வருகிறார்கள் அதனால் தான் இத்தனைப் பெரிய மக்கள் கூட்டம் அவர்கள் பக்கமும், பதவிக்காக துதி பாடக்கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய இலாஹி வகையறாக்கள் இந்தப் பக்கமும் இருக்கிறார்கள்.

தீவிரவாத்தினால் தான் நாடு கடத்தப்பட்டாரா ?
 இறந்தவர்களுடைய சமாதியில் மண்டியிட்டு பிரார்த்திப்பவர்களும், இறந்தவர்களுக்காக பூஜை, புனஷ்காரம் செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இலகுவாக சொர்க்கம் செல்வார்கள் நரக வேதனை குறைக்கப்படும் என்ற அவ நம்பிக்கையை பாமர மக்கள் மனதில் விதைத்து, பேய், பிசாசு, பில்லி, சூனியம் விரட்டுகிறேன் என்ற நம்பிக்கையையும் விதைது அதையே தொழிலாக செய்யும் ஒருக் கூட்டம் எங்களிலும் உண்டு இவ்வகையைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலும், மலேஷியாவிலும் அதிகமானோர் உண்டு அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் மேல்படி நாடுகளுக்கு மதபிரச்சாரம் செய்யச் சென்றபொழுது தமுமுக காரர்கள் அவர்களை உசுப்பி விட்டு பொய்யான தகவல்களை அரசுக்கு அளித்து தங்கள் செல்வாக்கு மூலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள் என்பது உண்மைiயே தீவிரவாதத்தினால் என்பது தார்ப்பாயில் வடிகட்டிய பொய். ஆனாலும் அதன் பிறகு அங்கு மாபெரும் எழுச்சியை எங்கள் அமைப்பு அடைந்திருக்கின்றன.

அரைவேக்காடுகளுக்கு. . .
அறைத்த மாவையே அறைத்துக் கொண்டிருக்கும் அரைவேக்காட்டுக்கு அடிக்கடி பதில் கொடுத்துக் கொண்டு எமது பொண்ணான நேரத்தை வீனாக்குவதற்கு நாம் தயாராக இல்லை என்பதால் பதில் கொடுத்துக் கொண்டிருப்பதை நிருத்தி வைத்திருந்தோம் இப்பொழுதும் நமது நிலை அதே தான் ஆனாலும் உங்களுக்கு மேல்படி அவதூறு மெயில் வுழு செய்யப்பட்டிருந்ததால் உங்களுக்காக உள்ள ஸ்பெஷல் விளக்கமே இது, மற்றபடி எங்கள் சகோதரர்களுக்கு இது அறிந்த பழைய விஷயமாகும்.

எங்கள் தலைவருடைய பேட்டியை முழுப்பக்கத்தில் அறிவுப்பூர்மான கேள்விகளுடனும், ஆதாரப்பூர்வமான பதில்களுடன் இடம் பெறச் செய்தமைக்காக நன்றி கூறி நிறைவு செயகிறேன் .

இப்படிக்கு
ஏ.எம்.பாரூக்
தபால் பெட்டி என் : 5795,
ரியாத்: 11432,
கே.எஸ்.ஏ.

1 Comments:

At 6:40 PM, Blogger Unknown said...

தயவு செய்து சகோ. பஸ்லுல் இலாஹியை யாரும் திட்டாதீர்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு உங்களைவிட அவர் நிறைய பாடுபட்டிருக்கிறார்இபாடுபட்டுக்கொண்டிருக்கிறார். பி.ஜே ஜாக் என்ற அமைப்பிலிருந்த போது நேரடியாக இவர் ஒத்துழைத்தார். இப்போது மறைமுகமாக டி.என்.டி.ஜே யின் வளர்ச்சிக்கு உதவுகிறார்;. டி.என்.டி.ஜே யும் பி.ஜே யும் யாரென்றே தெரியாத மக்கள் கூட இன்று தெரிந்து கொண்டிருக்கின்றார்களென்றால் அதற்கு இவர் ஒரு முக்கிய காரணமாவார்..எல்லா செய்திகளும் ஆதரவாளர்களுக்கே சென்று சேர்வது கடினமாக இருக்கையில் இவர் மூலம் எதிரிகளுக்குக்கூட செய்திகள் உடனடியாக போய் சேர்ந்து விடுகின்றன. இவரும் இவருடைய சகாக்களும்தான் மலேசியாவின் ஏகத்துவ எழுச்சிக்கு காரணமென்பதை யாரும் மறுக்க இயலாது. அதை மலேசியாவிலிருந்து டி.என்.டி.ஜே க்கு அனுப்பப்பட்ட பித்ராவின் மூலம் அறிய முடியும். எனவே சகோ.பி.ஜே அவாகள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் செய்ய வேண்டும்இசகோ.பஸ்லுல் இலாஹியும் இது போன்ற தன்னுடைய பணியை திறம்பட தொடர்ந்து செய்யவேண்டும். அதற்காக நம்முடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிப்போம்
முஹம்மது மாஹீன

 

Post a Comment

<< Home