|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, October 30, 2007

புதுவையில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு கிடைக்க முழு முயற்சியில் தற்போது TNTJ!

புதுவையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவருகின்றது. சமீபத்தில் அதனின் ஒரு

பகுதியாக புதுவை முதல்வர் திரு. ரங்கசாமியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது முனீர் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை தலைவர் தாசிம் செயலாளர் ஜின்னா துனைத் தலைவர் பீர் முஹம்மது பொருளாளர் அக்பர் கரீம் ஆகியோர் புதுவை முதல்வரை சந்தித்து புதுவையில் முஸ்லிம்களுக்கு எவ்வாறு இடஓதுக்கீடு வழங்கினால் எந்த வித சட்டசிக்கலும் ஏற்படாமல் முழுமையாக முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என்பதை விளக்கினர்.


அது சம்பந்தமான ஆவனங்களையும் அவரிடம் சமர்ப்பித்தனர். மேலும் உளவர்கரை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர் நமச்சிவாயம் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு பெற்றுதருவதில் முழு மூச்சுடன் செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

மேலும் இடஒதுக்கீடு சம்பந்தமாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்து தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். புதுவை சமூக நலத்துறை இயக்குனர் பிரியதர்ஷனி அதிகமான நேரங்களை ஒதுக்கி பல்வேறு விளக்கங்களை கேட்டார். மேலும் அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை முஸ்லிம்களுக்கு சென்றடைய தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து எங்களை தொடர்பு கொண்டால் அதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் தருவேன் என உறுதி அளித்தார் . இதுவரை எந்த முஸ்லிம் அமைப்புகளும் எங்களை சமூதாயம் தெர்டர்பான எந்த விஷயங்ளிலும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தார்


புதுவை பிர்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் நீதி அரசர் கோவிந்த ராஜன் அவர்களை சந்தித்து முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றியும் நமது தரப்பு நியாயங்களையும் மாநிலச் செயலாளர் முஹம்மது முனீர் விளக்கமளித்தார். நிதியரசர் கோவிந்த ராஜன் மிகவும் உண்ணிப்பாக அனைத்து விபரங்களையும் கேட்டரிந்து கொண்டார்.

0 Comments:

Post a Comment

<< Home