|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, November 07, 2007

மனித வடிவில் இரத்த வெறிப் பிடித்த ஒரு மிருகம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்). ஆல்குர்ஆன் 8:8.
இக்கட்டுரையை வாசிக்கும் அனைத்து ( ஹிந்து, முஸ்லீம் ) சகோதரர்களுக்கும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக !
ஹிட்லரிலிருந்து தொடங்கி இந்திய சங்பரிவாரர்களிலிருந்து இன்றைய ஜார்ஜ் புஷ் வரை எடுத்துக் கொண்டால் அவர்களை எல்லாம் விஞ்சி நிற்கும் அளவுக்கு நரபலி மோடி முஸ்லீம் இன விரோதியாவான், அவர்களெல்லாம் தான் சார்ந்த இனத்தவர்களை காவு கொடுத்து பிற சமுதாயத்தவர்களை பழி கொண்டதில்லை.

ஹிட்லர் தனது எதிரி இனமாகிய யூத இனத்தை தனது சகாக்ககை; கொண்டு மட்டும் கொன்றொழித்தான் அதற்காக தனது இனத்தில் சிலரை காவு கொடுத்து அதன் மூலம் அனுதாபம் தேடி அவர்கள் மூலமாக யூதர்களை அழிக்கவில்லை.

நாதுராம் கோட்சே தன்னைத் தானே அழித்துக் கொண்டு பல்லாயிரக் கக்கான முஸ்லிம் இனத்தை அழிக்க திட்டம் தீட்டினான்

மனித மிருகம் நரபலி மோடி மட்டும் தன் இனத்தவர்களை காவு கொடுத்து (சபர்மதி எக்ஸ் பிரஸில் பயணித்து வந்த ராம பக்தர்களை தாமே எரித்து சாம்பலாக்கி விட்டு, அதை முஸ்லீம் சமுதாயத்து மக்கள் மீதுப் போட்டு ஹிந்து சமுதாயத்து மக்களுக்கு கோபத்தை ஊட்டி அவர்களைக் கொண்டு ) எண்ணற்ற முஸ்லீம்களை கொன்றொழித்;து அவர்களுடைய கோடிக்கணக்கான பொருதாராத்தை அழித்தொழித்தான்.

இவ்வாறு செய்யப்பட்டதற்கு மதவெறி மட்டும் முக்கிய காரணமல்ல, மாறாக அப்பொழுது வரவிருந்த தேர்தலில் ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்து ஓட்டுக்களை அறுவடை செய்து தனது முதல்வர் பதவியை மீண்டும் தக்கவைத்துக் கொல்வதற்காக நடத்தப்பட்ட நர வேட்டையாகும்.

தெஹல்கா டாட் காம் வெளியிட்ட மோடியின் திட்டம்
 ரயில் எரிப்பு முடிந்ததும் மோடி தலைமையில் மதவெறி சங்பரிவார்கள் கூடி முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு பற்றி திட்டமிடுகின்றனர், மோடியினால் சங்பரிவார குண்டர்களுக்கு இனச்சுத்திகரிப்பு, மற்றும் பொருளாதார சூறையாடல் நடத்துவதற்கு பயிற்சியும், அதற்காக மூன்று நாட்கள் அவகாசமும் அளிக்கப்படுகிறது. திட்டம் தீட்டிக் கொடுத்தது முதல்வர் என்பதால் கலவரம் அதிக நாட்கள் நீடித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி தனது பதவி ரத்து செய்யப்படலாம் என்பதால் மூன்று நாட்கள் மட்டும் ஒதுக்கப்படுகிறது ?( சில மணி நேரங்கள் என்பதே போலீஸ் துணையுடன் நடத்தப்படும் கலவரத்து பெரும் இழப்பை ஏற்படுத்த முடியும் ) மூன்று நாட்கள் என்பது பூண்டோடு அழிப்பதற்கு இடப்பட்ட மாபெரும் திட்டமாகும் )
 அஹமதா பாத்தின் மீது நானே சென்று குண்டு வீசலாம் என்று எண்ணுகின்றேன் ஆனால் என்னுடைய முதல்வர் பதவி என்னை தடுக்கிறது என்றுக் கூறி ஆதங்கப்பட்டு கொலை கும்பல் வெறி ஏற்றப் படுகின்றார்கள்.
 இவ்வாறு வெறி ஏற்றப்பட்ட கொலைக்கும்பல் முதல் நாள் நரோ, பாட்டியா என்ற ஊர்களில் முஸ்லீம்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்து பிணங்களை குவியில் குவியலாக்குகிறது, இதையறிந்த நரபலி மோடி அவசரக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து கலவரக்காரர்களை நரோ, பாட்டியா என்ற ஊர்களில் நடத்தப்பட்ட பேரழிவுகளை வெகுவாகப் பாராட்டி மேலும் வெறி ஏற்றப் படுகின்றனர்.

 இவ்வாறு மீண்டும் வெறியேற்றப்பட்ட கொலைக் கும்பல் அசந்து விடாமல் செயல்படுவதற்காக அவர்கள் கொலை வெறியாட்டமும், காமவெறியாட்டமும் நடத்தும் இடங்களுக்கெல்லாம் அவர்களுடன் சென்று அவர்களை உற்சாகப் படுத்த உமா பாரதி வகையைச் சேர்ந்த மாயா என்ற பாஜக பெண் எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார்.

முஸ்லீம்களுக்கு வரலாறு கானாத பேரழிவும்,கலவரகாரர்களுக்கு கோடிக்கணக்கான சன்மானங்களும்.
முதலில் குறி வைத்து முஸ்லீம் ஆண்கள் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள், அதனையடுத்து முஸ்லீம் பெண்கள் மானபங்க படுத்தப் படுகிறார்கள், அதற்கடுத்து ஆங்காங்கே நெருப்புக் குண்டங்கள் வார்க்கப்பட்டு பிணங்களும், குற்றுயிரும் குறையயிருமாய் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பவர்களும் அந்த நெருப்புக் குண்டங்களில் வீசி எறியப்படுகின்றனர் இதில் மிகப்பெரிய கொடூரம் என்னவென்றால் கற்பிpனி பெண்களுடைய வயிற்றைக் கர்ண கொடூரமாக கிழித்து பச்சை சிசுவை இரத்தம் சொட்ட சொட்ட வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் வீசியதுடன் தாயையும், தந்தையையும் கண்ணுக்கெதிரில் பறிகொடுத்து விட்டு மிகவும் பரிதாபமாக அந்தப் பாவிகளை நோக்கிப் பார்த்துக் கொண்டு நின்ற பச்சிளம் பாளகர்களையும் ஈரலில் ஈரமில்லாத பாவிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த திரிசூலம், ஈட்டிப் போன்ற ஆயுதங்களால் அப்படியே சொறுகி தூக்கி அதே நெருப்புக் குண்டங்களில் வீசி யெறிந்து ஆனந்தமடைந்தனர்

முஸ்லீம்களுடைய தொழிற்சாலைகளை தீ வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கினார்கள் சூரத்துடைய தொழில் நகரமாகிய அஹமதாபத் முழுவதையும் கொளுத்தி அதன் புகை விண்ணை முட்டுமளவுக்கு ஆக்கினார்கள் மனித மிருகம் மோடியால் அனுமதிக்கப்பட்ட அந்த மூன்று நமட்களும் முஸ்லீம்களின் பிணத்தின் மீது நடந்து கோரத் தாண்டவம் ஆடினார்கள்.

மோடி வழங்கிய சன்மானத்துடன் முஸ்லீம்களுடைய தொழிற்சாலைகளிலும், அவர்களது இல்லங்களில் சூறையாடப்பட்ட பணங்களையும், விலை மதிப்புள்ள பொருள்களையும், நகைகளையும் கொண்டு மேல்படி கொலைக் கும்பல் குஜராத்தின் பெரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆகிக் கொண்டனர்.

இதற்கு மூலகாரணம் மோடியின் தலைமையில் கொலைகாரர்கள் வெறியேற்றப்பட்ட விஷேச கூட்டங்களாகும் .

ஏக இறைவனின் திட்டம்
குற்றுயிரும் குறையுயிருமாய் கிடந்தவர்களுடைய அழுகுரலும், அல்லாஹ்வுடைய சந்நிதானத்தை அடைந்ததால் அல்லாஹ் இந்த அயோக்கியர்களுக்கு அப்பொழுதே இன்னாரைக் கொண்டு இன்ன நேரத்தில் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டான்.
நெஞ்சுரமிக்க தெஹல்கா இணைய தளக்காரர்களை இப்பணிக்காக நியமித்தது ஏக இறைவனுடைய மாபெரும் திட்டமாகும். நிச்சயமாக உயிரைப் பணயம் வைத்துப் போராடக் கூடிய இந்த பணிக்கு ஒருவர் தன்னை அர்ப்பணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல அசாத்திய துணிச்சல் இருந்தால் மட்டுமே இறங்க முடியும். இந்த அசாத்திய துணிச்சலை இறைவன் தான் விரும்பிய சிலருக்கு மட்டும் வழங்கி அவர்களை களத்தில் இறக்கி விடுவான்.

தெஹல்கா டாட் காம் காரர்கள் தங்களுக்கு துணையாக இந்தியா டுடே காரர்களையும் இணைத்துக் கொண்டு ஆறு மாத காலம் மிக அழகாக தனது திட்டத்தில் சதி காரர்களை விழவைத்து வீடியோவில் படமும் எடுத்து விட்டார்கள். உலகில் இதுவரை யாரும் செய்திட முடியாத அளவு மிகவும் சாமர்த்தியமாக கிடுக்குப் படி போட்டு முண்ட விடமுடியாத அளவு சிக்க வைத்துள்ளனர், ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை அவர்களது வாயால் சொல்ல வைத்து படமெடுத்து விட்டார்கள். மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை. அல்குர்ஆன் 6:123
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கு
நீங்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி அனைத்து மாநிலங்களின் முஸ்லீம் அமைப்புகளையும் சந்தித்து மேல்படி சம்பவத்தை வலியுருத்துவதுடன், பொதுநலனில் அக்கறை கொண்ட ஹிந்து அமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்து அவர்களிடமும் சம்பவத்தை வலியுருத்தி அனைத்து மாநிலங்கலிளும் ஒரே தேதியில், அல்லது தனி, தனி தேதிகளில் பெருந்திரளான ஹிந்து – முஸ்லீம் சங்கிலி போராட்டம் ஒன்றை மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதம் நடத்தி நரபலி மோடியையும், மோடியால் தயார் செய்;யப்பட்ட கலவரக்காரர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கும் வரை தொடர் போராட்டங்கள் செவதற்காக முயற்சி செய்யுங்கள். இதை விட சிறந்த வழி உங்களிடம் இருந்தால் அதன்படி செய்யுங்கள்.

ஹிந்துக்களே ! முஸ்லீம்களுடன் ஒன்று திரளுங்கள்
ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அறிவர். இவ்வாறிருக்கையில் மேல்படி குஜராத் கலவரத்தில் அப்பாவி ஹிந்துக்களும் ஈடுபட்டதற்கு முக்கிய காரணம் '' ராம பக்தர்கள் '' முஸ்லீம்களால் எரிக்கப்பட்டனர் என்ற தவறான தகவல் தரப்பட்டதுவேயாகும்.

ராம பக்தர்கள் யாரால் எரிக்கப்பட்டனர் என்பதை இப்பொழுது நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் ராம பக்தர்களுக்காகத் தான் முஸ்லீம்களின் மீது கோபம் கொண்டது உண்மை என்றால் அந்த கோபம் இப்பொழுது மோடியின் பக்கமும், அவனால் தயாரிக்கப்பட்டு, ஏவப்பட்ட குண்டர்கள் மீதும் இனபேதமில்லாமல் மாற வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துக்களை மனிதாபிமானமுள்ளவர்களாக காண முடியும்.

இது போன்று இனிவரும் காலங்களில் நரபலி மோடிக்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமெனில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒவ்வொரு மாநிலத்திலும் பதாகைகளை ஏந்திய வன்னம் மத்திய அரசை வலியுருத்தி குற்றவாளிகளுக்கு மரண தன்டனை கிடைக்கும் வரை போராடுவதற்கு முன் வர வேண்டும் .

முஸ்லீம்களே !!
ஆதாரம் இல்லை என்று அரசால் நழுவி விட முடியாத அளவுக்கு தெஹல்கா டாட் காம் சகோதரர்கள் குற்றவாளிகளின் வாக்கு மூலத்தை வீடியோவில் பதிந்திருக்கின்றனர் இதற்கு மேலும் பாபர் மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்குவதற்கு மாபெரும் ஒத்துழைப்பை நல்கிய அதே காங்கிரஸ் அரசு இப்பொழுதும் இருப்பதால் மோடியை ஒரு வேளை குற்றத்திலிருந்து தப்பி;க்க விடலாம்

ஆனாலும் குஜராத் இனப்படுகொலையின் குற்றவாளிகள் யார் ? என்பதை இறைவன் உலகுக்கு அறிவித்து விட்டான் இதற்கு மேல் மறுமையின் மீது நம்பிக்கை உள்ள முஸ்லீம்கள் மோடியை இறைவன் மறு உலகில் பிடித்து தண்டிப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இன்னும் பொறுமையுடன் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து வருவோம்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். அல்குர்ஆன் 2:153

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

1 Comments:

At 8:07 AM, Blogger அபு முஜாஹித் said...

"இதற்கு மேல் மறுமையின் மீது நம்பிக்கை உள்ள முஸ்லீம்கள் மோடியை இறைவன் மறு உலகில் பிடித்து தண்டிப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இன்னும் பொறுமையுடன் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து வருவோம்."

இப்படி சொல்லி சொல்லித்தானே சமுதாயத்தை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள். இந்த அநியாக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ்வும் அவன் தூதரும் போராட சொல்ல வில்லையா? அதை உரத்து சொல்வதற்கு தயக்கம் ஏன்? இந்திய சட்டமும் அதை அனுமதிக்கிரதே. ஒரு படத்தில் பார்த்திபன் வடிவேலுவை பார்த்து சொல்லும் வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது, "உன் பொரும மேல எரும மாடு மேய"

 

Post a Comment

<< Home