|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, October 01, 2007

தவ்ஹித் ஜமாத்தின் மனிதாபிமான கோரிக்கை

மனிதாபிமான கோரிக்கை

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்,

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

இவர்களின் நலத்திட்டத்திற்க்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இவர்களுக்கு வேலை கிடைப்பதும் சிரமமாகவுள்ளது.

இவர்களில் பலர் தங்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி நம்மிடம் (தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம்) கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

முப்பத்தெட்டு சகோதரர்களின் கையெழுத்திட்டு உதவி கோரியுள்ளனர்.

மேலும் சிறையில் உள்ளவர்களில் பலர் மேல் முறையீட்டுக்காகவும், குடும்பத்துக்காகவும் உதவி கேட்டு நம்மிடம் (தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம்) மனு அளித்துள்ளனர்.

மொத்தம் அறுபத்திரண்டு நபர்கள் நம்மிடம் மனு அளித்துள்ளனர். இவர்களின் அவல நிலையைக் கண்டு உதவக் கூடியவர்கள் இவர்களுக்கு உதவ விரும்பினால் நமக்கு உதவிகளை அனுப்பலாம்.

அவ்வாறு அனுப்பும் தொகை முழுவதுமாக மனு அளித்த அனைவருக்கும் சமமான முறையில் பகிர்ந்து அளிக்கப்படும். வேறு எந்த பணிக்காகவும் அந்த நிதி பயன்படுத்தப்படாது. உதவிகளை அனுப்புவோர் சிறைவாசிகள் வகைக்காக என்று குறிப்பிடவும்.

உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்,
மாநில தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை -1.


நன்றி – உணர்வு ( செப்டம்பர் 21-27–2007)

0 Comments:

Post a Comment

<< Home