|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 09, 2007

தமிழர்களின் கடல்கடந்த தியாகம்

Bismillah..
சவுதி அரேபியாவின் மிகப் பெரும் மருத்துவமனையான ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி-யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மூன்றாவது முகாம் ஆகும் ..

வந்தாரை வாழவைக்கும் தமிழக மக்கள் செல்லுமிடமெல்லாம் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தோடு நிறுத்திவிடாமல் உலகம் முழுவதும் தங்கள் தியாக பணிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சவுதி அரேபியாவில் வந்து உழைத்து அந்நாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவரும் நம் தமிழ்மக்கள் அந்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பணிகளிலும் சேவையாற்றி வருகின்றனர் .

07-12-07- வெள்ளிக்கிழமையன்று ரியாதில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தது. அன்றையதினம் மருத்துவ மனை முழுவதும் தமிழ்க் குரல்களாகவே ஒலித்துக் கொண்டிருந்தது. 300- க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். நேரமின்மை காரணமாக 220 பேர் பதிவு செய்யப்பட்டு 169 பேரிடம் இரத்தம் பெறப்பட்டது. ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

மருத்துவ மனை இரத்தவங்கியின் முதன்மை மருத்துவர் திரு.ஃபத்தூஹ் அல் ஆலம் அவர்கள் கூறும்போது 100-க்கும் அதிகமானோர் இரத்தம் வழங்கியதில் சவுதி அரேபியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். இந்திய மக்களை அதுவும் தாமிலியா (தமிழ் மொழி பேசுபவர்கள்) மக்களை நினைத்து நான் பெருமையடைகிறேன். இங்கே வழங்கப்பட்ட இரத்தம் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஹாஜிகளில் தேவைப்படுவோருக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .

இரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர் திரு.பதர் அல் ஸாபிரின் அவர்கள் , மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காத்திருந்து தானம் செய்வதில் இந்த மக்கள் போட்டி போடுவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது என்று கூறினார் .

தீவிரவாதம் மூலம் இரத்தம் சிந்துவது தான் இவர்களின் வரலாறு என்று பத்திரிகைகளெல்லாம் சித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது தவறு இரத்தம் கொடுத்து வாழவைப்பதுதான் எங்கள் உண்மை வரலாறு என்பதை இனியாவது பத்திகைகள் கூறினால் அதன்மூலம் அனைத்து மதத்தினரிடமும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. முஜிஃபுர் ரஹ்மான் தெரிவித்தார் .

மொத்தத்தில் தமிழர்களின் தியாகம் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது .

0 Comments:

Post a Comment

<< Home