|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, July 04, 2007

நெல்லையில் இன்று முஸ்லிம்கள் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது

Bismillah...
நெல்லை, ஜுன். 4-

தவ்கீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள், முஸ்லிம் களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்த னர்.

மறியல்

அதன்படி மாநில துணை தலைவர் சைபுல்லா காஜா தலைமையில் வண்ணார் பேட்டை பைபாஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரத்துக் கும் அதிகமான தவ்கீத் ஜமாத் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கைது

அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ் மற்றும் வேன்களில் ஏற்றி திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் இந்த மறியலில் கலந்துகொள்ள தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் போக்கு வரத்தும் ஸ்தம்பித்தது.

இதில் மாநில செயலாளர் சம்சுல்லுகா, மாவட்ட தலைவர் ïசுப்அலி, செயலாளர் சாதிக், பொருளாளர் நேஷனல் சாகுல் மற்றும் நிர்வாகிகள் சுலைமான், காஜா, ஜபருல்லா, முகமதுஅப்துல்காதர், மைதீன், குமரி மாவட்ட தலைவர் அபுதாகிர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் லியாகத்அலி மற்றும் முகமது அமீன், தஸ்தகீர், அப்பாஸ், இப்ராகிம் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கைதாகி உள்ளனர்.

நன்றி - மாலைமலர்.

0 Comments:

Post a Comment

<< Home