|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, June 28, 2007

அமெரிக்கா வாழ் தமிழர், தமிழ் அமைப்புகளுக்கு

அமெரிக்காவில் உள்ள மேலவையான செனட் சபை இம்முறை தொடங்கும்போது, இந்து மதத்தின் பிரார்த்தனையாக ரிக் வேதம், உபநிஷத், பகவத் கீதை - இவைகளிலிருந்து பகுதிகள் பாடப்படும் என்றும், அதற்கென தனியே சம°கிருத புரோகிதப் பண்டிதர் ராஜன் சேட் என்பவரை அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார்கள் என்று அவர் சொன்னதாக `இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.


அமெரிக்கா வாழ் இந்தியர்களில் வெறும் இந்துக்கள் மட்டும் இல்லை; தமிழர், முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர் என்று பல்வேறு மதத்தவரும் அமெரிக்க குடிமக்களாகி உள்ள நிலையில், பார்ப்பனீய மதமான இதன் வேதம், உபநிஷத், கீதை இவைகளை செனட் தொடங்கும்போது பாடுவது ஏற்புடைத்தல்ல. மாறாக, செம்மொழி தமிழில் உள்ள எம்மதமும் சாராத, ஒழுக்கத்தினை வலியுறுத்தும் அறநூலான திருக்குறள் பாக்களைப் பாடவேண்டும் என்று வற்புறுத்துங்கள்.




`யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாட்டுகளைப் பாடித் தொடங்கி வைக்க அமெரிக்காவாழ் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், ஏனைய மதத்தவர் முயற்சிகளை தடுத்து, பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்., பண்பாட்டு ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க முனையவேண்டும். அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு நமது அவசர அன்பு வேண்டுகோள் இது.
சென்னை 27.6.2007
கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
(Thanks..Viduthalai)

0 Comments:

Post a Comment

<< Home