|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, June 28, 2007

JULY 4 போராட்டம் ஏன் ? எதற்கு ?

Bismilla...
இன்று தமிழகத்தில் ஒரு ஐயர் ஏழையாக இருந்தால் அவர் கடன் பெற்று தனது மகனையோ, மகளையோ உயர் கல்வி கற்க வைத்து அரசின் உயர் கேந்திரங்களில் அமர்த்தி தனது கடனை அடைத்து விடுவார் சுகபோகமாக தனது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வார் காரணம் அவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு;ள்ளது. இதையே ஒரு முஸ்லீம் கடன் பெற்று தனது மகனை படிக்க வைக்க முடியாது காரணம் முஸ்லிமுக்கு இடஒதுக்கீடு கிடையாது, கடன் பெற்று படிக்க வைத்தாலும் இந்தியாவாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் அவன் கூலித் தொழில் தான் பார்க்க வேண்டும் அதனால் கடன் பெற்று பாஸ்போர்ட் எடுத்து 17, 18 வயதுகளில் ஹவுஸ்பாய் வேலைக்கு வளைகுடாவிற்கு அனுப்பி விடுகின்றனர்.

முஸ்லிம்கள் படித்திருப்பது போன்றும், அரசின் உயர் கேந்திரங்களில் அமர்த்தப் பட்டிருப்பதுப் போன்றும் உலகுக்கு காட்டுவதற்காக ஒருசில முஸ்லீம்களை உயர் பதவிக்கு அரசு தேர்வு செய்யும். அல்லாஹ், ரசூல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத, அதை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளாதவராக பார்த்து தேர்வு செய்வார்கள். ஒரு முறை குஜராத்தில் அடித்து நொறுக்கப்பட்ட முஸ்லிம்கள் பல ஆசிரமங்களில் அடைக்கலம் புகுந்திருந்தனர் அவர்களைப் பார்வையிடுவதற்கு அபுல் கலாம் சென்றிருந்தார்; அப்பொழுது பாதிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் அவரை சூழ்ந்து கொண்டு நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் '' முஸ்லிம்கள் என்றுக் கூறாதீர்கள் இந்தியர்கள் என்றுக் கூறுங்கள் '' என்று திருவாய் ? மலர்ந்தருளினார் திருவாளர் அபுல் கலாம் அவர்கள் ?
நாம் கேட்கிறோம் ?

கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் பச்சை சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து நெருப்பில் வீசும் பொழுது ஒரு இந்தியனை இந்தியாவை கட்டி எழுப்பக்கூடிய எதிர்காலத் தூனை பொசுக்கி சாம்பலாக்குகிறோமே என்ற உணர்வு அவனுக்கு வரவேண்டிய தேவை இல்லையாம், கர்ண கொடூரமாக விழுந்து கற்பழித்துக் குதறும் பொழுது ஒரு இந்திய தாயை கற்பழிக்கின்றோம் என்கின்ற சிந்தனை அவனுக்கு வர வேண்டிய தேவை இல்லையாம், அவர்களால் குதறப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாய் கிடக்கக் கூடியவர்கள் '' நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் '' இவ்வாறு சீரழித்து விட்டார்கள் என்கின்ற வேதனையை வெளிப்படுத்தும் போது மட்டும் இந்தியன் என்று கூற வேண்டுமாம் ? இந்தளவுக்கு மூளையை கழட்டி சங்பரிவார சோப்பில் இட்டுக் கழுவி திரும்ப மாட்டி விட்டு உயர் பதவியில் அமர்த்துவார்கள் அதன் பிறகு அவர் ஒரு பரூக் மரைக்காயராகவோ, அபுல்கலாமாகவோ, பெயரளவில் இருந்து கொள்வார்கள், பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கக்கூடிய இவர்களும் எமக்கு அத்வானி, வாஜ்பேயி போன்றவர்களுக்கு சமமானவர்களேயாவார்கள்.

மேற்கூறப்பட்ட உதாரணகர்த்தாக்களை உயர் பதவிகளில் அமரச்செய்தது அவர்கள் இட்ட பிச்சையாகும். அதனால் அவர்களுக்கு அவர்கள் நன்றி கடன் பட்டவர்களாகி விடுகின்றனர் சத்திய மார்க்கம் கூறும் உயர்ந்த சகோதரத்துவத்தையும், இன உணர்வையும் விட்டு விலகி அல்லாஹ்வையும் மறந்து விடுகின்றனர்.

ஒரு முஸ்லிம்களுக்கு மேல்படி உயர் பதவிகள் விகிதாச்சார அடிப்படையில் கிடைக்குமானால் அதுவும் போராடி கிடைக்குமானால் இது எனது 'ஹக்' ( உரிமை ) என்ற நிலையில் படைத்தவனுக்கு மட்டும் நன்றிக்கடன் செலுத்துவார்கள் சகோதர முஸ்லிமுக்கு உதவுவார்கள். எவருக்கும் அடிவருடிகளாக மாற மாட்டார்கள் ஓரளவாவது இன உணர்வு வெளிப்படும்.

இதனால் தான் குறைந்த பட்ச வாரிய பதவிகளைக் கூட எவருடைய தயவாலும் எந்நிலையிலும் அடைந்து கொள்வதில்லை என்கின்ற உயர்ந்த லட்சியத்தை தாங்கி நிற்கின்றது தவ்ஹீத் ஜமாத். ஆளும் பாஷிச வர்க்கத்தினரால் சிறுபான்மை அமைப்பின் முக்கிய பொறுப்பு தாரிகளுக்கு வழங்கப்படும் எந்தப்பதவியும் அவர்களுடைய குரல்வளைகளுக்கு இடும் விலங்குகளாகும்.

அதனால் உயர் பதவிகளுக்கு ஆளும் பாஷிச வர்க்கத்தினரால் மூளை சலவை செய்யப்பட்ட ஒருசில முஸ்லிம்கள் என்றில்லாமால் பலதரப்பட்ட முஸ்லீம்களும் விகிதாச்சாரப்படி தங்களுடைய இடஒதுக்கீட்டை அடைந்து உயர் பதவிகளை நிறப்பினால் மதவெறி தீ முற்றிலும் அனைக்கப்பட்டு விடும்.

ஒரு மீரட், ஒரு பாகல்பூர், ஒரு குஜராத், ஒரு கோவை உருவாகாது அதனால் ஜூலை 4 சிறை நிரப்பும் போராட்டத்தை வலுப்பெறச் செய்யுங்கள் இது தவ்ஹீத் ஜமாத்தினரால் நடத்தப்படும் போராட்டம் என்றாலும் எல்லோரும் பயன் பெறக் கூடிய தொலை நோக்கு சிந்தனை திட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம் சகோதர முஸ்லிமுக்கு உதவிடுவதற்கு புறப்படுங்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: 'ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான், அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான். ' (முஸ்லிம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அழைப்புப் பணிpயில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

0 Comments:

Post a Comment

<< Home