|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, February 05, 2008

இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீச்சு..

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி குண்டு வீச்சு தொடர்பாக ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமார் பாண்டியன் குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியும் அக்குடும்பத்துக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.

குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Thanks..Thatstamil

0 Comments:

Post a Comment

<< Home