|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, July 19, 2007

இராமநாதபுரம் மாவட்டம் இருமேனியில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு!

Bismillah...




15.07.2007 ஞயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணிக்கு இறைவனது மாபெரும் கருணையைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் இருமேனியில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள நம் கிளைகளில் இருந்து அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதற்கு சகோ. மாலிக் (கிளைத்தலைவர்) அவர்கள் தலைமை வகிக்க, வளைகுடா ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹீம் அவர்கள் நன்மையை ஏவி திமையைத் தடுப்போம் என்ற தலைப்பிலும் சகோ. தொண்டியப்பா என்ற அபுபக்கர் (மாநிலச் பொருலாளர்) இணைவைத்தல் என்ற தலைப்பிலும் சகோ. எஸ்.எம்.பாக்கர் (மாநிலப் பொதுச்செயலாளர்) அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் ஊர் ஜமாஅத்தினருக்கு எதிரானவர்களா? என்ற தலைப்பிலும் மாநிலத்தலைவர் சகோ. பி. ஜெ. அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்.

இதுவரை இராமநாதபுரம் மாவட்டம் கண்டிராத அளவிற்கு மக்கள் கூட்டம் வந்து பயனடைந்தது. இதன் ஏற்பாடுகளை இருமேனி கிளை நிர்வாகிகளும் வளைகுடா ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹீம் அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home